குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, April 04, 2019

என்னைப்பற்றி ஒரு அறிமுகம்

பலபேர், ஏன் நான் வசிக்கும் ஊரில் கூட நான் Facebook இல் எழுதுவதைப் பார்த்துவிட்டு ஏதோ ஆசிரமம் வைத்து நடத்தும் சாமியார் என்று எண்ணி உரையாடியிருக்கிறார்கள்!

ஒரு முறை தம்பி ஒருவர் நான் உலகத்தை துறந்து இமயமலை சென்றுவிட்டதாக எண்ணிக் கொண்டிருந்ததாக கூறியிருந்தார்!    

ஆன்மீகம் எனது அகத்தேடல் மட்டுமே, அதை நிறுவனமயமாக பின்பற்றுவதில் உடன்பாடு இல்லாதவன்! ஒவ்வொருவரும் தனிப்பட தமது அகத்தை மேம்படுத்தும் யோகசாதனையை அடிப்படையாக கொண்ட ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ளவன். இதுவே முற்காலத்தில் ரிஷிகளும் சித்தர்களும் பின்பற்றியது! தந்தை வழியிலும், சிறுவயதில் குரு என்னைப் பிடித்துக் கொண்ட சந்தர்ப்ப வசத்தால் இது எனது வாழ்வின் மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது. இதனால் இன்று பலர் பயன் பெறுகிறார்கள் என்ற காரணத்தால் இந்த role இனை மகிழ்வுடன் சுமந்து கொண்டிருக்கிறேன் என்பது தான் உண்மை. 

எனக்கு மிகப் பிடித்த விஷயத்தை எழுதுகிறேன் அவ்வளவு தான்! பல நேரங்களின் எழுத வைக்கப்படுகிறேன் என்று தான் சொல்ல வேண்டும். நான் பின்பற்றுவதை, அறிந்ததை மற்றவர்களுக்கு பயன்படும்படி சொல்லிக் கொடுக்கிறேன். அதுவும் எனது குரு எனக்கு செய்யச் சொன்னதை கடமையாக செய்வதால், 

என்னைப் பற்றி எவராவது அறிமுகப்படுத்தச் சொல்லிக் கேட்டால் எனக்கு என்ன சொல்வது என்று பொதுவாகத் தெரிவதில்லை! அடிப்படையில் நாம் யார் என்பதைத் தானே தேடிக் கொண்டு இருக்கிறோம். 

பொதுவாக கீழ்வரும் tagline இற்குள் என்னை அடக்கலாம். 

சூழலியலாளன்

விவசாய தொழில் முனைவோன்

இயற்கை விவசாய ஆர்வலன்

நிர்வாகி, இயக்குனர்

ஆலோசகன்

சித்த ஆயுர்வேத வைத்தியன்

யோக சாதகன்

உபாசகன் 

தத்துவம் கற்கும் மாணவன்

சமூகத்தின் இயக்கவியலை கற்க முனைபவன்

ஆசிரியன்

வாசிப்பாளன் 

எழுத்தாளன்

இப்படி பலதை வைத்துக் கொண்டு எதைச் சொல்லுவது என்ற குழப்பத்தில் சில கணங்கள் ஓடிவிடும். 

அடிப்படையில் நான் ஒரு சூழலியலாளன்! என்னை ஒரு வியாபார நிறுவன நிர்வாகியாக்கியதும் சந்தர்ப்ப வசத்தால், கடந்த ஐந்து வருடங்களில் ஒரு பல்தேசிய விவசாய நிறுவனத்தில் பொறுப்பு வாய்ந்த உயர்பதவிவகித்த அனுபவம் விவசாயத்தில் ஈடுபாடு உள்ளவன் ஆக்கியுள்ளது. 

கடந்த வருடம் வரை இலங்கையின் மிகப் பெரிய விவசாய ஏற்றுமதி நிறுவனத்தில் துணை இயக்குனராக பணிப் புரிந்துவிட்டு இப்போது நண்பர் ஒருவருடன் சொந்த தொழில் ஆரம்பித்துள்ளேன்!

தற்போதைய ஆர்வம் இயற்கை வேளாண்மை - Natural Organic Agriculture!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...