குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, August 15, 2025

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 04 :



******************************
ஆன்ம சாதனைக்கு மனைவி, கணவன், குடும்பம் ஒத்துழைக்க
****************
இந்தப் பாடலுக்கு தியாகராஜ முதலியாருக்கு உபதேசித்த சித்த புருஷர் கொடுத்த தலைப்பு "எதிரிவினையால் எரிந்தகுடிக்கு" என்பதாகும். அதாவது எதிரிகளால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் அந்தப் பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்குரிய பிரயோகம் இந்தப் பாடல்.
ஆனால் தியாகராஜ முதலியால் இந்தப்பாடல் பற்றறுத்து ஆன்ம முன்னேற்றத்திற்கான பிரயோகம் என்று கூறுகிறார்.
உங்கள் மனைவி, பிள்ளைகள் உங்கள் ஆன்ம சாதனைக்குத் துணையாக இல்லாமல் தொல்லையாக இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்தப் பாடலின் பிரயோகம் உங்களுக்கானது.
பலருக்கு ஆன்ம சாதனைக்கு அவர்களுடைய பந்தப்பட்ட எண்ணமே காரணம்! மனைவி, பிள்ளைகளைப் பற்றி தேவைக்கதிகமான சிந்தனை, தான் இல்லையென்றால் அவர்களுக்கு என்ன ஆகிவிடுமோ என்ற அதீத பயத்தால் ஆன்ம விசாரத்திற்கு நேரம் ஒதுக்காமல், உழைப்பு, குடும்பம் என்று ஓடிய வண்ணம் இருப்பார்கள். இறுதியில் அவர்கள் அப்படி நினைத்த குடும்பம் ஒரு காலத்திற்குப் பின்னர் இவர்களைத் தொல்லையாகக் காணத் தொடங்கும் போது இவர்களுக்காக எப்படியெல்லாம் உழைத்தேன், எனக்கு சிறிதும் மரியாதை தருகிறார்கள் இல்லையே என்று புலம்புவார்கள்.
எம் குரு நாதர் கண்ணைய யோகியார் கூறுவார், மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்போருக்காக தனது சாதனையை விட்டுக்கொடுக்காதவனே என் மாணவன் என்று, அதுபோல் மனைவி, பிள்ளைகளுக்கு கடமை செய்கிறேன் என்று தன் ஆன்ம முன்னேற்றத்திற்கு தினசரி வாழ்க்கையில் நேரம் ஒதுக்காதவன் மும் மலங்களால் பீடிக்கப்பட்டவன். சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய மூவரும் முறையே ஆணவ கன்ம மாயா மலங்களின் உருவங்கள். இந்த மூன்று மலங்களும் வளைபட்ட மாதொடு பற்றுக்கொள்ளும் போது இயல்பாக வரும். குடும்பத்தின் மீது கொண்ட பற்று மாயா சொரூபம். அவர்களை ரட்சித்து காக்கும் முயற்சி கரும பந்தம். என் மனைவி என் மக்கள் என்கிற இடையறாத எண்ணமே
ஆணவம்.
இந்தப்பாடலில் சாதகன் இப்படி மயங்கக்கூடாது என்று சொல்லும் போது வளைபட்ட மாது என்று கணவனின் ஆன்ம முன்னேற்றத்திற்கு அழகு சேர்க்கும் மனைவியைப் பற்றியும் சூசகமாக உரைக்கிறார். எல்லாப் பெண்களும் ஒருவனுக்கு மாயை உருவாக்கி கர்ம பந்தம் ஏற்படுத்துவதில்லை! சில பெண்கள் ஞானத்தை தரும் ஞான சக்தியாகவும் சிலருக்கு வாய்ப்பர்! அதைச் சரியாகப் புரிந்து ஒருவன் வீண்பற்றுக்களை உருவாக்கக்கூடாது என்பதை முதல் இரண்டு வரிகளில் கூறுகிறார்.
இனிப்பாடலை ஒருதடவை படித்துக்கொண்டு உரைக்குச் செல்வோம்.
வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனும்
தளைபட்டழியத் தகுமோ தகுமோ
கிளைபட்டெழு சூருரமும் கிரியும்
தொளைபட்டுருவத் தொடு வேலவனே
இங்கு அருணகிரி நாதர் நுட்பமாக ஆன்ம விசாரத்திற்கு, இறை சாதனைக்கு மனைவி, பிள்ளைகள் தளையாக ஆக்கிவிடக்கூடாது என்பதை தகுமோ தகுமோ என இரண்டு தடவை விதந்துரைக்கிறார். இரண்டு தடவை கூறப்படின் அது மிக முக்கியமான உபதேசம் என்பது மரபு!
ஆணவ, கன்ம, மாய மலங்களை சூரபத்மனாகவும், சிங்கமுகன், தாரகனாகவும், க்ரௌஞ்ச மலையாகவும் இறைவனை மறைக்க அந்த மலங்களை அந்த வேலன் தனது வேலால் துளைத்து தனது அணியாக - சேவலும், மயிலுமாக - அழகாக்கிக் கொண்டான். அதுபோல் அந்த வேலனை வழிபட ஆணவம், கன்மம், மாயையை உருவாக்கும் குடும்பம் முருகனின் வேல் எனும் ஞான சக்தியால் சாதகனின் குடும்பத்தை ஆன்ம விசாரத்திற்கு ஒத்துழைக்கும் ஞான சக்தியாக மனைவி, குடும்பத்தினரை மாற்றும் வல்லமை உடையது முருக உபாசனை!
இந்தப்பாடலைப் படிக்கும் போது உங்கள் குடும்பத்தினரின் அஞ் ஞானம் அழிந்து, மும்மலங்கள் அழிந்து ஞான சக்தி விழிப்படைவதாக பாவிக்க வேண்டும்!
இதற்குரிய தனியான யந்திரமும் மூல மந்திரமும் உண்டு!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...