குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 26, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 16: நாமங்கள் 02 - 03

ஸ்ரீ மஹாரஜ்ஞ்யை (02)  
ஒப்புயர்வற்ற லோகரக்ஷகி/பேரரசி

இந்த நாமமும் ஸ்ரீ என்ற அடைமொழியுடன் தோங்குகிறது, அதற்கான விளக்கம் முதல் நாமத்தில் தரப்பட்டுள்ளது. மஹாரஜ்ஞ்யை என்றால் அரசிக்கு அரசி, பேரரசி என்று பொருள். 

இந்த சஹஸ்ர நாமத்தில் உள்ள அனேக நாமங்கள் சக்திவாய்ந்த பீஜாட்சரங்களை கொண்டுள்ளது. அந்த பீஜாட்சரங்களை நாமங்களில் இருந்து தனியாக்க இயலாது. பீஜம் அல்லது பீஜாட்சரம் என்பது ஒரு சம்ஸ்க்ருத எழுத்தையோ அல்லது பல எழுத்துக்களின் கூட்டையோ கொண்ட ஒலிகளாக இருக்கும். ஒவ்வொரு பீஜாட்சரமும் மிகவும் இரகசியமானதாக கருதப்படும். இதன் அர்த்தத்தினை புரிந்து கொள்ளாமல் தொடர்ச்சியாக உச்சரிக்கும் போது கூட உச்சரிப்பவனுக்கு அந்த மந்திர சக்தி அலைகளால் பலனை வழங்கக்கூடிய சொற்கள் இவையாகும். இவற்றிற்கு தனிப்பட்ட உச்சரிப்பு விதிகள் காணப்படுகிறது. 

தேவி உபாசனையில் சோடஷி மந்திரமே அதியுயர் மந்திரமாகும். சோடஷி என்றால் பதினாறு கலைகள்* அல்லது எழுத்துக்கள் உடையது என்று பொருள். கலை என்பது சந்திரனின் தேய்வுக்கும் வளர்விற்கும் இடைப்பட்ட பதினாறு நாட்களில் சந்திரனது நிலையாகும். மற்றைய மந்திரமான பஞ்சதசி மந்திரம் பதினைந்து எழுத்துக்கள் உள்ளது. அதற்கு மேலும் ஒரு பீஜ மந்திரத்தினை சேர்க்கும் போது சோடஷி மந்திரம் உருவாகிறது. சௌந்தரிய லஹரியின் முதலாவது சுலோகம் கூறுகிறது " ஓ தாயே, உன்னுடைய மந்திரம் மூன்று கூடங்களை கொண்டுள்ளதாக உள்ளது (இந்த பஞ்சதசி மந்திரம் பற்றி அறிமுக உரையிலும், 85 - 89 நாமாக்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது), யாரொருவன சோடஷி மந்திரத்தினை விதிக்கப்பட்ட அளவு (900,000 தடவைகள்) ஜெபிக்கிறனோ அவர்களுக்கு இதற்கு மேல் பிறவி இல்லை. இந்த சோடஷியின் பதியனாறு எழுத்து பீஜ மந்திரம் இந்த நாமத்தில் மறைந்துள்ளது. இது குருமுகமாய் அறியவேண்டியது. இந்த மந்திரத்தின் முதலாவது பீஜமான ஸ்ரீம் என்பது இந்த இந்த நாமத்தின் முதல் நான்கு எழுத்துகளில் உள்ளது. இந்த பீஜம் லக்ஷ்மி பீஜம், காத்தலின் சக்தி. 

முதல் நாமம் தேவியின் படைத்தல் பண்பு பற்றி கூறுகிறது, இரண்டாவது நாமம் அவளது காத்தம் பண்பு பற்றி கூறுகிறது. தாயாக படைத்து, பேரரசியாக காத்தல் தொழிலை புரிகிறாள். 

{*கலைகள் பற்றிய மேலதிக விடயங்கள்: கலை என்பது இயற்கையின் ஒரு விஷேடமான இயக்கமாகும். இதனை பிரக்ருதி என்பார்கள். இதன் அர்த்தம் பிரக்ருதி சிவத்தின் அளவு முழுமையடைந்தது என்பதல்ல, ஆனால் சிவம் சக்தியுடன் சேரும்போது சக்தியின் தன்மை அந்தப்பொருளில் வெவ்வேறு நிலைகளில் குறித்தளவு வெளிப்படும். சிவம் என்பது எப்போது இருவகையானது ஒன்று குணங்கள் உள்ளது, மற்றையது குணங்கள் அற்றது. குணங்களற்ற சிவத்தின் வடிவே மிக உயர்ந்த வடிவமாக கருதப்படுகிறது. இது பிரக்ருதியில் இருந்து வேறானது. சிவம் குணத்துடன் வெளிப்படும் போது அவை கலைகள் எனப்படுகின்றது. 

பதினாறு கலைகள் என்பது பதினாறு உயிரெழுத்தையும் குறிக்கும், இவை முழுமையானதும், மற்றைய ஒலிகளை ஆதிக்கம் செலுத்தும் எழுத்துக்களுமாகும். ஸ்ரீ மாதாவான தெய்வீக தாயின் பெயர் இந்த கலைகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. மேலான ஒன்றை நோக்கிய ஒரு உத்வேகமே கலைகளாக வெளிப்படுகிறது. கலை என்பது ஏதாவது ஒன்றின் சிறிய பகுதி என்றும் பொருள் படும். முழுமையான ஒன்றின் சிறு பகுதி அல்லது பாகம் எனப்பொருள் படும்}

ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேஸ்வர்யை (03)  
சிறந்த சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கும் ஈஸ்வரி

லலிதாம்பிகை அரசிகளுக்கெல்லாம் அரசியானவள் சிங்கத்தில் அமர்ந்திருக்கிறாள். சிங்கம்  பார்ப்பவர் பயமுறும் கம்பீர தோற்றமும் மிருகங்களின் அரசனுமாகும். அதானை பேரரசியான லலிதை வாகனமாகவும் ஆஸனமாகவும் பயன்படுத்துகிறாள். இந்த நாமத்தின் விளக்கம் அவளது மூன்றாவது தொழிலாகிய அழித்தலினை விளக்குவதாக உள்ளது, ஸிம்ஹ என்றால் சமஸ்க்ருதத்தில் சிங்கம் என்று பொருள், இந்த வார்த்தையின் அடி ஹிம்ஸா என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். ஹிம்ஸா என்றால் அழித்தல் என்று பொருள். ஸ்ரீமத்+ஸிம்ஹ+ஆஸன+ஈஸ்வரி என்றால் ஸ்ரீமத் என்றால் அழித்தலின் சக்தியாகிய அவளிற்கு தரப்பட்ட அதியுயர் மரியாதை, ஸிம்ஹ என்றால் சிங்கம், ஆஸன என்றால் அமர்ந்திருத்தல், ஈஸ்வரி என்றால் ஆளுபவள் என்று அர்த்தம். 

முதல் மூன்று நாமங்களும் ஸ்ரீ என்ற எழுத்துடன் தொடங்குகின்றன. ஸ்ரீ  என்றால் செல்வம், வளம் என்று பொருள். ஸ்ரீ என்ற பீஜம் செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மியினை குறிக்கும். லக்ஷ்மி ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மனைவி. இந்த நாமாக்கள் மேலும் ஒரு விடயத்தினை விளக்குகின்றது, லலிதாம்பிகையினை வழிபடுபவர்கள் எல்லவித செல்வங்களையும் அடைவார்கள் என்பதே அது. 

ஜனார்ணவ எனும் புராதன நூலில் ஸிம்ஹாஸன மந்திரங்கள் என்று எட்டு மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. இவை ஸ்ரீ சக்கரத்தின் பிந்துவிற்கு நான் கு புறமும் ஜெபித்து ஒன்று பிந்துவில் ஜெபிக்கவேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்த ஸிம்ஹாஸன மந்திரத்தில் இருபத்தினான்கு தேவதைகள் வழிபடப்படுகின்றது. இந்த நாமம் லலிதாம்பிகை இந்த இருப்பத்தி நான்கு தேவிகளுக்கும் ஈஸ்வரி என்பதனையும் குறிக்கிறது. 

இந்த மூன்று நாமங்களும் லலிதாம்பிகையின் படைத்தல், காத்தம், அழித்தல் ஆகிய அதியுர்ந்த தன்மையினை குறிக்கின்றன. அழித்தல் தொழில் எனும்போது ஒருவன் செய்த பாவச்செயல்களையும் முற்றாக அழிக்கிறாள். அவள் தனது உண்மையான பக்தர்களை இறுதியில் தன்னுடன் கலக்கச் செய்கிறாள். இந்தக்கலத்தல் லயம் எனப்படுகிறது. 



*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Srishti's yoga classes

  Srishti's yoga classes start tomorrow; Today Sahasra Gayatri prayer at Gurunathar Gayatri Peedam as the promise of Agathi Maamak...