குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, August 14, 2025

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 01 :

 கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 01 :

**************************************************
தேவி முருக உபாசனையில் சித்தி பெற கணபதியின் அருள் வேண்டிய பிரயோகம்
****************************************************
கந்தரனுபூதியின் மந்திரப் பிரயோகங்களை 1959ம் ஆண்டளவில் சென்னையில் மயிலாப்பூர் மயானத்தில் வசித்த ஒரு சித்த புருஷர் தியாகராஜ முதலியார் என்ற முருக உபாசகருக்கு ஏட்டுச்சுவடிகளில் ஒவ்வொரு பாடலுக்குமுரிய பிரயோக யந்திரமும், மூல மந்திரமும் சொல்லிக்கொடுக்க அதை அவர் பதிப்பித்தார்.
அவர் பதிப்பித்த நூலில் அவர் அவற்றை பலருக்குச் சொல்லிக் கொடுத்து பெற்ற பலன் களுடன் நூலாக வெளியிட்டார்.
அந்த நூல் முருக உபாசகர்களுக்கு ஒரு பெரும் பொக்கிஷம். முதலாவது கணபதி துதிப் பாடலை அவர் ஒரு அமெரிக்காரான Edward James என்பாருக்கு தேவிஉபாசனையில் ஏற்படும் தடைகளை நீக்கும் கணபதி உபாசனையாக உபதேசித்து அவர் பெற்ற அனுபவத்தை விளக்கியுள்ளார். இங்கு நாம் இவற்றைக் கற்றபோது ஒவ்வொரு பாடலுக்கும் பெற்ற அனுபவ விளக்கவுரையையும், தியாகராஜ முதலியார் தந்த பிரயோகங்களை தருகிறோம். பயன்படுத்த விரும்புவர்கள் அவரவர் குருவைக் கட்டாயம் கேட்டு இதைப் பயிற்சிக்க வேண்டும். எந்த தெய்வ, மந்திர சாதனையும் புத்தகத்தை, யூடியுபை, பேஸ்புக்கைப் பார்த்துச் செய்வது முற்றிலும் தவறானதும், மனதை மாயையில் இருத்து உண்மையான முன்னேற்றம் எப்போதும் பெறமுடியாதபடி ஆணவத்தில் சிக்கவைத்துவிடும்.
அப்படியானால் ஏன் இவற்றைப் பதிவிடுவது என்ற கேள்வி வரலாம், தகவல் அனைவருக்கும் கிடைக்கும் படி செய்தால் வரும் தூண்டலால் ஒரு சிலராவது குருவை அண்டிச் சரியான முறையில் சாதனை செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான்.
இனி கந்தரனுபூதி கணபதி துதி, இந்த துதியும், மூலமந்திரமும், யந்திரமும் தேவி உபாசனையின் தடைகளை நீக்கும் கணபதியின் அருளாம்!
ஆடும் பரிவேல் அணிசேவ லெனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
சாடுந் தனியானை சகோதரனே.
இங்கு ஆடும் பரி என்பது மயில், பரி என்பது வாகனம் என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும். முருகனின் ஆடுகின்ற வாகனமாகிய மயில்,
அடுத்து வேல்
அணிசேவல் என்றால் அணி என்றால் அழகு என்று அர்த்தம் கொடியிற்கு அழகு செய்யும் சேவல் இந்த மூன்றையும் கூறி
தனது பாடும் பணியை அருள்வாய் என்று வேண்டிக்கொண்டு போரில் தனியாக கயமுகாசூரனை அடித்து விழுத்திய அந்த முருகபெருமானின் சகோதனே என்று கணபதியை விளிக்கிறார்.
நுட்பமான கணபதி துதி, தன்னுடைய இறைவனாகிய முருகனை மாத்திரமே பாடி கடைச் சொல்லை சகோதரனே என்று வைத்து கணபதியைத் துதிக்கிறார். எப்படிப்பட்ட நுண்ணறிவுடனான பாட்டு!
கயமுகன் = பேராசை, அகந்தை, வன்முறை போன்ற தீமைகளின் உருவகம்.
முருகன் வேல் = ஞானம் மற்றும் தெய்வீக அருள்.
கயமுகனை முருகன் வெல்வது = ஞானமும் அருளும் சேர்ந்த தெய்வீக சக்தி, அகந்தை மற்றும் அறியாமையை முறியடிப்பது.
இந்தப் பாடல் சில முருக உபாசனை இரகசியங்களையும் சொல்லித்தருகிறது. எடுத்தவுடன் எவரும் சுத்தப்பிரம்மமாகிய சுப்பிரமணியரை அடைய முடியாது. அவர்கள் முதலில் மயில், வேல், சேவல் ஆகியவற்றின் அர்த்த ஞானம் புரிந்து அதன்படி தம்மைப் பக்குவப்படுத்த வேண்டும்.
மயில் ஆடிக்கொண்டிருப்பது, அது எமது பிராணன், எப்போதும் சலனித்து ஆடிக்கொண்டிருப்பது, அதன் மீது சண்முகனை ஏற்றி வைக்க பிராணன் அடங்கி குண்டலினியாகிய பாம்பினை காலில் அடக்கிக் கொள்ளும்.
பிறகு வேல் சக்தியாயுதம். சக்தியின் அருள் இருந்தால்தான் முருகனின் அருள். எது எமது ஞானம். மலங்கள் அகன்ற மனதில் ஞான சக்தி உதிக்கும்!
அணியான சேவல் என்பது மனம், சேவலின் குணம் மமதையால் கொக்கரித்துக்கொண்டிருப்பது. அதை சுப்பிரமணியருக்கு அணியாக - அழகான கொடியாக்கிவிட்டால் மனதின் கொக்கரிப்பு அடங்கிவிடும்.
ஆக ஒருவன் முருக உபாசனையில் சித்தி பெற வேண்டும் என்றால் ஆடுபரியாகிய பிராணனில் சுப்பிரமணியரை ஏற்ற வேண்டும், ஞான சக்தியான வேலை வணங்கி சக்தி அருள் பெற வேண்டும், மனதை முருகனின் அணியாக கொடியாக்கவேண்டும். இதற்கு எமக்குள் இருக்கும் துர்குணமான கயமுகாசூரனை அடித்து வீழ்த்த வேண்டும்!
இவையெல்லாம் அந்த சுப்பிரமணியனின் சகோதரனான கணபதியின் அருள் இருந்தால் மாத்திரமே சாத்தியமாகும்!
இந்தப் பாடலுக்குரிய மந்திரப் பிரயோகம் வேண்டுபவர்கள் வாட்ஸப் அனுப்புங்கள்: 077 627 1292

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...