குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, April 01, 2019

குரு - காலம் - ஞானம்

குரு நாதர் உபதேசத்த படி....

ஸ்ரீ வித்யா நவாவரண பூஜை தொடங்கும்போது முதலாவது படி மந்திர ப்ரவேசம,

இதில் மூன்று தேவதைகள் வணங்கப்படும்.

1) பத்ரகாலி

2) பைரவர்

3) லம்போதரர்

இவர்கள் மூவரும் த்வார தேவதைகள் என்பப்படுவர்.

இதன் தத்துவார்த்தம் ஒருவனுக்கு மங்களமான காலமும், குருவின் அருளும் இருந்தால்தான் அவன் உயர் ஞானத்தைப் பெற துவாரமாகிய மூலாதாரத்தினுள் புக முடியும்.

சிலருக்கும் காலம் வாய்க்கும், ஞானம் பெறவேண்டும் என்ற தாகத்தில் அலைவார்கள் குரு கிடைக்க மாட்டார்.

சிலருக்கு குரு பக்கத்தில் இருந்து சொல்லிக்கொடுக்க வாய்ப்பு எல்லாம் இருக்கும், அவர்கள் ஏதாவது காரணம் சொல்லி விலகிச் சென்று கொண்டே இருப்பார்கள்.

ஆக குருவும் காலமும் ஒன்றாக வாய்த்தால் மட்டுமே ஒருவன் உயர் ஞானத்திற்குள் புகமுடியும் என்பதே மந்திர ப்ரவேசம் என்பதன் அர்த்தம்.

இதை ஆழ்மனத்திற்கு உணர்த்த, அதற்குரிய பிரபஞ்ச மகாசக்தியை எம்மில் விழிப்பிக்க த்வார பூஜை செய்யப்படுகிறது.

ஞானம் மூலாதாரத்தில் லம் என்ற பிருத்வி ரூபத்தில் மறைந்திருக்கிறது. அங்கு தொடங்கி ஒன்பது திரைகளையும் ( நவ ஆவரணங்களையும்) விலக்கினால் தேவியின் பூரண ஸ்வரூபம் விளங்கும் என்பது நவாவரண பூஜையின் விளக்கம்.

முதல் நிபந்தனை காலமும் குருவும் ஒன்றாக அமையவேண்டும் என்பது.

 பின்னர் மூலத்தில் வீற்றிருக்கும் கணபதியின் அருள், 

லம் மூலாதாரத்தின் பீஜம், போதம் அறிவு, மூலாதாரத்திலிருந்து அறிவினை விழிப்படையச்செய்து அம்பிகையை அடைவிப்பவன் லம்போதரன், ஆக ஞானமாகிய த்வாரத்தில் நுழைய காலம், குரு, மூலாதாரத்து கணபதி ஆகிய மூவரும் அவசியம்.

த்வார பூஜை சொல்லும் இரகசியம் காலத்தையும், குருவையும், மூலத்தையும் (மூலாதாரத்து வீற்றிருக்கும் கணபதியையும்) சரியாக ஒருபுள்ளியில் பெறுபவர் அம்பிகையின் ஞானமாகிய நவாவரணத்தில் புக முடியும் என்பது!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...