இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால்மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்
Sunday, August 17, 2025
கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 06
கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 06
********************************************
கணவன் மனைவி அன்னியோன்யம் பெற
***********************************************
முன்னைய பாடலில் அருணகிரி நாதர் பெண்ணாசையை நீக்க வேண்டும், மாயை என்றவுடன் பலரும் தம்முடன் தர்மப்படி வாழும் மனைவியையும் மாயா சக்தி என்று எண்ணிக் குழம்புவதுண்டு. அந்தக் குழப்பத்தை நீக்க இந்தப் பாடலில் அழகாக விளக்குகிறார்.
இந்தப்பாடலிற்கான மந்திரப் பிரயோகத்தை சித்த புருஷர் மாதரைத் தழுவ
(பெண் புருஷர் கூடாத பேர்க்கு) என்று பெயரிட்டுள்ளார். இதன் அர்த்தம் திருமணம் செய்துகொண்ட கணவன் மனைவி கிரகதோஷத்தாலோ, மனக் குழப்பத்தாலோ, வேறு வினைகளாலோ ஒருவருடன் ஒருவர் அன்னியோன்யமாக வாழ் முடியவில்லை என்றால் இந்தப்பாடலின் பொருளுணர்ந்து முருகப்பெருமானை தியானித்து இந்த மந்திரப் பிரயோகத்தைச் செய்தால் அன்னியோன்யம் ஏற்பட்டு இன்பமாக வாழலாம்.
ஏன் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் மனப் பிளவு வருகிறது. அடிப்படையில் ஒருவரை ஒருவர் மதித்துப் போற்றாமல் தாழ்மையான, ஆணவமான எண்ணங்களை தமக்குள் உருவாக்கிக்கொள்வதால். ஒருவன் மனைவியை மதித்து, அவளின் ஆலோசனை பெற்று அவள் மனது கலக்கமுறாமல் செயலை செய்பவனாக இருந்தால் மாத்திரமே அந்தப் பெண் ஞானசக்தியாக கணவனின் செயலுக்கு ஊக்கம் தரும் சக்தியாக செயற்படுவாள். அப்படியில்லாமல் மரியாதை கொடுக்காமல், ஆணவத்தால் அவமதிக்கப்படும் பெண் மாயாசக்தியாக மாறி அவனின் வாழ்க்கையை அவனுக்குத் தெரியாமலே நரகமாக்குவாள். இந்த உண்மை தெரியாத ஆணவம், அறியாமை நிறைந்த ஆண்கள் பலர் தமது நிம்மதி கெட்டு, மன அழுத்தத்திற்கு உள்ளாகி ஆண்மை அழிந்து போய் நோயுறுவதைக் காணலாம்.
ஒருவன் வாழ்க்கையில் இன்பமாக ஞானம் பெறவேண்டும் என்றால் அவனது இச்சா சக்தி - will power சரியாக இயங்க வேண்டும். இந்த இச்சக்தியின் குறியீடே வள்ளி! எமது இச்சா சக்தி எளிமையாக, பக்தியுடன் இருக்கும் போது அதை நாம் மதித்தால் எம்மால் மனவுறுதியுடன் காரியமாற்ற முடியும்.
வள்ளி முருகனின் வலது புறமாக தாமரை மலருடன் நிற்பாள்.
இனி பாடலைப் படித்த பின்னர் அதன் தத்துவ விளக்கமும், பிரயோகமும் காண்போம்.
திணியான மனோசிலை மீதுனதாள்
அணியார் அரவிந்தம் அரும்பு மதோ
பணியாவென வள்ளிபதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே
திணி ஆன மனோ சிலை மீது - சிலை போன்ற கடினமான மனமாகிய கல்லின் மீது,
உனதாள் - உனது பாதம்
அணியார் அரவிந்தம் அது அரும்புமதோ - அழகு மிகுந்த (வள்ளியின் கையில் உள்ள) தாமரை மலருவது என்ன ஆச்சரியம்?
பணி யாவை என? - எனது வேலைகள் எவை என
வள்ளிபதம் பணியும் - வள்ளியின் பாதங்களைப் பணிந்து
தணியாத - என்றும் குறையாத
அதிமோக - காதல் அதிகமாக
தயாபரனே - கருணைக் கடவுளே
வள்ளியின் பாதங்களைப் பணிந்து எனது பணிகள் யாவை என்று வினாவும் என்றும் குறையாத காதல் உடைய கருணைக் கடவுளே, எனது கல்போன்ற இறுகிய ஆணவ மனதில் அந்த வள்ளியின் கையில் இருக்கும் தாமரை மலர் போன்ற உனது பாதங்கள் எப்போது மலரும்?
முருகன் அருணகிரி நாதருக்கு குரு, குருவின் பாதத்தை ஆணவமயமான கல்போன்ற மனதில் மலரச் செய்ய முருகன் தனது மனைவியின் பாதத்தை ஆணவமின்றி பணிந்து நான் செய்ய வேண்டிய வேலை என்ன என்று கேட்கும் காதல் மிகுந்தவன் என்று சொல்லிக் காட்டுகிறார். அதாவது மனைவியின் பாதத்தைப் பணிந்து ஆணவமற்ற நிலை எம்மிடமிருந்தால்தான் எமது கல்போன்ற மனதில் தாமரை போல் குருவின் பாதம் மலரும்.
இந்தப்பாடலிற்கு சித்த புருஷர் புருஷர் மாதரைத் தழுவ என்று பிரயோகம் எழுதியிருக்கிறார். அதாவது இந்தப் பாடலின் பொருளைப் புரிந்துகொண்டால் அந்த ஆணிற்கு அவனுடைய மனைவி வசமாகி அன்னியோன்யமாகிவிடுவாள் என்பது இதன் அர்த்தம். எப்படி மனைவியை வசப்படுத்துவது என்பது சர்வ வல்லமையுடைய அந்த முருகக் கடவுளே தனது மனைவியான வள்ளியிடம் எப்படி நடக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டால் நாமும் வாழ்க்கையில் இன்பமாக இருக்கலாம்!
முதல் பிரச்சனை எமது ஆணவத்தால் கல்லாகிப் போன மனம்; இந்த மனம் வள்ளியில் கையில் இருக்கும் தாமரை போல் மலரவேண்டும். அதற்கு முருகன் என்ன செய்கிறான், என்றும் குறையாத காதலும், கருணையுடனும் மனைவியின் பாதத்தைப் பணிந்து என்ன செய்ய வேண்டும் என்று அன்புடன் வினாவுகிறான். இப்படிச் செய்யத் தெரிந்த ஆணிற்கு மனைவி வசப்படாமல் இருப்பாளோ?
இப்படிச் செய்ய என்னால் முடியாது என்று எண்ணினால் இந்தப் பண்பு வர என்ன செய்ய வேண்டும்?
இந்தப் பண்பை எம்மைல் உருவாக்குவதுதான் மந்திர யந்திரப் பிரயோகம். இந்தப்பாடலுக்கு சித்தர்பிரான் ஒரு மூல மந்திரமும், யந்திரமும் தந்திருக்கிறார். இந்தப்பாடலின் அர்த்தம் புரிந்து மந்திர சாதனையும் செய்துவர உம்மில் இந்தப் பண்பு உருவாகும்.
மனைவிடம் குன்றாத காதலும், கருணையும், அன்பும் பண்பும் செய்யத் தெரியாதவனின் மனம் மலராது. அப்படி மலராத மனதில் முருகனின் பாதங்களும் மலராது! தர்மப்படி மணந்த மனைவியின் மனதை முருகனைப் போல் குளிரச் செய்தாலே அந்தப்பண்பு குருவின் திருவடியை மலரச் செய்யும் என்பது இந்தப் பாடலின் பிரயோக சூட்சுமமாம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.