குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, August 26, 2025

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 12


*******************************************
களவு வெல்ல - சித்தவிருத்தி அடங்கி யோக சித்தி பெற



 பன்னிரெண்டாவது பாடலிற்கு சித்தர் பிரான் இட்ட மந்திரப் பிரயோகத் தலைப்பு "களவு வெல்ல" என்பதாகும்.  இதன் பிரயோகமாக இரண்டு விஷயங்களைச் சொல்கிறார். என்னிடமிருந்து களவாடப்பட்ட பொருட்களைத் திரும்பப் பெறவும், களவு ஏற்படாமல் பாதுகாக்கவும் என பௌதீகமான களவினைத் தடுக்கும் வழியாக இந்தப் பாடலில் மந்திரப் பிரயோகத்தைச் செய்யலாம். அதேபோல் மனதினை புலன்கள் களவாடிவிடாமல் சும்மா இருக்கும் யோக சித்தியைப் பெறவும் இந்தப்பாடலின் மந்திரப் பிரயோகத்தைச் செய்யலாம்.

யோகத்தின் மிக உயர்ந்த சித்தி சும்மா இருத்தல். இதன் அர்த்தம் மிக ஆழமானது! இதை பதஞ்சலி சித்த விருத்தி நிரோதம் என்று சொல்கிறார். அனேகர் ஆன்மீகம் என்றவுடன் உலகப் பற்றுக்களைத் துறந்து காவியுடை உடுத்திக்கொண்டு, எங்காவது திருவண்ணாமலை, காசியில் சென்று அமர்ந்து விட்டால் மோக்ஷம் பெற்றுவிடலாம் என்று நம்புகிறார்கள். வேறு சிலர் ஒன்றுமே செய்யாமல் புலன் களை அடக்கிவிட்டால் ஆன்ம ஞானம் கிட்டும் என்று நம்புகிறார்கள். ஆனால் இவை ஒன்றும் உண்மையில்லை! கண்களை மூடி, காதைப் பொத்தி ஒரு அறையில் அமர்ந்து கொண்டு புலன் களுக்கு எந்தத் தூண்டுதலும் கொடுக்காவிட்டாலும் உள்ளே நாம் ஏற்கனவே பெற்ற அனுபவத்தால் பதிவு செய்த சித்தப்பதிவுகளிலிருந்து எழும் எண்ண அலைகள் ஒருவனை உண்மையில் சும்மா இருக்க விடாது. யோகத்தில் சும்மா இருத்தல் என்பது நான்கு தளங்களில் நடைபெறவேண்டும். 

புலன் கள் அடங்கிய பிரத்தியாகார சித்தி 

உடல் அசையாமல் தியானத்திற்கு உகந்ததாக ஆசன சித்தி

மூச்சு தீர்க்கமாக கும்பக நிலையை அடையும் பிரணாயாம சித்தி

மனம் ஏகாக்கிரமடைந்த தாரணா சித்தி

இந்த நான் கும் அடைந்தால் மாத்திரமே உண்மையில் சும்மா இருக்க முடியும். இல்லாவிட்டால் சித்தத்தில் எழும் அலைகளால் அலைக்கழியப்படும் ஒருவனாகவே இருப்பான். 

இப்படி சும்மா இருக்க முடியவில்லை என்றால் எமது புலன் களை, உடலின் ஆற்றலை, மனதை இயற்கையான மாயா சக்தி களவாடுகிறது என்று அர்த்தம். இந்தக் களவாடலைத் தவிர்த்து சும்மா இருக்கும் வழியை இந்தப்பாடலில் அருணகிரிநாதர் கூறுகிறார். இனிப்பாடலைப் பார்த்துவிட்டு பிரயோகத்தை உரையாடுவோம். 

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

செம்மானுடைய மகளாகிய வள்ளியம்மையாரைத் திருடும் திருடன், மிகப்பெரியவன் அந்த முருகன், அவன் பிறவாத, இறவாதவ நித்யன், குருவாக வந்து சும்மா இரு, சொல் அற என்று கூறியவுடன் அதன் பொருள் தெரியாதவனாக இருந்தாலும் அம்மம்மா அதை நான் அனுபவித்தேனே! 


அருணகிரி நாதருக்கு கிடைத்த உபதேச மகா வாக்கியம் சும்மா இரு, சொல் அற என்பதாகும்! இந்த உபதேசத்தின் உண்மை யோக அர்த்தம் அவருக்கு விளங்கவில்லை என்றாலும் உடனடியாக அனுபவத்தில் சித்தத்தின் விருத்தியும், மனம் அடங்கி, அதனால் உருவாக்கு வாக்கும், சொல்லும் அடங்கி மௌன நிலை வாய்த்து யோகசித்தி பெற்றார். இதற்கெல்லாம் காரணம் அந்த பெம்மான் முருகனிடமிருந்து தீக்ஷையாக் கிடைத்த சக்தி நிபாதம். முருகனுக்கு சித்த விருத்திகளை அடக்கி மௌன நிலை தந்து யோக சித்தியைத் தரும் ஆற்றல் இருப்பது எங்கனம்? அவன் இந்தப் பிரபஞ்சத்தில் சலனத்தை ஏற்படுத்து பராசக்தியின் ஆற்ற்லை வேலாக - ஞான சக்தியாகப் பெற்றவன், இச்சைத் தூண்டும் இச்சக்தியாகிய வள்ளியை திருடி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன், செயலைத் தூண்டும் கிரியா சக்தியான தெய்வானையை மணந்துகொண்ட பெரியவன். ஆகவே முருகனுக்கு பிரபஞ்சத்தின் அனைத்துச் சலனங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டென்பதால் அவன் அருளால் ஒருவனுக்கு சும்மா இரு, சொல் அற என்ற நிலை இலகுவாக வாய்க்கும். 

அதேபோல் இந்தப் பாடலிற்கு பிரயோகமாகச் சொல்லப்படும் "களவு வெல்ல" என்ற உலகியல் தேவையும் சாத்தியமாகும். களவு, திருட்டு என்பது சலனிக்கும் பேராசை மனதின் செயலாகும். இந்தச் சலனத்தை முருகனை வேண்டி பிரயோகம் செய்ய எம்மிடமிருந்து களவு போதலும், களவாடப் பட்ட பொருள் திரும்பலும் நடக்கும் என்பது இதன் அர்தமாம். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...