குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, August 29, 2025

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -14

பாத தரிசனஞ் செய்ய - திருவடி தீக்ஷை பெற

***************************************** 




இந்தப்பாடலின் பிரயோகமாக சித்தர் பிரான் இட்ட தலைப்பு "பாத தரிசனஞ் செய்ய" என்பதாகும். எமது மரபில் இறைவனதும், குருவினதும் பாதங்களை வழிபடுவது, தியானிப்பது மிக உயர்ந்த யோக சாதனையாகும். இதற்கு ஒரு அரிய யோக விளக்கம் இருக்கிறது. 

தலையுச்சியில் பிரம்மரந்திரம் எனும் துவாரம் வழியாக உள் நுழையும் பிராணன் உடலில் உள்ள நாடிகளில் நிரம்பி மீண்டும் வெளியேறுவது பாதங்களின் வழியாக. ஒவ்வொரு மனிதனும் தான் மனதில் எண்ணும் எண்ணத்திற்கு ஏற்பவும், சித்தத்தின் அதிர்வுகளுக்கு ஏற்பவும், நல்ல தீய உணர்ச்சிகளின் தன்மைக்கு ஏற்பவும் அவனுக்குள் செல்லும் பிராணன் மேற்குறித்த தன்மையுடன் கலந்து வெளிப்படும், பரவும்.  

ஞானம் பெற்ற, மந்திர சித்தி பெற்ற குருவின் உடலிற்குள் செல்லும் பிராணன் அவருடைய ஞானக் கதிர்களையும், மந்திர சித்தியையும் காவிக்கொண்டு அவர் பாதம் வழியே வெளிப்படுவதால் அந்தப் பிராண சக்தியைக் கிரகித்துக்கொள்ள குருவின் பாதங்களை கைகளாலோ, அல்லது பிராணன் உட்செல்லும் வழியான தலையையோ வைத்து வணங்கச் சொல்கிறது சாஸ்திரம்.  

அதுபோல் பிராணப்பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரங்களின் பாதங்களில், உடல் முழுவதும் அந்தப் பிராண சைதன்யம் இருப்பதால் அதைக் கிரகிக்க அபிஷேகம், பூக்களால் அலங்காரம் செய்வித்து அதை பாதங்களில் வைத்து பின்னர் அதைப் ப்ரஸாதமாக எடுத்துக்கொள்கிறோம். விஷ்ணு கோயிலில் திருவடியைத் தலையில் வைப்பதன் தத்துவமும் இதுதான். 

இந்தப்பாடலில் அருணகிரிநாதர் பரம்பொருளான, சகல ஞானமும், ஆற்றலும் உடைய முருகப்பெருமானின் திருவடியைப் பற்றும் வழியும் அதனால் கிடைக்கும் பலனைப் பற்றிக்கூறுகிறார். பாடலைப் பார்த்த பின்னர் பொருள்  விளங்கி அதன் பிரயோகம். 


கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.


திருக்கரத்தில் கதிர்வீசும் வேலைக் கொண்ட முருகன் கழலைப் பெற்று உய்ய மனமே, மெய், வாய், விழி, நாசி, செவி என்று ஐந்து புலன் கள் வழி சென்று அவாவினையும், வினையையும் சேர்க்காமல், அப்படி புலன் கள் வழி செல்லும் பழக்கத்தை முற்றிலும் ஒழித்துவிடு, ஒழித்துவிடு! முருகன் திருவடி சேர்ந்து உய்வாய்! 

இந்தப்பாடல் மனம் எப்படிக் கெடுகிறது, வினைகளை உருவாக்குகிறது என்ற யோக இரகசியத்தையும் சொல்லி, அதிலிருந்து மீளும் வழியையும் சொல்கிறது. 

ஐந்து புலன் கள் வழி செல்லும் மனம் நிச்சயம் மனதில் அவாவினையும், வினைகளையுமே உருவாக்கும். இப்படி உருவாகும் அவாவினாலும், வினைகளாலும் மனம் மீண்டும் மீண்டும் சலனித்துக்கொண்டிருக்கும். இதிலிருந்து மீள ஒரே வழி கைகளில் சுடர் விடும் வேலைக் கொண்டிருக்கும் முருகனின் பாதங்களைத் தியானிப்பதுவே இந்தப் பாடலின் பிரயோகம்.  

அமைதியாக அமர்ந்து கைகளில் ஒளிவீசும் வேலை முருகன் வைத்திருப்பதாக மனதில் கண்டு, பின்னர் அவனது பாதம் சஹஸ்ராரத்தில் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் ஒளிக்கதிர்கள் உங்களில்ச் சேர்வதாகவும் பாவனையுடன் இந்தப் பாடலுக்குரிய மந்திரத்தையும், யந்திரத்தையும் பிரயோகம் செய்ய வேண்டும். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...