குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, April 27, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 17: நாமங்கள் 04 - 09

சிதக்னிகுண்ட-ஸம்பூதாயை (04)  
அறிவாகிய அக்னி குண்டத்திலிருந்து தோன்றிய பரப்பிரம்ம ஸ்வரூபிணீ

சித்+அக்னி+குண்ட+ஸம்பூதா. சித் என்பது நிர்குண பிரம்மனை அதாவது குணங்களற்ற பிரம்மனை குறிக்கும் (இதுவே உணர்வின் அடிப்படை). அக்னி குண்டம் என்பது நெருப்பினை உடைய யாக குண்டத்தினை குறிக்கும். ஸம்பூதா என்றால் தோன்றியவள் என்று பொருள். அக்னி குண்டம் அல்லது நெருப்பு இருளினை அகற்றுவது. இருள் என்பது அறியாமையினை குறிக்கும், அதனை அவித்யா என்பர், (வித்யா என்றால் அறிவு என்று பொருள்) இந்த நாமத்தினை நெருப்பில் இருந்து பிறந்தவள் என்று பொருள் கொள்ளக்கூடாது. அவள் அறியாமையினை அகற்றும் அதியுயர் உணர்வு சக்தி. அவள் தன்னுடைய தூய உணர்வு சக்தியால் அறியாமையினை அகற்றுகிறாள், அவள் ஒவ்வொருவர் உள்ளிருந்தும் ஒளியேற்ற மாயா சக்தியான இருளை அகற்றுகிறாள். 

இதே விளக்கம் கிருஷ்ணன் பகவத் கீதையில் (4-37) தருகிறார் " நெருப்பு விறகுகளை சாம்பல் ஆக்குவது போல், அறிவுத்தீ எல்லாக்கர்மங்களையும் அழிக்கின்றது" ஒருவன் உள்ளிருக்கும் தூய பிரம்மனைப்பற்றிய முழுமையான அறிவு அவனுடைய எல்லாக் கர்மங்களையும் (ஸர்வகர்மாணி) அழிக்கும். அவை நல்லதாயினும் தீயதாய் இருப்பினும். ஒருவன் பிறப்பினை அறுப்பதற்கு தனது கர்மாவில் எதையும் மிகுதி வைத்திருக்க கூடாது. 

தேவகார்ய-ஸமுத்யதா (05)
தேவர்களுக்கு நன்மை புரிவதில் ஊக்கமுடையவள்

அவள் தேவர்களுக்கு உதவி புரிவதற்காக தன்னை உருவாக்கிக்கொண்டாள். என்ன காரணத்திற்காக தேவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்? தேவர்கள் அசுரகளுடன் போர் புரிந்துகொண்டிருந்தனர். அவள் அந்த அசுரர்களை அழித்து தேவர்களுக்கு உதவி புரிந்தாள். தேவர்கள் என்பவர்கள் எப்போதும் தீயகாரியம் எதுவும் செய்யாதவர்கள் அதனால் தேவி அவர்களுக்கு எப்போதும் உதவி செய்பவளாக இருக்கிறாள். அவள் பிரம்மத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போது ஏன் தனியா அவதரிக்க வேண்டும். அவள் பிரம்மத்தின் பகுதி எனும் போது அவளை "ப்ரகாச" வடிவம் என்று அழைப்பர். ப்ரகாச என்றால் சுயமாக வெளிப்பட்ட அறிவு/உணர்வு சக்தி என்று பொருள், இந்த தத்துவத்தின் மூலமே மற்றைய விடயங்கள் அறியப்படுவனவாகின்றது). இந்த ப்ரகாச வடிவம் சிவம் என அழைக்கப்படுகிறது. மற்றைய பகுதி "விமர்ச" வடிவு என விளக்கப்படுகிறது. விமர்ச வடிவு என்பது சுயமாக வெளிப்பட்ட உணர்வு சக்திக்கு எதிர்மாறான உணர்வு சக்தி, அது சிவனின் விழிப்புணர்வு சக்தி, உலக செயற்பாடு நடைபெறுவதற்கு தேவையான முழுமையான அறிவும் ஆற்றலையும் தரும் ரூபம். இது சக்தி ரூபமாக அழைக்கப்படுகிறது. தேவி அதியுயர் சிவத்தின் விமர்ச சக்தி வடிவாக இருப்பினும், லலிதாம்பிகையின் வடிவிற்குள் சூட்சுமமாக ப்ரகாச வடிவம் உள்ளது என்பதனை இந்த நாமம் வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாக விளக்குகிறது. இந்த நாமம் அவளுடைய ப்ரகாச வடிவத்தின் விளக்கமாகும். 

யோக வசிஷ்டத்தில் முக்கியமான ஒரு சுலோகம் வருகிறது " எனக்கு இரு வடிவங்கள் உள்ளது, ஒன்று சாதாரணம், மற்றையது அதியுயர்ந்தது. எனது சாதாரண வடிவம் கைகளும் கால்களும் உடைய மனித வடிவம். இந்த வடிவம் அறியாமையுடைய மனித வழிபடுவதற்கு உரியது. மற்றைய வடிவம் அதியுரர் தன்மை உடையது. அது ஆதியும் அந்தமும் அற்ற உருவற்ற வடிவம். இந்த வடிவத்திற்கு எதுவித தன்மைகளோ குணங்களோ அற்ற பிரம்மம், ஆத்மன், பரமாத்மன் எனப்படுகிறது. 

இந்த நாமத்தில் அசுரர்கள் எனக்கூறப்பட்ட உவமானம் அறியாமையினை குறிப்பது. தேவர்கள் என்பது அறிவினை குறிப்பது. தேவி யார் பிரம்மத்தினை அறிவதற்கு முயற்சிக்கிறார்களோ அவர்களுக்கு உதவி புரிகிறாள். 

உத்யத்பானு-ஸஹஸ்ராபா(06) 
ஆயிரம் சூரியன் உதித்தாற் போன்ற பிரகாசமானவள்

உத்யத் - உதித்தல், பானு - சூரியன், சஹஸ்ரா - ஆயிரம் அல்லது எண்ணீக்கை அற்ற, ஆபா - ஒளி. லலிதாம்பிகையின் தோற்றம் ஒரே நேரத்தில் ஆயிரம் சூரியன் உதித்தது போன்ற பிரகாசம் உடையது. உதிக்கின்ற சூரியனின் நிறம் சிவப்பு. இந்த சகஸ்ர நாமத்தின் தியான சுலோகத்தில் தேவியின் நிறம் சிவப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது (ஸகுங்க்கும-விலேபனம்). அனேகமாக எல்லா தந்திர சாஸ்திரங்களும் புராதன புராணங்களும் அவளுடைய தோற்றத்தினை சிவந்த நிறமாகவே வர்ணிக்கின்றன. முந்தைய நாமத்தில் தேவியின் "ப்ரகாச" வடிவம் குறிப்பிடப்பட்டது. இந்த நாமத்தில் "விமர்ச" ரூபத்தினை கூறுகிறது. தேவியிற்கு மூன்று ரூபங்கள் உள்ளன. ஒன்று ப்ரகாச அல்லது சூட்சுமமான வடிவம், விமர்ச என்பது ஸ்தூலமான ரூபம், மூன்றாவது பரா என்பது அதியுயர் ரூபம். ப்ரகாச ரூபத்தினை அடைவதற்கு பல்வேறு மந்திரங்கள் உபயோகமாகின்றன, அவற்றுள் உயர்ந்தது சோடஷி மந்திரம். அவளுடைய விமர்ச ரூபம் (தியான ஸ்லோகத்தில் கூறப்படும்) ஸ்தூல வடிவம். இது ஆயிரம் வடிவங்கள் உள்ளது. அதியுயர் ரூபம் மானச பூஜையினால் மட்டும் உணரப்படக்கூடியது. சிவந்த நிறமாக உருவகிக்கப்படுவதன் காரணம் தியானிப்பதற்கு இலகுவாக இருக்கும் என்பதே ஆகும். அடுத்த நாமத்தில் இருந்து தேவியினுடைய ஸ்தூல ரூபத்தின் வர்ணணை தொடங்குகிறது. சிவப்பு நிறம் அக்கறையினையும் காட்டும், தேவி தனது பக்தர்களின் நலம் மீது அக்கறையும் தாயைபோன்ற அன்பு உடையவள் என்பதனை காட்டுகிறது. 

கிருஷ்ணன் (2-12) கூறுகின்றார் "ஆகாயத்தில் லட்சம் சூரியன் ஒன்றாக உதித்தால் போல், பிரபஞ்சத்தின் உயர்ந்த வடிவம் ஒளிக்கற்றைகளை வீசியவண்ணம் வெளிப்படும்" என்று. 

சதுர்பாஹு-ஸமன்விதா (07) 
நான்கு கைகளையுடையவள் 

லலிதாம்பிகையின் பௌதீக ரூப வர்ணணை இந்த நாமாவில் இருந்து ஆரம்பமாகிறது. தேவி நான்கு கரங்களை உடையவள். இந்த நான் கு கரங்களும் தேவியினுடைய மந்திரிகளை குறிப்பிடுவன, தேவியின் நிர்வாகத்தினை செய்வாதற்கு நியமிக்கப்பட்ட பிரதானமான நான்கு மந்திரிகளையும் குறிப்பிடுகிறது. தேவிக்கு உதவும் இந்த தேவிகளைப்பற்றி அடுத்த நாமாக்கள் குறிப்பிடுகின்றன.

ராகஸ்வரூப-பாசாட்யா (08) 
ஆசை(இச்சை) வடிவான பாசம் உடையவள்

ராகம் என்றால் விருப்பம் அல்லது ஆசை என்று பொருள். பாசம் என்பது ஒருவகையான கயிறு, இது பொருட்களை கட்டி இழுப்பதற்கு உபயோகப்படுத்தப்படுவது. தேவி இந்தக்கயிற்றினை பயன்படுத்தி பக்தர்களின் ஆசைகளை வெளிப்படுத்துகிறாள். மூன்று வித சக்திகள் காணப்படுகின்றன இச்சா, ஞானா, கிரியா சக்திகள் என்பவை அவை. இந்த நாமம் தேவியின் இச்சா சக்தியினை பற்றி கூறுகிறது. தேவி ஒருபோதும் தன்னுடைய பக்தர்களை தமது ஆசைகளுடன் அனுபவிக்காமல் அழுந்திப்போக செய்வதில்லை. தேவியின் இடது பின் கை அஸ்வாரூடா தேவியினை குறிக்கிறது. 

க்ரோதாகாராங்குசோஜ்ஜ்வலா (09) 
கோபமாகிய அங்குசம் தரித்து பிரகாசிப்பவள்

தேவி வலது மேல் கரத்தில் யானையினை அடக்கும் அங்குசத்தினை கொண்டிருக்கிறாள். க்ரோத என்றால் கோபம், வெறுப்பு என்று பொருள், அகாரா என்றால் அறிவு என்று பொருள். இந்த நாமம் சூஷ்ம உடலைப்பற்றிக் கூறுகிறது. அறிவு எப்போதும் சூஷ்ஷுமமானது. யாராவது தனது பக்தர்கள் மேல் வெறுப்பினை உருவாக்க முயன்றால் அவர்களை அங்குச சக்தி கொண்டு அடக்கி அவர்களுக்கு நல்லறிவினை கொடுப்பாள். காளியின் பீஜ மந்திரங்களில் ஒன்று "க்ரோம்", அது இந்த நாமத்தில் மறைந்து உள்ளது. காளி எல்லா தீமைகளையும் அழிப்பவள். இந்த வலது பின் கை சம்பத்கரி தேவியினை குறிக்கிறது. 




*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Srishti's yoga classes

  Srishti's yoga classes start tomorrow; Today Sahasra Gayatri prayer at Gurunathar Gayatri Peedam as the promise of Agathi Maamak...