குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, January 05, 2024

மனித மனத்தின் சிந்தனை போக்கு

 


மனித மனத்தின் சிந்தனை போக்கு வினோதமானது.

காலை பிரம்ம முகூர்த்த தியானத்தில் இணைந்து கொண்ட ஒரு அன்பர் செய்தி அனுப்பியிருந்தார்: தான் கட்டணம் கட்டி இன்னுமொரு கற்கையில் இணைந்திருப்பதால் அது முடிந்த பின்னரே இங்கு இணைந்து கொள்ளலாம் என்று!

ஆகா நாம் கட்டணம் எதுவும் கேட்கவில்லை என்றவுடன் நாம் சொல்லித் தரும் வித்தை முக்கியத்துவம் அற்றுவிட்டதாகிவிட்டதே என்ற கவலை வந்தது!

இதேபோல் பாடசாலை ஒன்றிற்கு பிள்ளைகளுக்கு வழிகாட்டலுக்கு வரும் படி அழைப்பு விடுத்துவிட்டு இறுதியாக எவ்வளவு சேர் எதிர்பார்க்கிறீர்கள் என்றார்?

நான் எதிர்பார்ப்பது எங்களது பிள்ளைகள் நான் சொல்லித்தரும் அறிவைக் கொண்டு மேன் மக்களாக தமது வாழ்வையும், மற்றவர்கள் வாழ்வையும் உயர்த்த வல்லவர்களாக ஆற்றலுள்ளவர்களாக வரவேண்டும் என்பது.

அப்படியென்றால் பணம் எல்லாம் வேண்டாம் என்று சொல்ல வருகிறீர்களா? என்று கேட்டார்.

பணம் என்பது யதார்த்தம்; நாம் செய்யும் செயலுக்கு எப்போதும் ஒரு செலவு இருக்கும்; அந்தச் செலவை பணமுள்ளவர்கள் வசதியுள்ளவர்கள் ஏற்றுக்கொண்டு பங்களிக்க வேண்டும்; அதில் வசதி இல்லாதவர்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். வறுமையில் இருப்பவர்களிடன் பணம் வாங்கக் கூடாது. இந்தக் கல்விக்கு இவ்வளவு கட்டணம் என்று கூறக்கூடாது; அவரவர் தகுதிக்கு தக்க பங்களிப்பு நல்க வேண்டும்; தரும் தொகை பெரியோ சிறிதோ அதுபற்றி எந்தக் கணிப்பும் செய்யக்கூடாது. அந்த நிகழ்வு சரியாக நிகழ்வும், அந்த நிகழ்வை நடத்துபவர்களது, நேரத்தைச் செலவழிப்பவர்களுக்கு அடிப்படை வாழ்வாதாரத்திற்கு தேவையானதைத் தரவேண்டும்.

என்னிடம் கற்கும் மாணவனுக்கு எனது குரு எனது அகமுன்னேற்றத்திற்கு தனது நேரத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செலவழிக்கிறார்; குருவின் பணி வளர நான் பெற்ற பயன்போல் இன்னும் ஆயிரம் பேர் பயன் பெற நான் குருவின் பணிகளுக்கு பங்களிப்பு நல்க வேண்டும் என்ற எண்ணம் - கடமையுணர்வு - தர்ம சிந்தனை வரவில்லை என்றால் உண்மையில் குருவாக நான் எனது கடமையைச் செய்யவில்லை என்று தானே அர்த்தம்!

இதுவே எனது கொள்கை!

இது சரி தானே ?


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...