************************
இருள் வழி நடக்க - அக இருள் நீங்கி குருவருள் பெற
**************************
இந்தப் பாடலிற்கு சித்தர் பிரான் ஓலைச்சுவடியில் இட்ட பிரயோகத் தலைப்பு "இருள்வழி நடக்க" என்பதாகும். இந்தப் பாடலின் பிரயோகம் இருவகைப்படும். ஒன்று அக இருளில் இருந்து மீண்டு மனத் தெளிவு பெற, இரண்டாவது நாம் புறஇருளில் இருக்கும் போது பயமின்றி பயணிக்க இந்த பாடலின் பிரயோகம் உதவும் என்று இந்தப் பிரயோகங்களை வெளியிட்ட தியாகராஜ முதலியார் அனுபவ உதாரணத்துடன் கூறுகிறார். சம்பவம் 100 வருங்களுக்கு முன்னர் தற்போதைய மின்சார வசதி இல்லாத காலத்தைச் சார்ந்தது என்பதை நினைவில் கொள்க.
உத்தர மேரூரில் வசித்து வந்த பெரியார் ஒருவர் இரண்டு மூன்று நாட்களுக்கொருமுறை காஞ்சிபுரம் சென்று தனது நெசவுத் தொழிலிற்கு நூல் வாங்கி வருவது வழக்கம். பகலில் வெய்யில் அதிகாகையால் மாலையில் சென்று இரவில் திரும்புவது வழமை. இப்படித் திரும்பும் போது இவரிடம் பணம் இருப்பதைக் கண்டு திருடுவதற்கு இவரிப் பின் தொடர்ந்து வருவதைக் கண்ட பெரியவர் இந்தப் பாடலைத் தொடர்ந்து படிக்க கள்வர்கள் இவர் அருகில் வருவதைத் தவிர்த்துக்கொண்டு பின் தொடர்ந்தனர், பின்னர் காலையில் விடிந்தவுடன் ஊரை அண்டி குளத்தில் முகம் கழுவும் போது இவருடன் கூட வந்தவர்களைக் காணவில்லை என்று அவர்கள் விசாரிக்க இந்தப் பெரியவருக்கு ஆச்சரியம்! அதாவது இவருடன் இன்னும் சிலர் வருவது போல் ஒரு மாயத்தோற்றத்தைக் கள்வர்கள் கண்களுக்கு காட்டி அவர்களை பயங் கொள்ளச் செய்திருப்பதை அறிந்து கொண்டார்.
இந்தப்பாடலின் அதிர்வுகள் எம்மைச் சூழ எம்மை மற்றவர்களிடமிருந்து பாதுக்காகும் தன்மையை உருவாக்கும். இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள அக இருளை நீக்கி எம்மை உயர் ஞானப்பாதையில் செலுத்தும் வல்லமையும் உடையது.
இந்தப் பாடல் முருகப்பெருமானின் பரம்பொருள் இலக்கணத்தைக் கூறுவதுடன் குருத்தன்மையை வெளிப்படுத்துகிறது. குரு எம்மைக் காக்கும் சக்தி! இந்தப்பாடலின் மூலம் நாம் முருகப்பெருமானை பரம்பொருளாகத் துதித்து குருவாக வரிக்கும் போது அந்த ஆற்றல் எம்மைச் சூழ இருந்து காக்கும் தன்மையுடையது என்பது இந்த பாடலின் பிரயோகமாம்.
முருகன், தனிவேல் முனி, நம் குரு என்றுஅருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.