குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, April 03, 2019

வட இலங்கையில் பௌத்த மாநாடும் இன நல்லிணக்கமும்

அண்மையில் வடமாகாண ஆளுனர் தலைமையில் பௌத்த மாநாடு நடைபெற்றது. ஆளுனர் வால் பிடிக்கிறார், சிங்களவர்களுக்கு இடம் கொடுக்கிறார் என்றெல்லாம் வழமையான கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். 

ஆளுனரின் இந்த முன்னெடுப்பு வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் தமிழ் மக்களுக்கு இதன் பயன் என்பதை தெளிவுபடுத்தலில், தொடர்பாடலில் தெளிவு இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.

எமது தமிழ் மக்கள் எப்போதும் பிரிந்து தனியாக இருப்பதையே பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் கருதுகிறார்கள். மற்றவர்களுடன் கலந்தால் நாம் அடிமைப்பட்டு விடுவோம் என்ற பயம் எப்போதும் இருக்கிறது. இது ஒருவித பலவீனம்! இந்த பலவீனத்தை, பயத்தை மறைக்க மற்றவன் எம்மை அழிக்கிறான் என்று பயந்து புலம்பி எவ்வளவிற்கு தூற்ற முடியுமோ அவ்வளவு தூற்றுகிறோம்.

இயற்கையின் விதி ஒன்றுடன் ஒன்று இயைந்து இடைத் தாக்கமடைந்து வலியது பிழைக்க எளியது அழிய, மீண்டும் எளியது வலியதாக, வலியது எளியதாகி ஒரு சக்கரமாக மாறிக் கொண்டு இருக்கும். எதுவும் நிரந்தரமாக வலியதாகவோ எளியதாகவோ இருந்ததில்லை. சரித்திரம் படித்தவர்களுக்கு இது புரியும். 

இந்த பௌத்த மாநாடு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, ஆனால் பௌத்தம் என்பதை சிங்கள பௌத்தம் என்று வரையறுக்காமல் பௌத்தம் உலக மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய தர்மம் என்றும், தமிழ் பௌத்தர்களும் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்ற நிலையில் பார்க்கப்பட வேண்டும். 

பௌத்தம் அடிப்படையில் ஒரு தர்மம், பாலியில் தம்மம், அது போல் இந்துமதம் என்று சொல்லப்படுவது ஒரு தர்மம், சனாதன தர்மம்! இரண்டும் தர்மம் என்ற அடிப்படையில் இது இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டில் பெரும் பங்களிப்பினைச் செய்யும். இரண்டுமே எவரையும் வலிந்து மதம் மாற்றியது இல்லை! அவரவர் அகப் பக்குவத்திற்கு தக்க பயன்பெறும் முறையைத் தான் சொல்லித்தருகின்றது. 

இந்த நிலையில் இந்து விவகார அமைச்சர் Mano Ganesan எடுத்திருக்கும் இந்து பௌத்த மாநாடு என்பது சரியான நோக்கத்துடன் இருக்கிறது என்று சொல்லலாம்! அவரது உரையில் "இந்து-பெளத்த ஒற்றுமையை உறுதிபடுத்தவே மாநாட்டை நடத்த வேண்டும். அத்தோடு இந்த மாநாடு ஏனைய மதத்தவருக்கு அச்சுறுத்தலாக இருக்கவும் கூடாது " என்ற எண்ணம் மிகச்சரியாகவும் தேசிய ஒருமைப்பாட்டை நோக்கியதாகவும் இருக்கிறது. 

பௌத்த தம்மத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் உள்ள அடிப்படையான "தர்மம்" என்ற ஒற்றுமையை தமிழ் சிங்கள இன நல்லிணக்கத்திற்கு உபயோகித்தால் ஒற்றுமையான இலங்கையை நோக்கி நாம் பயணிக்கலாம்! 

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லிணக்கத்தை கட்டமைப்பதற்கான வாய்ப்பினை, காலம் ஆளுனர் சுரேன் ராகவனுக்கும் அமைச்சர் மனோகணேசனுக்கும் வழங்கியுள்ளது! எதிர்மறை பார்வைகள் நிறைந்த சமூக அரசியலில் யார் மக்களின் மனதை வெல்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...