குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, January 20, 2024

ஶ்ரீராம꞉ஶரணம்ʼ மம – 02

 



நான் ஸ்ரீ ராமரைச் சரணடைகிறேன்

ஶ்ரீராமஶரணம்ʼ மம என்பது ஸ்ரீ ராமரின் எட்டெழுத்து மந்திரம்; இதைக் கீழ்வரும் தோத்திரத்துடன் பொருளறிந்து ஜெபித்து வருவது அரிய பல நன்மைகளை எம்மில் உருவாக்கும்!

அசிந்த்யோ()பி ஶரீராதே³꞉

ஸ்வாதந்த்ர்யேனைவ வித்³யதே .

சிந்தயேச்சேதஸா நித்யம்ʼ

ஶ்ரீராமஶரணம்ʼ மம .. 3..

ஆத்மாதாரம்ʼ ஸ்வதந்த்ரம்ʼ

ஸர்வஶக்திம்ʼ விசிந்த்ய .

சிந்தயேச்சேதஸா நித்யம்ʼ

ஶ்ரீராமஶரணம்ʼ மம .. 4..

சிந்திக்க முடியாதவை மாத்திரமே உடலிலிருந்தும், பிற பொருட்களிலிருந்தும் சுயாதீனமாக இருக்கிறது! ஆனால் நானோ சிந்திக்கும் ஆற்றலை உடையவன் ஆதலால் நான் ஸ்ரீ ராமரை சரணடைந்து ஸதா சிந்திக்கிறேன்!

ஆத்மா எப்போதும் ஸ்வந்தந்திரம் என்ற சுயாதீனமுடையது, எல்லா ஆற்றல்களும் நிறைந்தது; எனவே நான் (எந்தக் காரணமும் சொல்லாமல், ஆத்மாவின் ஸ்வதந்திர ஆற்றலின் மூலம்) ஸ்ரீ ராமரைச் சரணடைந்து எப்போதும் அவரைச் சிந்திக்கிறேன்!

 


Friday, January 19, 2024

காலபைரவ தியானம் – 48

 


 

இன்றிலிருந்து சில நாட்களுக்கு பைரவ தாண்டவ ஸ்தோத்திர தியானங்கள் பார்க்கப்போகிறது. தாண்டவம் என்பது நடனம் என்று அர்த்தம்! இந்தத் தாண்டவங்கள் ஒவ்வொரு தெய்வங்களும் ஆடும் வகையில் அதன் அர்த்தம் பொதிந்திருக்கும்.

ஆனந்த தாண்டவம் - மகிழ்ச்சியுடன் ஆடும் நடனம்

திரிபுரா தாண்டவம் - சிவன் திரிபுரசுரன் என்ற அரக்கனைக் கொன்ற பிறகு நிகழ்த்தப்பட்ட கோபம் மற்றும் தைரியத்தின் நடனம்

சந்தியா தாண்டவம் - ஒரு இனிமையான மாலை நடனம்

சமர தாண்டவம் - பிரபஞ்சத்தின் அழிவை சித்தரிக்கிறது

காளி தாண்டவம் - தீமையை அழிக்க சிவனின் உக்கிர வடிவில் நிகழ்த்தப்பட்டது

உமா தாண்டவம் - உடல் ஈர்ப்பு மற்றும் அன்பை வெளிப்படுத்தும் நடனம்

கௌரி தாண்டவம் - சிவனும், தூய்மையின் தெய்வமான கௌரியும் ஆடிய காதல் நடனம்.

நாம் இங்கு பார்க்கப்போவது பைரவ தாண்டவம்! விழிப்புணர்விற்கான தாண்டவம். தாண்டவம் ஆடும் போது எமது உடலில் உள்ள தெய்வ சக்திகள் விழிப்படைகிறது.

சண்ட³ம்ʼ ப்ரதிசண்ட³ம்ʼ கரத்ருʼதத³ண்ட³ம்ʼ

க்ருʼதரிபுக²ண்ட³ம்ʼ ஸௌக்²யகரம்ʼ

லோகம்ʼ ஸுக²யந்தம்ʼ விலஸிதவந்தம்ʼ

ப்ரகடிதத³ந்தம்ʼ ந்ருʼத்யகரம் .

³மருத்வநிஶங்க²ம்ʼ தரலவதம்ʼஸம்ʼ

மதுரஹஸந்தம்ʼ லோகபரம்ʼ

பூதேஶம்ʼ ப்ரகடமஹேஶம்ʼ

பைரவவேஷம்ʼ கஷ்டஹரம் .. 1..

ஓம், நான் எல்லையற்ற பயங்கர ரூப பைரவ வடிவத்தை வணங்குகிறேன், தண்டத்தை வைத்திருப்பவர், எதிரிகளை அழிப்பவர், மகிழ்ச்சியை அளிப்பவர். உலகம் முழுவதும் சுற்றித் திரிபவர், மகிழ்ச்சியைத் தருபவர், தனது கடுமையான பற்களைக் காட்டி நடனமாடுகிறார். துன்பங்களை அழிப்பவனாகவும், பைரவ வடிவில் சிவபெருமானின் அவதாரமான பைரவ பூதேஸ்வரனை நான் வணங்குகிறேன். அவர் உடுக்கை மற்றும் சங்கு ஆகியவற்றைப் பிடித்து, உலகை மயக்கும் இனிமையான புன்னகையுடன் இருக்கிறார். இந்த பைரவ வடிவம் எனது கஷ்டங்களை எல்லாம் அழிக்கிறது!


 


 

பக்தியுடன் செய்யப்படும் மந்திர சாதனை ஏன் துரிதமாகப் பலனளிக்கும்?

    பக்தியுடன் செய்யப்படும் மந்திர சாதனை ஏன் துரிதமாகப் பலனளிக்கும்? பக்தி என்பது தனது அனுஷ்டான தெய்வத்திடம் முழுமையாக மனம், புத்தி, சித...