குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, April 08, 2013

சித்தர்களின் ஸ்ரீ வித்தையும் ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமமும்


சித்தர்களின் நூற்களை படிப்பவர்கள் வாலை, திரிபுவனை, நாற்பத்தி முக்கோண சக்கரம் என்றெல்லாம் இருக்க காண்பர். இவையெல்லாம் சித்தர்களின் ஸ்ரீ வித்தை பரிபாஷைகள். அகத்தியர் முதற்கொண்டு அனைத்து சித்தர்களுமே ஸ்ரீ சக்கரத்தினை உபாசித்த ஸ்ரீ வித்தைக்காரர்கள்தான். திருமூலரின் திருமந்திரத்தில் ஸ்ரீ வித்தை மூல மந்திரங்களினை பரிபாஷையில் விளக்கி இருக்க காணலாம்.  சித்தர் நூற்களில் காணப்படும் ஸ்ரீ வித்தை தொடர்பான  விடயங்களை திரட்டி தனிப்பதிவாக இன்னொரு சமயம் பதிவிடுவோம்.   இப்படிப்பட்ட ஸ்ரீ வித்தைக்கு திறவு கோலாக இருப்பது  ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம், இது சமஸ்க்ருதத்தில் இருப்பதால் தமிழ் மட்டும் தெரிந்த அன்பர்கள் படிப்பதற்கு கஷ்டமாக இருந்து வந்துள்ளது எனினும் இன்று அவை ஒலிவடிவில் கிடைப்பதால்  அவற்றை கேட்க முடியுமான நிலையில் உள்ளது. 

இந்த லலிதா சஹஸ்ர நாமத்திற்கு தற்காலத்தில் பலரும் உரை எழுதியுள்ளார்கள். அத்தகைய உரைகளில் மிக எளிமையான அதே நேரம் கருத்துச் செறிவான உரை ஒன்றினை எமது நண்பர் அருட்திரு . ரவி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருந்தார். நாமும் அவற்றை ஆவலுடன் படித்திருக்கிறோம். நேற்றைய தினம் எமது நித்திய பூஜையின் ஸ்ரீ சக்கரத்தின் ஏழாவது  ஆவரணத்தினை துதிக்கும் போது மனதில் ஸ்ரீ வித்தை பற்றி எழுதலாமே என்று எண்ணம் தோன்றியது, பல காலத்திற்க்கு முன்னரே எமது குரு  அனுமதி அளித்திருந்தாலும் எழுதும் எண்ணம் வரவில்லை. எதைப்பற்றி எழுதலாம் என்று எண்ணும் போது ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம் பற்றி எழுது என தேவி மனதில் தோற்றுவித்தாள். லலிதா சகஸ்ரநாமம் பற்றி என்ன எழுதுவது என்று எண்ணிக்கொண்டிருக்க நண்பர் ரவி அவர்கள் ஆங்கிலத்தில் அருமையான உரையினை எழுதியிருக்கிறாரே அதனை மொழிபெயர்த்தால் என்ன என்று எண்ணிக்கொண்டு அவருக்கு எனது எண்ணத்தினை மின்னஞ்சலில் அனுப்பினேன். அடுத்த சில நிமிடங்களில் அவரது அனுமதியும் பதிலும் வந்தது, ஆக அவரது அனுமதியுடன் ஆங்கிலத்தில் அவர் எழுதிய ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம் விளக்க உரையினை தழுவி தமிழில் இனி தொடராக எமது பதிவுகளில் வர உள்ளது. 

சமஸ்க்ருதம் தெரியவில்லை, பாராயணம் செய்ய முடியாது என்று கருதுபவர்கள் கூட இவற்றை மனது ஊன்றி படிப்பார்களே ஆனால் அவர்களது சித்தத்தில் இந்த தெய்வ சம்ஸ்காரங்கள் பதிந்து உயர் ஞானத்திற்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயம் இல்லை. 

பொதுவாக ஸ்ரீ வித்தை பற்றி கேட்க உபாசிக்க ஒருவருடைய கடைசி பிறவியில் முக்தி நெருங்கும் போது கிட்டும் பாக்கியம் என்பது ஐதீகம், அந்தப்பாக்கியம் எமது வாசகர்கள் அனைவருக்கும் கிட்ட பெருங்கருணை உள்ள பேரரசி ஸ்ரீ லலிதையை பணிந்து இந்த தெய்வீக சமுத்திரத்தினுள் புகுவோம். 

சித்திரை அமாவாசை நாளான 10ம்  திகதி தொடங்கி பதிவுகள் வரும். 

ஸ்ரீ மாத்ரே நமஹ 

ஸ்ரீ குரவே நமஹ 
 

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...