குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, January 14, 2024

கால பைரவ தியானம் – 43

 

பைரவ உபாசனையின் பிரதான நோக்கம் நாம் பலம் பெறுவது; இதைத் தரக்கூடியது இன்று நாம் பார்க்க இருக்கும் ஶ்ரீபைரவஸர்வப²லப்ரத³ஸ்தோத்ரம்ʼ. - அனைத்து பலத்தையும் தரக்கூடிய தோத்திரம் என்று அர்த்தம்! பைரவ உபாஸனையின் சிறப்பு எமக்கு தோன்ற இருக்கும் ஆபத்துக்களை அது தோன்றமுன்னரே நீக்குவது; மலைபோல் தோன்றிவிட்ட ஆபத்தினை நீக்க மகாகணபதி உபாஸனை! சிவகுமாரர்களில் எதற்கும் அஞ்சாத பயங்கர நாயகன் பைரவர்! பிரணவப் பொருள் விளங்காத பிரம்மனிற்கு குட்டி ஞானத்தைச் சொல்லிக்கொடுக்கும் ஞானகுரு சுப்பிரமணியர் என்றால் எதற்கு அஞ்சாமல் தலையைக் கொய்பவர் பைரவர்!

இப்படிப்பட்ட பைரவ உபாசனையின் அனைத்து பலன் களையும் பெற கீழ்வரும் தோத்திரத்தை அர்த்தத்துடன் பைரவ சன்னதியில் ஓதி நாம் நன்மைகள் பெறலாம்! இதை குருமுகமாக அறிந்தே பயிற்சி செய்ய வேண்டும்! இங்கு தகவலுக்காக பகிர்கிறோம்!

இந்த தோத்திரம் கூறும் நாம் பெற வேண்டிய பலம்:

1. நாம் அறியாத எமக்கு நேர இருக்கும் ஆபத்துக்கள்

2. எமது கர்மவினையைத் தூண்டி நாம் செய்யும் செய்லாம் ஏற்படப்போகும் ஆபத்துக்கள்

3. செல்வம் இல்லாத தரித்திர நிலையால் வரும் ஆபத்துக்கள்

4. பிள்ளைகள், புகழ் இல்லாததால் வரும் மனக் கலக்கங்கள்.

5. எமது கண்களுக்குத் தெரியாமம் எம்மீது பொறாமைகொண்டு எம்மை துன்புறுத்த அழிக்க நினைப்பவர்கள்.

6. நாம் கடமையைச் சரியாகச் செய்யாததால் வரும் கடங்களால் ஏற்படும் துன்பங்கள்

இந்த ஆறும் எம்மை வாழ்க்கையில் பலவீனப்படுத்தும்; இவை நீங்கினால் வரும் நன்மைகளும் இந்தத் தோத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றைக் கீழேயுள்ள தமிழ் அர்த்தத்தில் காண்க!

பைரவாய அநிஷ்டநிவாரணாய ஸ்வாஹா .

மம ஸர்வே க்³ரஹா அநிஷ்டநிவாரணாய ஸ்வாஹா .

ஜ்ஞானம்ʼ தே³ஹி னம்ʼ தே³ஹி மம த்³ராரித்³ரயது³꞉²நிவாரணாய ஸ்வாஹா .

ஸுதம்ʼ தே³ஹி யஶோ தே³ஹி மம க்³ருʼஹக்லேஶநிவாரணாய ஸ்வாஹா .

ஸ்வாஸ்த்² தே³ஹி ³லம்ʼ தே³ஹி மம ஶத்ருநிவாரணாய ஸ்வாஹா .

ஸித்³திம்ʼ தே³ஹி ஜயம்ʼ தே³ஹி மம ஸர்வரூʼணநிவாரணாய ஸ்வாஹா .

பைரவாய அநிஷ்டநிவாரணாய ஸ்வாஹா .

இதி ஶ்ரீபைரவஸர்வப²லப்ரத³ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் .

ஓம் பைரவரே எனக்கு வர இருக்கும் பேராபத்துக்கள் அனைத்தையும் நீக்குவீராக! என்னை நான் முழுமையாக பக்தியுடன் அர்ப்பணிக்கிறேன்!

என்னை தாக்க இருக்கும் கிரக சக்திகளால் உருவாகும் பேராபத்த்துக்கள் தீயிலிட்ட பஸ்பமாகட்டும்! அவற்றை நீக்கி நீர் என்னைக் காப்பாற்றுவீராக! என்னை நான் முழுமையாக பக்தியுடன் அர்ப்பணிக்கிறேன்!

எனது வறுமையும் தரித்திரமும் என்னைவிட்டு நீங்க எனக்கு அறிவினையும் செல்வத்தினையும் தருவீர்களாக! என்னை நான் முழுமையாக பக்தியுடன் அர்ப்பணிக்கிறேன்!

எனது க்லேசங்கள் அகல புத்திரையும், நல்ல புகழையும் கொடுப்பீராக! என்னை நான் முழுமையாக பக்தியுடன் அர்ப்பணிக்கிறேன்!

எனது எதிரிகளை அழிக்கும் ஆற்றலைப் பெற நல்லாரோக்கியத்தையும், பலத்தினையும் தருவீர்களாக! என்னை நான் முழுமையாக பக்தியுடன் அர்ப்பணிக்கிறேன்!

என்னுடைய அனைத்துக் கடன் களையும் அடைக்க முழுமையான ஸித்தியையும் வெற்றியையும் தாருங்கள்! என்னை நான் முழுமையாக பக்தியுடன் அர்ப்பணிக்கிறேன்!

ஓம் பைரவாய அனைத்து பேராத்துக்களையும் நீக்கி நிவாரணம் தருபவரே

பைரவ உபாஸனையால் பெறப்படும் அனைத்து பலன் களையும் தரும் தோத்திரம் முடிவுற்றது.

இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...