குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, August 28, 2025

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 13

************************

இருள் வழி நடக்க - அக இருள் நீங்கி குருவருள் பெற

**************************


இந்தப் பாடலிற்கு சித்தர் பிரான் ஓலைச்சுவடியில் இட்ட பிரயோகத் தலைப்பு "இருள்வழி நடக்க" என்பதாகும். இந்தப் பாடலின் பிரயோகம் இருவகைப்படும். ஒன்று அக இருளில் இருந்து மீண்டு மனத் தெளிவு பெற, இரண்டாவது நாம் புறஇருளில் இருக்கும் போது பயமின்றி பயணிக்க இந்த பாடலின் பிரயோகம் உதவும் என்று இந்தப் பிரயோகங்களை வெளியிட்ட தியாகராஜ முதலியார் அனுபவ உதாரணத்துடன் கூறுகிறார். சம்பவம் 100 வருங்களுக்கு முன்னர் தற்போதைய மின்சார வசதி இல்லாத காலத்தைச் சார்ந்தது என்பதை நினைவில் கொள்க. 

உத்தர மேரூரில் வசித்து வந்த பெரியார் ஒருவர் இரண்டு மூன்று நாட்களுக்கொருமுறை காஞ்சிபுரம் சென்று தனது நெசவுத் தொழிலிற்கு நூல் வாங்கி வருவது வழக்கம். பகலில் வெய்யில் அதிகாகையால் மாலையில் சென்று இரவில் திரும்புவது வழமை. இப்படித் திரும்பும் போது இவரிடம் பணம் இருப்பதைக் கண்டு திருடுவதற்கு இவரிப் பின் தொடர்ந்து வருவதைக் கண்ட பெரியவர் இந்தப் பாடலைத் தொடர்ந்து படிக்க கள்வர்கள் இவர் அருகில் வருவதைத் தவிர்த்துக்கொண்டு பின் தொடர்ந்தனர், பின்னர் காலையில் விடிந்தவுடன் ஊரை அண்டி குளத்தில் முகம் கழுவும் போது இவருடன் கூட வந்தவர்களைக் காணவில்லை என்று அவர்கள் விசாரிக்க இந்தப் பெரியவருக்கு ஆச்சரியம்! அதாவது இவருடன் இன்னும் சிலர் வருவது போல் ஒரு மாயத்தோற்றத்தைக் கள்வர்கள் கண்களுக்கு காட்டி அவர்களை பயங் கொள்ளச் செய்திருப்பதை அறிந்து கொண்டார். 

இந்தப்பாடலின் அதிர்வுகள் எம்மைச் சூழ எம்மை மற்றவர்களிடமிருந்து பாதுக்காகும் தன்மையை உருவாக்கும். இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள அக இருளை நீக்கி எம்மை உயர் ஞானப்பாதையில் செலுத்தும் வல்லமையும் உடையது. 

இந்தப் பாடல் முருகப்பெருமானின் பரம்பொருள் இலக்கணத்தைக் கூறுவதுடன் குருத்தன்மையை வெளிப்படுத்துகிறது. குரு எம்மைக் காக்கும் சக்தி! இந்தப்பாடலின் மூலம் நாம் முருகப்பெருமானை பரம்பொருளாகத் துதித்து குருவாக வரிக்கும் போது அந்த ஆற்றல் எம்மைச் சூழ இருந்து காக்கும் தன்மையுடையது என்பது இந்த பாடலின் பிரயோகமாம். 

முருகன், தனிவேல் முனி, நம் குரு என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே


முருகன் தனிவேல் கொண்ட முனிவன், நம்முடைய குரு என்று எப்படி அறிவது? அவன் வெறும் அறிவினால் அறியும் தரத்தில் உள்ளவனோ! உருவம் அற்றவன், அருவமும் அற்றவன், உள்ள பொருளும் அன்று! இல்லாத பொருளும் அன்று, இருளும் அன்று, ஒளியும் அன்று என்று எல்லாப் பொருளுக்கும் உள்ளே நிற்கும் பரம்பொருள் அன்றோ அவன்! 

இந்தப் பாடலில் முருகனை குரு தத்துவமாக, பரம்பொருள் தத்துவமாக உருவகித்து பாடுகிறார். வேல் என்பது பூரண ஞான சக்தி தத்துவம், தனிவேல் முருகன் என்பது அவன் பரிபூரண ஞான சக்தியை உடையவன், அதனால் நம் குரு என்று கூறுகிறார். அவனது ஞானசக்தியையும், குருத்தன்மையும் எமது சாதாரண அறிவினால் புரிந்துகொள்ள முடியாது. அவன் அருள் இருந்தால் மாத்திரமே அறிந்து கொள்ள முடியும். 

முருகனின் பரம்பொருள் தன்மையை எவரும் சுருக்கி விடமுடியாத படி நீங்கள் உருவில் தியானித்தால் அவன் உருவத்தையும் தாண்டியவனாக இருக்கிறான். அருவம் என்று உணர்ந்தால் அவன் அருவம் மாத்திரமல்ல, இருக்கும் பொருளில் மாத்திரம் அவன் இல்லை. அவன் இருளும் அன்று, ஒளியும் அன்று என எல்லாவற்றிலும் நிறைந்து காணப்படும் பரம்பொருள். இப்படி முருகனின் பரம்பொருள் தன்மையை எம்முள் தியானிக்க அந்தப் பரம்பொருள் அறியாமையை நீக்கும் குருவடிவாக எம்மை ஞானத்தில் செலுத்தும் என்பதே இந்தப்பாடலின் ஆன்ம முன்னேற்றப் பிரயோகமாகும். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...