இன்று பல தமிழ் இளைஞர்கள் தமது கலாச்சாரத்தை, பண்பாட்டை இகழ்ந்து பேசுவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம் அவர்கள் முறையாக அணியிலக்கணம் கற்காதது தான் என்பதை நாம் அறிந்தோமா!
அணி என்பது ஒரு விஷயத்தை, சொல்லை அழகுபடுத்த பயன்படுத்தும் சொற்றொடர்கள்.
தண்டியலங்காரம் 35 அணிகளைப் பற்றிக் கூறுகிறது. இந்த அணிகள் சேர்க்கப்படுவது மனதிற்கு இன்ப, ஹாஸ்ய உணர்ச்சிகளைக் கொடுப்பதற்காக.
ஏனெனில் எமது முன்னோர்கள் அக அழகினையும் அக இன்பத்தினையுமே வாழ்வியலாக கொண்டிருந்தனர்! தற்போதைய மேற்கத்தேய வாழ்வியலான புறத்தில் இன்பம் தேடும் பாங்கு அவர்களுக்கு இருக்கவில்லை!
திரிபுவனச் சக்கரவர்த்தி என்றால் மூன்று உலகத்திற்கும் அரசன், உண்மையில் மூன்று உலகத்திற்கும் அரசன் இல்லை என்றாலும் மன்னன் மனம் மகிழ, அதனால் தனக்கு நன்மை உண்டாக பாடப்பட்ட உயர்வு நவிற்சி அணி இது!
இப்படி அணிகள் சேர்த்து கோர்க்கப்பட்டவை தான் எமது பண்டைய இலக்கியங்கள், புராணங்கள், இதில் உண்மை எது, அழகுபடுத்த சேர்க்கப்பட்ட அலங்காரம் எது என்பதை அறியக்கூடிய பக்குவம் தற்காலத்தைய தமிழர்களுக்கு குறைந்து விட்டதால் இதை நிருபிக்க முடியுமா? இது சரியா என்ற ஒரு வித stereo type வாதங்களை முன்வைக்கிறார்கள்.
ஆகவே இலக்கியம், பண்பாடு பற்றிப்புரிதல் வேண்டுபவர்கள் எவராயினும் அணியிலக்கணம் பயிலல் அவசியம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.