குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, April 28, 2013

உண்மை ஞானத் திறவுகோல் - உண்மையான ஞானம் பெற வேடங்கள் அவசியமா?

உண்மையான ஞானம் பெற வேடங்கள் அவசியமா? என்பது பற்றி விபரிக்கிறது. 

சமய நெறியின் மயக்கத்திலே மயங்கி கிடக்கும் மக்களில் எப்படியோ தவறான பல நம்பிக்கைகள் வேரூன்றியிருக்கின்றன. அவைகளில் ஒன்றை மட்டும் ஆராய்வோம். "இதோ முருகன், இதோ கிருஷ்ணன் என்று கடவுளை பகுத்து கூறுவது போல "இவர் மகான், இவர் யோகி, இவர் சாது, அவர் சந்நியாசி" என பகுத்தறியும் வலியினை கண்டுபிடித்திருக்கிறார்கள் மதவாதிகள். உண்மையை உணரும் வரை நானும் இப்படித்தான் பெரியோர்களை கண்டு வந்தேன். 

சாது, சந்நியாசி, பக்தன், யோகி என்பவர்கள் உடையாலோ, உண்ணல் முதலிய வாழ்க்கை முறைகளாலோ, மற்றவர்களை விட மாறுபட்டு இருப்பவர்கள் அல்ல. பாரத நாட்டில் வாழ்ந்த எந்த சித்தரோ, யோகிகளோ மக்களை விட வேறு பட்டு இருக்கவில்லை. சமய நெறி என்ற மதங்கள் தோன்றுவதற்கு முன்னர் இவ்வுலகில் வாழ்ந்த பக்தர்களும், ஆன்ம முன்னேற்றமடைந்தவர்களும் சாதாரண மக்களை விட வேற்றுமை அற்றுத்தான் வாழ்ந்தார்கள். சமய நெறி ஒரு கட்டமைப்பாக வந்தபின்னர்தான் தமக்குரிய அடையாளங்களை ஏற்படுத்திக்கொண்டனர். அதைதொடர்ந்து எண்ணற்ற வேஷங்கள் வெளியாயின. 

பக்தி, யோகம், தவம் எனும் சாதனங்கள் உடலில் உள்ளுறையும் ஆன்மாவை கவர்ந்திழுக்கும் அறியாமை அழுக்கை அகற்றவும்  அணுவுக்கு அணுவான ஆண்டவனின் அருளைப்பெறவும்தான் செய்யப்படுகின்றன. அறிவை அறியாமையில் இருத்தி செயற்படுவது உடல், உடல் அநித்தியமானது, சாதனைகள் நித்தியத்தினை நாடி செய்யப்படுபவை. யோகம் முதலான சாதனைகள் உடலால் செய்யப்படுபவை அல்ல. அவை உள்ளத்தால் செய்யப்படுபவை. உடலை மறந்து உணர்வினை உள்முகப்படுத்தி செய்யப்படுபவை. உடலை மறந்து செய்யும் ஒரு சாதனை செய்யும் ஒரு சாதகனின் நினைவு உடலை அலங்காரப்படுத்துவதில் எப்படி ஈடுபட முடியும்?

இதற்கு இன்றைய நிலையில்  யோகம் பழக்குகின்றேன் என்று கூறுபவர்களும் மதவாதிகள் போன்றே செயற்படுகின்றனர். மேலும் ஆசனங்களை மட்டும் தெரிந்து கொண்டு தம்மை யோகி என அழைத்துக் கொள்பவர் பலர். 

உடலில் சாதுத்தன்மை இருக்க முடியாது. உள்ளத்தில் தான் சாதுதன்மை இருக்க முடியும். உடலில் பக்தி வராது உள்ளத்தில் தான் பக்தி வர வேண்டும். இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக உடல் இருப்பதால் உடலினை ஆரோக்கியமாக வைத்திருப்பதுதான் யோகத்தின் ஒரு நோக்கமே அன்றி இதனால் உள்ளத்தில் பற்றி உள்ள மாயை இம்மியளவும் அகன்று விடாது. 

ஒருவன் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து பத்து விரல்களிலும் பெரிய பொன் மோதிரங்களை அணிந்து எல்லோர் முன்னிலையிலும் திரிகின்றான் என்றால் என்ன அர்த்தம்? தனது செல்வா செருக்கை எல்லோருக்கும் விளம்பரப்படுத்துகிறான் என்பது தானே! காவலனின் உடை அவன் புற உலகில் செய்ய வேண்டிய தொழிலைக் காட்டுகிறது. அதுபோல் மற்றைய தொழில்களும் அதற்குரிய உடையினை கொண்டு அறியப்படுகிறது. இதுபோல் சாதுக்களும் சந்நியாசிகளும் விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டுமா? உடையினைக்கொண்டு ஒருவன் வழக்கறி ஞர் என்று கண்டு வழக்கை ஒப்படைப்பது போல் காவியுடைகளையும், பெரிய ஆசிரமமும் வைத்திருக்கும் பெரிய சாமியார்களை கண்டதும் ஆன்ம ரகசியங்களை கேட்கலாமா? அவர்கள் எல்லோரும் இறையின்பத்தினை அனுபவித்தவர்களா? இன்று இப்படி ஆடைகளையும் வேடங்களையும் கண்டு சென்று துன்பம் அனுபவித்தவர்கள் பலர் என கேள்விப்பட்தில்லையா? 

ஆகவே அன்பர்களே பக்தி, யோகம் போன்ற சாதனைகளுக்கும் உடல் வேஷங்களுக்கும் ஒரு பொருத்தமும் இல்லை என்பதை உணருங்கள். வெளி வேடத்தை கொண்டும்  ஆன்ம முன்னேற்றம் உடையவனை கண்டு பிடிக்க முயன்றால் ஏமாந்துதான் போவீர்கள். பக்தி யோகம் என்பவை உணர்வால் சய்யப்படுபவை. அதற்கு உடைகளாலோ வெறு எதனாலோ வேடங்கள் மாறுதல்கள் செய்யத்தேவையில்லை. இப்படியான மக்களை ஏமாற்றும் பலர் உள்ளார்கள். 

உள்ளத்துறவு வாழ்க்கை 
அக்காலத்தில் வாந்த மகரிஷிகள் மனைவி மக்களுடன் தூய வெண்ணிற ஆடையணிந்து மக்கள் மத்தியில் மக்களோடு மக்களாகவே வந்தார்கள். இந்திரனையே சபிக்கும் ஆற்றல் இருந்தும் தம்மை வேடத்தாலோ, நடிப்பலோ உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ளவில்லை உள்ளத்தில் துறவு பூண்டு வந்தார்கள். உடையை மாற்றி உள்ளத்தில் இன்பத்துடன் வாழவில்லை. இப்படியான உயர்ந்த நிலையடைந்த சாதகர்கள் இன்றும் உலகின் பல பாகங்களிலும் தம்மை வேஷங்களால் உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்ளாமல் மக்கள் மத்தியில் தாமரை இலை மேல் தண்ணீர் போல் வாழ்ந்து வரத்தான் செய்கிறார்கள். இவர்களை குப்த யோகிகள் என்று சொல்லலாம்.  

ஆன்ம  தாகம் கொண்டவர்களே, அடைய வெண்டிய பொருள் என்று ஒன்று உண்டு, அது ஆண்டவனின் திருவடி! அதை அடையவேண்டும் என்ற உண்மை ஆர்வம் உங்கள் உள்ளத்தில் உண்டானால் அதை அடைய வழி காட்டும். எதோ ஒரு வகையில் அத்தகைய குப்த யோகிகளது தொடர்பு உங்களுக்கு நிச்சயம் கிட்டும்!  தட்டுங்கள்! ஞானக்கதவு திறக்கப்படும், கேளுங்கள் உண்மை ஞான திறவுகோல் உங்களுக்கு கொடுக்கப்படும்!

-- குருதேவர் ஸ்ரீ கண்ணைய யோகி அருளியபடி ---


1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...