குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, April 07, 2019

வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்லமாட்டான்

விளம்பரங்களும், உணர்ச்சி வியாபார அரசியல்வாதிகளும் செயற்படுவதற்கு மக்களது சிந்தனைத் திறன் குறைவாக வேண்டிய தேவை இருக்கிறது. 
உதாரணமாக வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்று மக்களை நம்பவைத்து பின்னர் வெள்ளையாய் இருப்பவனை வைத்தே பொய் சொல்லி ஏமாற்றும் அரசியல். 
இன்று சிலர் அறிவியல் பேசுகிறோம் என்பவர்களும், நாத்திகவாதிகளும் பழைய சம்பிரதாயங்களை, நூற்களை, கடவுளரை கேலி பேசுவதும், நக்கலடிப்பதும் தம்மை உயர்ந்த சிந்தனாவாதிகளாக காட்டும் ஒரு தகுதியாக நினைக்கிறார்கள். 
இது மனதில் வழுவுள்ள, காழ்ப்புணர்ச்சி கொண்ட விசிலடிக்கும் கூட்டத்திற்கு பொழுது போக்க உதவும்.
உண்மையில் நாம் சமூகத்திற்கு நன்மையாக எதையாவது செய்ய வேண்டுமானால் நாம் கற்காத, அறியாத, ஆராயாத ஒன்றைப் பற்றி கருத்துக் கூறுவதை தவிர்க்க வேண்டும். 
நாம் கிருஷ்ணரைப் பற்றி பேசுகிறோம் என்றால், எமது மனவக்கிரத்தை கிருஷ்ணனில் சாடிப் பேசுகிறோமா, அல்லது பாகவதத்தை முழுமையாக படித்திருக்கிறோமா? அதில் சொல்லப்பட்ட நிலைக்குரிய சமூகப் பண்பாடு என்ன? என்பதை ஆராய்ந்து பேசுகிறோமா என்பது முக்கியமானது. 
எமது கருத்து என்பது எமது மனதின் நிலை, ஆகவே எமது கருத்து உண்மை அல்ல என்ற ஞானம் இருக்க வேண்டும். எவராவது ஒருவரை அறிஞர் என்று ஏற்றுக் கொண்டு விட்டு அவர் கூறுவது எல்லாம் சரி, வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்று நம்பும் மந்தைக் கூட்ட மன நிலையில் இருந்து வெளிவந்து எனது சுய அனுபவத்தில் கற்று, அறிந்த பின்னர் தான் முடிவுக்கு வருவேன் என்ற மன நிலை உள்ள சமூகம் உருவாகும் வரை இப்படியான மந்தை மேய்ப்பான் போலித் தலைவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். 
ஆகவே சமூகத்தை சிந்திக்கும் சமூகம் ஆக்குவது தான் நாம் எல்லோரும் செய்ய வேண்டிய பணி!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...