குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, January 12, 2024

வினோத ஆசிரியன்!

 


நேற்று எனது பல்கலைக்கழக மாணவர்களின் தொழில் வழிகாட்டல் பாட நெறிக்கான இறுதி பரீட்சைக் கலந்துரையாடல்! அனைத்து மாணவர்களும் மிக உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள்! மூன்று நாட்களாக அதிகாலை 0430 இலிருந்து இரவு 1030 வரை தொடர் ச்சியான வேலைப்பளு!

இதில் அனேகர் மிக உணர்ச்சி வசப்பட்டு தமது வாழ்க்கையில் என்ன செய்யப்போகிறோம் என்ற கவலையில் இருந்த தம்மை ஒரு தெளிவான பாதையை இந்தக் கற்கை நெறி சிந்திக்க வைத்திருக்கிறது என்று மகிழ்ச்சியாகக் கூறினார்கள்.

நான் புரிந்துகொண்ட ஒரு விடயம் இளைஞர்கள், மாணவர்கள் எப்போதும் ஆர்வமும், உற்சாகத்துடன் தம்மை அன்பாகவும் பாசமாகவும் வழி நாடாத்தும் ஆசிரியரை ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஒரு நல்லாசிரியனாக இருக்க எம்மிடம் ஒழுங்கும், உத்வேகமும், அவர்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து அவர்களை inspire செய்யக்கூடிய பரந்த அறிவும் அனுபமும் அவசியம்! மாணவன் குதர்க்கமாகக் கேள்வி கேட்டாலும் எரிச்சலுறாமல் அவனை வழிக்குக் கொண்டுவந்து அவன் மனதை படிப்பில் கொழுவுவதற்குரிய மனத்திடம் இருக்க வேண்டும்.

மாணவன் தன்னை விடப் புத்திசாலியானவன், அதீத ஆற்றல் உள்ளவன் அவனுக்குள் இருக்கும் அந்த ஆற்றலைச் சரியாகப் பயன்படுத்துவதற்குரிய விதையை விதைத்து அது வளர உதவி செய்வதே ஆசிரியனுடைய பணி!

அவர்களை வசப்படுத்த தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்வதோ, எம்மீது கவர்ச்சியுற வைப்பது ஒரு ஆசிரியன் செய்யக்கூடாத வேலை! சில ஆசிரியர்கள் தம்மை மாணவர்கள் மதிக்கக் கூடிய நிலையில் வைத்திருக்காமல் மாணவர்களை பலவந்தப்படுத்தி, பயமுறுத்தி தம்மை மதிக்க வேண்டும் என்று பந்தா காட்டுபவர்களாக இருப்பதையும் நாம் காண்கிறோம்!

பல்வேறு கலாச்சார, மதப்பிண்ணனி, சமூகப்பழக்க வழக்கங்களிலிருந்து அவைவரையும் ஒற்றுமைப்படுத்தி, சகோதரத்துவத்துடன் இயங்க வைக்க வேண்டும்!

நான் மற்றவர்கள் கற்பிக்காததை கற்பிக்கும் ஒரு வினோத ஆசிரியன்! நான் ஒரு விஞ்ஞானம் முறைசாரக் கற்றவன்; ஆனால் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியன் அல்ல! நான் எனது சிறப்புமானிப் பட்டத்தில், முதுமாணிப்பட்டத்தில் இரசாயனவியல் கற்றவன் ஆனால் இரசாயனவியல் கற்பிப்பதில்லை! சூழலியல் விஞ் ஞானம் கற்றவன் ஆனால் சூழலியல் கற்பிப்பதில்லை!

நான் கற்பிப்பது உனது மனக்குழப்பம் என்ன? அதிலிருந்து எப்படி மீண்டுவருவது? வாழ்க்கையில் இலட்சியம் என்ன? உனது ஆற்றலை எதற்கு பயன்படுத்தப் போகிறார்? உனது அகப்பண்பிற்கு அமைய உனது தொழிலை வாழ்க்கையை எப்படி அமைக்கப் போகிறாய்? வெற்றிகரமான வாழ்க்கைக்கு நீ வளர்த்துக்கொள்ள வேண்டிய மனப்பண்புகள் என்ன? தினசரி ஒழுக்கம் என்ன?

நான் ஒரு வினோத ஆசிரியன்!

கற்றலும் கற்பித்தலும் ஒரு பேரின்பம்!

 



No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...