குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, January 06, 2024

சந்திரயான்

 

பொறுத்தார் சந்திரன் ஆள்வார்! – சந்திரயான் 03

பொங்கினார் தொப்பென வீழ்வார்! – லூனா – 25

சந்திரயான் – 03 இன் வெற்றிக்கு பின்னால் பாரதீய மெய்யியலின் சிந்தனை இருக்கிறது; இயற்கையுடன் ஒன்றி அதிக ஆற்றலை செலவழிக்காமல் எப்படி உயர்வை அடைவது என்பது தான் அது!

பூமியினுடைய ஈர்ப்பிலிருந்து தப்பி சந்திரனுடைய பாதைக்குள் செல்வதற்கு பூமியின் இயற்கையான சுழற்சியையும், சந்திரனுடைய இயற்கையான சுழற்சியையும் பயன்படுத்தத் தெரிந்தால் அதிக செலவில்லாமல் திட்டத்தை சாதிக்கலாம் என்பது இதன் இரகசியம்.

அடுத்தது தமது அறிவைப் பயன்படுத்தி ரக்கெட் விட்டாலும் தமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது; அதைப் புரிந்துகொள்ள நமக்கு அமைதியும் அடக்கமும் தேவை; அகங்காரத்துடன் மோதி அதிக செலவில் பாடம் கற்பதை விட அடக்கத்துடன் அமைதியாக அவதானித்து படிப்படியாக அடைவது என்பது சந்திரயான் – 03 இனது orbit raising schedule ஆக இருந்தது.

மேற்கத்தேய திட்டங்கள் எப்போதும் அதிக ஆற்றல், துரித வெற்றி என்று போக்கில் இயற்கையின் அமைப்பை விளங்கி செயற்படுவதை விட அறிவின் மமதையில் இயங்குபவை! எலான் மாஸ்க் இப்படித்தான் பல பில்லியன் டாலர்களை வீணாக்கி கொண்டு இருக்கிறார்.

சந்திரனில் தரை இறங்குவதால் நாட்டிற்கு என்ன நன்மை என்று புலம்பும் சிறு புத்தி சிந்தனையாளர்களுக்குத் தெரிய வேண்டியது – குறைந்த செலவில் உயர்ந்த தொழில் நுட்பத்தை செய்யும் ஆற்றலை, வெற்றியை இந்தியா அடைந்துள்ளது. இதனால் ஆகாயத்தை கட்டுப்படுத்தும் அறிவியலில் நான் நம்பகமான ஒருவன் என்று நிருபித்துள்ளது. இனி அனேக நாடுகளுடைய சாட்டலைட்டுகளிய வானில் நிறுவும் பணியில் கோலோச்சப்போகிறது. இதன் பயனாக பல தகவல் பரிமாற்றங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் மிகுந்த நாடாக உலக அரங்கில் வரப்போகிறது.

பாரதத்தின் ரிஷிகள் எப்போதும் தமது ஞானம், அறிவியல் உலகிற்கு நன்மை பயக்க வேண்டும் என்றும், மானிட குலம் உய்ய வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை மரபு உடையவர்கள்!

இந்த வெற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட வேண்டியது!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...