குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, August 18, 2025

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 07




ஏழாவது பாடலிற்கு சித்தர் பிரான் தந்த தலைப்பு  "தீராப்பிணி தீர" என்பதாகும். இந்தப்பாடலில் அர்த்தம் புரிந்தால் நோய் ஏன் உருவாக்கிறது? எப்படிக்குணமாகிறது என்ற சூக்ஷ்ம விளக்கம் புரியும். 

எமது சித்த ஆயுர்வேத தத்துவத்தில் உடலின் பஞ்சபூத சம நிலை  கெட்டு, முத்தோஷம் சம நிலை இல்லாமல் போகும் நிலையில் எமக்கு நோய் உருவாகிறது. 

நோய் ஸ்தூல உடலில் வெளிப்பட முன்னர் அது சூக்ஷ்ம சரீரமான அந்தக்கரணங்களிலேயே வெளிப்படும். அல்லது நோய் ஸ்தூல உடலில் உருவாகுவதற்கான காரணங்கள் அந்தக்கரணங்கலில் உருவாகும். 

அந்தக்கரணங்கள் என்றால் மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்ற நான் குமாம். இந்த நான் கு கருவிகளிலும் இறுக்கத் தன்மை உருவாகியவுடன் இது எமது பிராண ஓட்டத்தைத் தடை செய்யும். அதீதமான நான் என்ற ஆங்காரம் சுய நலத்தை உருவாக்கும். இப்படி உருவாகும் சுய நலம் மனம், புத்தி, சித்தத்தில் குழப்பத்தை உருவாக்கி ஒருவனது பிராண ஓட்டத்தைத் தடை செய்து நோயினை உருவாக்கும். 

ஆகவே நோயிலிருந்து மீளவிரும்பும் ஒருவன் தனது ஆங்காரத்தை அழித்து அந்தக்கரணத்தில் மென்மையை உருவாக்க வேண்டும். அதற்குரிய வழியினை அருணகிரி நாதர் இந்தப்பாடலில் அருமையாகச் சொல்கிறார்.  பாடலைப் படித்தபின்னர் இதன் பிரயோக, நுணுக்கங்களை ஆராய்வோம். 

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.


கெட்டுப் போகக் காத்திருக்கும் மனமே, நீ கெடாமல் இருக்க வழி சொல்கிறேன் கேள், உனது மனதில் கரவு - ஒளிவு, மறைவு, களவு, கபடம், தீய எண்ணம்
இல்லாமல் உன்னிடம் இருப்பதிலிருந்து உதவி செய்வாய், அந்த வடிவேலனான இறைவனின் பாதத்தை நினைப்பாய், இப்படி நீ செய்தால் நீண்ட பிறவித்துன்பம் நீங்கி, உனது வினைகள் யாவும் தூள் படப் பறந்து, வினைகள் அனைத்திலிருந்தும் விடுபடுவாய் 

ஒருவன் மனதினூடாகத்தான் நோய்கள், வினைகள் அனைத்தும் முதலில் சூக்ஷ்மத்தில் வெளிப்பட்டு பின்னர் ஸ்தூலத்திற்கு வருகின்றன. அந்த மனதில் இறுக்கத்தன்மை இல்லாமல் கேட்பவருக்கு கருணையுடன் உதவி செய்யும் மனமும், அந்த மனதில் வடிவேலனான இறைவனின் நினைவும் இந்தால் அது பிறவித் துன்பத்தையும் நீக்கி எல்லா வினைகளிலுமிருந்து விடுபடச் செய்யும் என்பது இதன் விளக்கமாகும். 

சஞ்சிதம், ஆகாமியம், மற்றும் பிரார்த்தம் ஆகியவை வினைகளின் மூன்று நிலைகளாகும். சஞ்சிதம் நாம் ஏற்கனவே செய்து எமக்குப் பலன் தரக்காத்திருப்பவையாகும். இவை ஒருவன் ஞானத்தால் சுட்டெரிக்கக்கூடியவை. வடிவேலன பாதத்தை தியானம் செய்வதால் வரும் ஞானம் ஒருவனின் சஞ்சித வினையைச் சுட்டெரிக்கும். 

மனதில் கரவு இல்லாமல் உதவி செய்யும் போது எம்மில் எந்த வினைகளும் சேராது. ஆகவே ஆகமிய வினை இல்லாமல் போகும். 

சஞ்சிதம் ஏற்கனவே வெளிப்பட்டு அனுபவித்துக்கொண்டிருப்பது. இது இறைவன் பாதத்தைதியானிப்பதால் வரும் ஞானத்தால் இருப்பதை ஞானத்துடன் அனுபவித்து வினைகளிலிருந்து மீளும் ஆற்றலைத் தரும். 

ஆகவே ஒருவன் தனது பிணி தீரவேண்டுமென்றால் இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். 

கரவு மனம் இல்லாமல், ஒளிவு, மறைவு, களவு, கபடம், தீய எண்ணம் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் வேண்டும்.

இரண்டாவது வடிவேலன் இறைதாளை எப்போதும் நினைக்க வேண்டும். 

இந்த இரண்டையும் செய்தால் எல்லா வினைகளும் தீரும், பிணிகளும் தீரும். 

இப்படியான பண்பினைப் பெற இந்த பாடலுக்கு சித்தர் பிரான் ஒரு மூல மந்திரமும், யந்திரமும், பிரயோக முறையும் தந்துள்ளார். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...