குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, April 07, 2019

கிருஷ்ணனின் சூழலியல் தத்துவம்

கிருஷ்ணன் மனித குலத்தில் முதல் சூழலியல் விவசாய விஞ்ஞானி!

கிருஷ்ணன் மனித குலத்தின் உணர்வை உயர்த்தியவன். கிருஷ்ணனிற்கு முன்னர் மனித குலம் தெய்வமனமாகிய இந்திரனுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்துக் கொண்டிருந்தது. இதன் அர்த்தம் இயற்கையை வெல்ல முடியாமல் இயற்கைக்கு அடிமைப்பட்டிருந்தது. மழை வெள்ளம், வரட்சி இவற்றை சமாளிக்கும் அறிவாற்றல் இல்லாத மனித சமூகம். கிருஷ்ணனே மனிதன் தெய்வ மனத்தையும் ஆளமுடியும் என்று மனிதனுக்கு புகட்டியவன். 

கிருஷ்ணன் இயற்கை விவசாயத்தின் முன்னோடி! கோபாலன், கோ என்பது பசு! பசுவும் மண்ணும் நுண்ணுயிரும் ஒன்றை ஒன்று போசிக்கும் ஒன்றிய வாழிகள்!

மண்ணில் வாழும் மண்ணை வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் பசு புல்லை உண்ணும் போது வயிற்றினுள் சென்று அதன் போலி இரைப்பையில் வளர்ந்து சாணத்துடன் வெளிவருகிறது. பசுவின் சாணமும், கோமியமும் மண்ணில் உள்ள நுண்ணங்கிகளை வளர்க்கும் நல்ல ஊடகம். இரண்டுடன் காட்டில் விழும் பழங்களின் அழுகல் மண்புழுவிற்கு நல்ல விருந்து. மண்புழு மண்ணை உழ, நுண்ணுயிரி மண்ணில் உள்ள கனிமத்தை தாவரம் உறிஞ்சத்தக்கதாக உடைக்க, மண் வளமாக, காடு வளர, விவசாயம் செழிக்கும். 

மண்ணின் உயிர் என்பது தற்போதைய விவசாயக் கல்லூரிகள் சொல்லித் தரும் நைதரசன், பொசுபரஸ், பொட்டாஸியத்தின் (NKP) அளவு அல்ல. எவ்வளவு மண்புழுவும் நுண்ணுயிரிகளும் மண்ணில் இருக்கிறது என்பதே மண்ணின் உயிர்த் தன்மை! 

இப்படி மனித குலம் பசுவை ஆதரித்தால் விவசாயம் ஓங்கும். ஆகவே பசுவை ஆதரிக்க வேண்டும் என பசுவையே தனக்குப் பிரியமாக்கிச் செய்தி சொன்னவன் கிருஷ்ணன். 

இயற்கையின் நியதி மண்ணில் வித்து ஊன்றி, வேர் படர வைத்து, நீர் ஈர்த்து, மரமாகி ஆகாயத்தில் பழமாக நிலைக் கொண்டு கனிந்த கனி வித்தாகி மீண்டும் மண்ணிற்கு வருகிறது. 

இதைத் தான் இன்று Sustainability என்று எல்லா நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கில் பணங்கறந்து பாடம் எடுக்கிறார்கள். 

ஒவ்வொருவனும் தான் வளர்ந்த மண்ணிற்கு உரமாக வேண்டும். இப்படிச் செய்தால் உலகம் வளம் பெறும்! வளங்கள் பெருகும்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...