குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, April 17, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 07: சோடஷி மந்திரம்




சோடஷி பற்றி 587 நாமாவில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. பொதுவாகவே எல்லா மந்திரங்களும் இரகசியமாகவே கருதப்படுகிறது. அதற்கு சோடஷியும் விலக்கல்ல. சோடஷியினை ஜெபித்தல் முக்தியினை மட்டும் தரும், இதனால் வேறு உலக இன்பங்களை பெறமுடியாது. இது ஒருவரை நேரடியாக பிரம்மத்தினை அடைவிக்கும். பொதுவாக சோடஷி தீட்சை ஒருவருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது. சாதகனின் தகுதி அறிந்து முதலில் பாலா, பின்னர் பஞ்சதசி தீட்சை அளித்து சாதகன் இந்தப்பிறப்பில் தனது கர்மத்தினை தீர்த்து முக்தியினை அடையும் தகுதி இருந்தால் மாத்திரமே குரு ஷோடசியினை வழங்குவார். தீட்சை பெற்ற பின்னர் அதனை குறைந்தது 900,000 தடவை ஜெபம் செய்து முறைப்படி புரச்சரணம் செய்யவேண்டும். அதன் பின்னரே சாதகன் முக்திக்கான வழியில் முன்னேறத்தொடங்க்குவார். சோடஷி தீட்சை கிடைப்பது என்பது ஒருவருடைய கர்ம பலனைப் பொறுத்தே அமையும்.
 
சோடஷி வித்தை பிரம்ம வித்தை எனப்படும், பிரம்மத்தினை அறிவதற்கான ஞானம் என்று பொருள். பிரம்மத்தின் மந்திர வடிவமே சோடஷி மந்திரம். அதனாலேயே மிக்க இரகசியமாக பேணப்பட்டு வந்தது. இந்த இரகசியத்தின் முக்கியமான விடயம் என்னவெனில் இரண்டாவதாக காணப்படும் "ஓம்" இற்கு அடுத்து ஆத்ம பீஜ மந்திரத்தினை இணைப்பதாகும். இதன் மூன்றாவது இரகசியம் பரா, அபரா உள்ள ஒன்பதாவது ஆவரணத்தினை உபாசிக்கும் முறையுடன் தொடர்புடையது. (இவை குறித்த நாமாக்களில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவன் நான்காவது நிலையான தூரியத்தினை அடைய முடியுமாயின் முக்தியான துரியாதீதத்தினை அடையும் தகுதியினை பெறுகிறான். சோடஷி தினமும் ஜெபிப்பவர் எதுவித கஷ்டமும் இன்றி தூரிய நிலையினை அடைவார்.
 
{தூரியமும் துரியாதீதமும்: தூரியம் என்பது உணர்வின் நான்காவது நிலை, மற்றைய மூன்று நிலைகள் விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்பனவாகும். தூரியம் என்பது இந்த மூன்று நிலைகளின் மேலும் காணப்படும் அதனைத்தாண்டிய நிலையாகும். தூரிய நிலையில் உணர்வின் தன்மை ஆனந்ததிற்கு மிகவும் அருகில் உள்ள நிலையாகும். இது வெறுமனே வாய்ப்பேச்சாக அன்றி அனுபவமாக வரும். தூரியாதீதம் என்பது ஒருவருடைய உணர்வு தூரியத்தினை தாண்டிய நிலையாகும். இந்த ஆனந்த உணர்வு நிலையில் பிரம்மத்தினை தானே அதுவாக இருக்கின்றேன் (அஹம் பிரம்மாஸ்மி) என்று உணர்வான். அது கடந்து கைவல்யம் வாய்க்கும் போது இறுதியாக பிரம்மத்துடன் கலந்து ஆன்ம ஒன்றாக மாறும்.}
 
பஞ்சதசி ஒருவருடைய உணர்வு நிலையினை நான்காவதாகிய தூரிய நிலைக்கு இட்டுச்செல்லும். சோடஷி உணர்வினை துரியாதீதத்திற்கு உயர்த்தி பிரம்மத்துடன் கலக்கச் செய்யும். இதற்கு மேற்பட்ட நிலை என்று ஒன்றும் இல்லை. இந்த நிலை ஒரு கணப்பொழுதில் நிகழும் அது நிகழ்ந்த பின்னர் அந்த மனிதர் அதற்கு முன்னதான மனிதனாக இருக்க மாட்டான்.




*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...