குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, January 14, 2024

பண்டிகைகள் சமூகத்தின் பொருளாதார இயங்கு - இயக்கு விசைகள்!

 




பொங்கல் என்றால் கரும்பு அவசியம்!

கொழும்பில் இரண்டு கணுக்கள் உடைய ஒரு துண்டு கரும்பு பெரும் விலை என்பது நண்பர் ஒருவரின் புலம்பல்!

ஏன் இப்படிப் புலம்பவேண்டும் நாம் சமயம் கலாச்சாரம் என்பவற்றை பொருளாதாரத்துடன் இணைத்து சிந்திக்கத் தெரியாத மடையர்கள் என்பதால்தான் இந்தப் பிரச்சனை! கடவுளிற்கு எதற்கு கரும்பு, பூமாலை எல்லாம்?

சனத்தொகை குறைந்த முற்காலத்தில் மூட்டை மூட்டையாக பூக்கொண்டு அர்ச்சிப்பது, பால் ஊற்றுவதெல்லாம் சமூகத்தில் உற்பத்தி குறைத்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான். அது இப்போது காசுகொடுத்தால் எல்லாம் கிடைக்கும் என்ற மன நிலையில் உற்பத்தி செய்யும் ஆற்றலை இழந்த சொத்தை சமூகமாக நாம் மாறிக்கொண்டு வருகிறோம்!

கரும்பு நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் குறைந்தது 10 18 மாதங்கள் ஆகும். இந்தப் பொங்கலுக்கு கரும்பு வேண்டும் என்றால் நாம் போன பொங்கலுக்கு முன்னர் கரும்பு நடவேண்டும்! இப்படியில்லாமல் எங்காவது யாராவது, தானாக வளந்த கரும்பை வாங்கி கடவுளிற்கு படைத்துவிட்டால் கடவுளின் அருள் கிடைத்துவிடுமா?

நாம் எதையும் விளைவிக்காமல் நாம் சூரியக்கடவுளிற்கு எப்படி நன்றி சொல்வது!

உற்பத்தி செய்வது என்பது மனித குலத்தின் ஆற்றல்! இதைச் செய்யாமல் காசேதான் கடவுளடா என்று பொங்கல் கொண்டாடினால் இப்படித்தான் இறுதியில் கரும்பு படைப்பது நின்றுவிடும்!

Aaruthirumurugan Aaruthirumurugan ஐயா போன்ற சைவப் பெரியார்கள் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாட பூக்களும், கரும்புகளும் தாரளமாகக் கிடைக்ககூடிய வகையில் பயிரிடலை தமது அறக்கட்டளைகள், கோயில்களூடாக ஊக்கி விக்க வேண்டும்! இது குறித்தளவு எண்ணிக்கையானவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும்!

விவசாய முயற்சியாளர்கள் பண்டிகைக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து நியாய விலையில் எப்படி கிடைக்கச் செய்வது என்று யோசிக்கலாம்!

கொழும்பில் பொங்கல் என்றால் எல்லோருக்கும் கரும்பும், பூஜைக்குப் பூக்களும் கிடைக்கும் வகை தோட்டங்கள் வடக்கில், கிழக்கில், மலையகத்தில் உருவாக்கப்பட்டு இது சார்ந்த பொருளாதாரத்தை கோயில்களுக்கூடாக முன்னெடுக்க வேண்டும்.

சொன்னதற்கு சான்றாக எம்மூர் கோயிலிற்கு, அயலவர்களுக்குக் கொடுப்பதற்கு கரும்பு எமது வீட்டில் வளர்க்கப்படுகிறது!


 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...