குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, August 25, 2025

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 11

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 11

*************************************************

மெய்ப்பொருள் காண - பாபக்கர்மங்களை வென்று குண்டலினி விழிக்க

**************************************************** 



இந்தப் பாடலுக்கு சித்தர் பிரான் பிரயோகமாக இட்ட தலைப்பு "குளிகை மோகனம் பலிக்க (தளிகை சேர்க்க) என்பதாகும். 

குளிகை என்ற சொல்லின் அர்த்தம் உருண்டை, மாத்திரை என்று பொருள் பட சித்த மருத்துவத்தில் பாவிக்கப்படுகிறது. இந்தப் பொருளை எடுத்துக்கொண்டே ஒரே வரியில் இதன் பயன்பாட்டினை விளக்காமல் தியாகராஜ முதலியார் முதலானோர் பொருள் செய்துள்ளனர். 

ஆனால் இந்தப்பாடலிற்கும் இந்தச் சொல்லிற்கும் மிகுந்த நெருக்கமான தொடர்பு உண்டு. இங்கு சித்தர் பிரான் இட்ட தலைப்பு குளிகை மோகனம் என்பதாகும். அதாவது குளிகையை மோகிக்கச் செய்வதற்கு என்று இதன்பொருள். 

குளிகை என்பது குளிகன் காலம் எனப்படும் நேரமாகும். சனியின் உபகிரகமான குளிகை காலம் சாதாரண வேலைகளுக்கு உகந்த நேரமாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஜபம், தியானம், தானம், பித்ரு கர்மா போன்றவற்றிற்கு ஏற்ற நேரமாகக் கருதப்படுகிறது. சனியின் நேரம் காரியத்தடைதரும் என்றாலும் பாவ நிவர்த்திக்குரிய காலமும் ஆகும். இந்த நேரத்தில் மரணம் நிகழ்வது கர்மக் காரகனான சனியின் ஆதிக்கத்தில் பாவங்கள் நீங்கி உயிர் நன் நிலை அடைவதாகச் சொல்லப்படுகிறது. இந்த குளிகனையே மாந்தி என்றும் சொல்லப்படுகிறது. 

குளிகன் பற்றி பராசர ஹோரா இப்படிச் சொல்கிறது: 

ஶனீயம்ʼ சாபரம்ʼ ஜ்ஞேயம்ʼ மாண்டி³ நாம க்³ரஹம்ʼ ஶுப⁴ம் .

ஸதா³ து பாபகர்மாணம்ʼ காரகோ மரணஸ்ய ச ..

சனியோடு அறியப்படவேண்டிய மற்றொரு கிரகம், மாந்தி என்று பெயர் கொண்ட இந்தக் கிரககம் சுபமானது என்றாலும் பாபக் கர்மத்தையும், மரணத்தையும் குறிகாட்டுகிறது. 

இந்தப் பதினொராவது பாடலில் அருணகிரி நாதர் இந்த மாந்தியின் காரகத்துவமான மரணம், பாபக் கர்மம் இரண்டையும் வெல்லும் வழியினைப் பற்றிக் கூறுகிறார். 

கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே 


நாகாச்சல வேலவனே, ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என நான் கு வித கவிபாடும் ஆற்றலைத் தந்தவனே, தேவலோக சிகாமணியே நான் மரணத்தை நெருங்கும் போது எனது உற்றார் உறவினர்கள் எல்லாம் கூவி அழுது ஒரு பாவி உடலைவிட்டு செல்வதைப் போல் அல்லாமல் மெய்ப்பொருளை அறிந்து உன் திருவடியை அடையும் நிலையைத் தருவாய்! 

இங்கு நாகச்சலம் என்பது குண்டலினி விழிப்பைக் குறிப்பது. குண்டலினி விழித்தவன் குளிகனிடம் சிக்க மாட்டான். குளிகனை வசப்படுத்தியவன் ஆவான். இந்தப்பாடலின் பிரயோகம் குளிகை மோகனம் என்பதன் அர்த்தம் முருகனை வழிபட்டு குண்டலினி விழிப்படைந்து சாதாரண மரணமாக குளிகனிடம் பாபக்கர்மங்களில் சிக்காமல் மெய்ப்பொருள் அறிந்து முருகன் திருவடியை அடைவதாகும். 

குளிகை மோகனம் என்பதன் அர்த்தம் பாபக்கர்மங்களை செய்பவர்களின் மரணத்திற்கான காரகனான குளிகனை முருக உபாசனையால் மோகிக்கச் செய்து குண்டலினி விழிப்புடன் மெய்ப்பொருளை அறியும் நிலையைப் பெறுவதாகும். 

இந்தப் பாடலின் மந்திரப் பிரயோகத்தால் ஒருவன் தனது பாபகர்மங்கள் நீங்கி குளிகனால் வரும் மரணம் நேராமல் மெய்ப்பொருள் கண்டு குண்டலினி விழிப்புற்ற யோகியாக மாறுவான். 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...