குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, January 08, 2024

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 01

 



அன்பின்சிரத்தையாக யோக வித்தை கற்க விரும்பும்மாணவர்களே,

இன்றைய விரிவுரை தொகுக்கப்பட்டிருக்கிறது; உங்கள் கடமை இதை அடிப்படியாக வைத்துக்கொண்டு விடுபட்ட பகுதிகளை சேர்த்து உங்கள் புரிதல்களையும் சேர்த்து உங்களுக்குரிய வகுப்புக் குறிப்புகளை ஒரு நூலாக செய்து இறுதியாக ஆசிரியருக்கு சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.

இது யோகத்தை அதியுன்னத சிரத்தையாக பயிலவேண்டும் என்பவர்கள் பின்பற்ற வேண்டிய பயிற்சி!

**************************

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு 01

இன்று நீங்கள் கற்றுக்கொண்டவை:

சூத்திரம் 01: அத யோக அனுசாசஸனம் || இனி யோகம் விளக்கப்படும்

சூத்திரம் -02: யோக: சித்த வ்ருத்தி நிரோத: || சித்தத்தின் விருத்திகளை ஒடுக்குதலே யோகம்

பதஞ்சலி யோக சூத்திரத்தின் முதல் இரண்டு சூத்திரங்களைப் புரிந்து கொள்ள நீங்கள் புரிந்து வைத்திருக்க வேண்டிய அருஞ்சொற்கள்:

1.பதஞ்சலி மகரிஷி சித்த சுத்தி, வாக்கு சுத்தி, உடல் சுத்தி ஆகிய மூன்று சுத்திக்கும் உரிய அறிவியலைத் தந்த மகரிஷி!

2. யோகம் மனிதன் ஆக்கப்பட்டிருக்கும் தத்துவங்களின் இணைவு

3. 24 தத்துவங்கள் உயிரைச் சூழ இருந்து இயக்கத்தை நடத்தும் கருவிகள்

4. அந்தக்கரணம் மனம் புத்தி சித்தம் ஆங்காரம்

5. மனம் எண்ணம், புலன் களில் இருந்து தகவலை வாங்கும் பகுதி

6. புத்தி கேள்வி கேட்டு ஆராயும் பகுதி

7. சித்தம் தகவலை சம்ஸ்காரமாக பதிந்து வைக்கும் பகுதி

8. ஆங்காரம் ஒரு செயலைச் செய்வதற்கு மையமாக இருக்கும் பகுதி

9. சம்ஸ்காரம் நாம் புலன் களால் பெற்ற அனுபவத்தின் பதிவு

10. பஞ்சபூதம் ப்ருதிவி, அப்பு, அக்னி, வாயு, ஆகாயம்

11. பஞ்ச புலன் அனுபவம் கேட்டல், பார்த்தல், சுவைத்தல், முகர்தல், தொடு உணர்ச்சி

12. பஞ்ச ஞானேந்திரியம் செவி, கண், நாக்கு, நாசி, தோல்

13. பஞ்ச கர்மேந்திரியம் கை, கால், வாய், குறி, குதம்

14. விருத்தி ஏற்கனவே பதியப்பட்ட பதிவுகள் கட்டுப்பாடு இல்லாமல் அலைகளாக எழுந்து செயற்படும் நிலை

15. பதஞ்சலி யோகம் 24 தத்துவங்களில் சித்தம் என்ற பகுதியி எழும் கட்டுப்படாத விருத்திகளை கட்டுப்படுத்துதலே பதஞ்சலியைப் பொறுத்த வரையில் யோகம். இந்த விருத்திகளைக் கட்டுப்படுத்தினால் மற்றைய தத்துவங்கள் அனைத்தும் சிறப்பாக ஒன்றிணைந்து அதியுயர் உணர்வு நிலையான ஸமாதி நிலை வாய்க்கும். மனிதன் அதியுயர் சக்தியுடையவன் ஆவான்.

16. பதஞ்சலி யோகசூத்திரம் 195/196 சூத்திரங்கள் உடையது

17. பதஞ்சலி யோக சூத்திரம் ஸமாதி/சாதனா/விபூதி/கைவல்ய என்ற நான்கு பகுதிகளை உடையது

18. ஸமாதி மனிதன் அடையக்கூடிய உயர் உணர்வு நிலைகள் (super consciousness state) எவை?

19. சாதனா உயர் உணர்வு நிலைய அடைவதற்குரிய பயிற்சி முறைகள் (practice) எவை?

20. விபூதி உயர் உணர்வு நிலையை அடைவதால் பெறப்படும் சித்திகள் ஆற்றல்கள் (super powers) எவை?

21. கைவல்யம் - சித்திகள், ஆற்றல்களை விட உயர்ந்த நிலை ஒன்று உள்ளது!

22. முற்பிறப்பில் யோகம் பயின்று தகுந்த சம்ஸ்காரம் உடையவர்களுக்கு அப்பியாஸ வைராக்கியம் மாத்திரம் போதுமானது

23. முற்பிறப்பில் யோகம் பயின்று தகுந்த சம்ஸ்காரத்தைப் பெறாமல் சாதனை குழம்பியவர்களுக்கு கிரியாயோகம் சொல்லப்படுகிறது.

24. முற்பிறப்பில் யோக சம்ஸ்காரம் இல்லாமல் தற்போது தொடங்குபவர்களுக்கு அஷ்டாங்க யோக முறை சொல்லப்படுகிறது.

25. குரு அவரவர் சம்ஸ்காரத்திற்கு ஏற்ப யோக முறைகளைக் கற்பிப்பார்.



No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...