குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, August 18, 2025

சடாக்ஷர மந்திரத்தில் ஸரவணப⁴வ என்பது சரியா? ஸரஹணப⁴வ என்பது சரியா?



*************************************

முதல் விதி மந்திரம் சரியா பிழையா என்று ஆராய்ச்சி செய்வதற்கு யூடியுப், புத்தகம், வெப்சைட்டில் தேடாதீர்கள்.

மந்திர ஸித்தி பெற்ற உங்கள் குருவிடம் நேர்முகமாக அவரின் வாக்கால் பெற்ற மந்திரம் மாத்திரமே சரியான மந்திரம்; அப்படிப் பெற்றால் வீண் ஆராய்ச்சி செய்து குழம்பாதீர்கள்! குரு பராவாக்குடன் தரும் எந்தச் சொல்லும் மந்திரமே. நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த மறை மொழி எல்லாம் மந்திரமே!

இனி கேள்விக்கு வருவோம்?

ஸரவணப⁴வ என்பதே சரியான மந்திரம். மந்திரங்களில் சம்பிரதாய பேதங்கள் உண்டு; தமிழ் சித்த மரபிலும், எனது தந்தை வழி உபதேசத்திலும் சடாக்ஷரம் என்பது ஸரவணப⁴வ என்பதே உபாசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதற்கு சமஸ்க்ருத கந்தபுராணத்திலும் ஆதாரம் உண்டு. ஸரஸி ஸரவணே ஜாத꞉ தஸ்மாத் ஸரவணப⁴வ꞉ ஸ்ம்ருʼத꞉ என்கிறது. சரவணப் பொய்கையில் தோன்றியதால், அவரை சரவணபவ என அழைக்கிறார்கள்.

ௐ ஸரவணப⁴வாய நம꞉

இதேவேளை சரஹணபவ என்று பாராயணம் செய்யும் சம்பிரதாயங்களும் உண்டு! எனது குருவின் குருவான ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் ஸரஹணபவ என்றே சடாக்ஷர மந்திரம் உபதேசித்துள்ளார். நான் இரண்டு மந்திர பேதங்களிலும் உபதேசம் பெற்று சாதனை செய்துள்ளேன்!

குருமுகமாய்ப் பெற்ற மந்திரத்தையே அவரவர் சாதகம் செய்ய வேண்டும். மந்திரத்தைத் திருத்துவது அவரவர் குருவின் வேலை. பொதுவில் இது சரி இது பிழை என்று சொல்வதற்கு மந்திர சாஸ்திரத்தில் பொது அதிகாரம் எவருக்கும் இல்லை

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...