குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, January 11, 2024

ஆஞ்ச நேய சுவாமி ஜெயந்தி!

 



இன்று தமிழ் ஆஞ்ச நேய சுவாமி ஜெயந்தி! அனுமனின் ஒரு பெயர் பிராணேஷ் - வாயு புத்திரராகிய அவரே பிராணாயாம ஸித்திகளுக்கு மூலம்! பிராண சித்தியே யோக சித்திக்கு வழி!

எமது குருவின் குருவான ஸ்ரீ கண்ணைய யோகியார் பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பண்டிதரிடம் தனது ஞாபகசக்தியால் கம்பராமாயணத்தை ஒப்புவித்து அவருடைய பரிந்துரையின் பெயரில் தமிழ் பண்டிதர் பரீட்சை எழுதிச் சித்தியானவர்!

அனுமனைப் பற்றிக் கூறும் போது அனுமனின் உப்பிய கன்னங்கள் சக்திப் பிரணாயமத்தின் இரகசியம் என்று சொல்லுவார்.

நீங்கள் எத்தகைய களைப்பில் இருந்தாலும் கன்னத்தை உப்பி வாயைக் குவித்து வெளிமூச்சினை அழுத்தமாக வெளிவிட்டால் இது சக்திப் பிரணாயாமம் எனப்படும்! இப்படி மூச்சை வெளிவிடும் போது உருவாகு அழுத்தம் பிடரியின் உள்புறத்தை வருடுவதால் உடனடியாக நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு உற்சாகம் பிறக்கும்! இது சக்திப் பிரணாயாமம் அல்லது அனுமன் பிரணாயாமம் என்று சொல்லுவோம்!

ஆஞ்சனேய ஸ்வாமியின் தியானம் பற்றிச் சொல்லும் போது;

உத்³யதா³தி³த்ய ஸங்காஶம்ʼ உதா³ பு விக்ரமம் .

கந்த³ர்ப கோடி லாவண்யம்ʼ ஸர்வ வித்³யா விஶாரத³ம் .

உதய சூரியன் போன்ற பிரகாசமும்

தேவையான அபார புஜபலமும் உடையவரும்

கோடி மன்மதன் போன்ற அழகுடையவரும்

ஸர்வ வித்தைகளையும் வல்லவர்

என்று குறிப்பிடப்படுகிறது

மனோஜவம்ʼ மாருத துல்ய வேக³ம்ʼ

ஜிதேந்த்³ரியம்ʼ பு³த்³திமதாம்ʼ வரிஷ்ட²ம் .

வாதாத்மஜம்ʼ வானர யூத² முக்²யம்ʼ

ஶ்ரீ ராமதூ³தம்ʼ ஶிரஸா நமாமி ..

மனோவவேகம் என்பது காற்றின் வேகத்திற்குச் சமம்

புலங்களை அடக்கியவன் புத்திமானைவிடச் சிறந்தவன், வாதம் எனும் வாயுவின் புத்திரன்! வானர குலத் தலைவன்! ஸ்ரீ ராமரின் தூதன்! சிரம் பணிந்து வணங்குகிறேன்!



 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...