குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, August 14, 2025

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 03 :


*****************************
கல்வியில் சிறக்க, எல்லா ஞானமும் பெற
*************************************
கந்தரனுபூதியின் மூன்றாவது பாடலை தியாகராஜ முதலியாரின் குருவான சித்த புருஷன் கல்வியில் மெச்ச என்று தலைப்பிட்டுள்ளார்.
இந்தப் பாடலின் பொருளையும் உணர்ந்து, தரப்பட்ட மூல மந்திரம், யந்திரத்துடன் பிரயோகம் செய்ய சாதகன் எல்லாவிதக் கல்வியிலும் சிறந்தவனாவான். இது எப்படி என்ற விளக்கத்தை இந்தப்பாடல் தருகிறது.
3. கல்வியின் மெச்ச
வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண்ட இடம்
தானோ பொருளா வதுசண் முகனே
வானோ புனல்பார் கனல்மா ருதமோ - நீ ஆகாய தத்துவமோ, ஜலதத்துவமோ, ப்ருதிவி தத்துவமோ, அக்னி தத்துவமோ, வாயு தத்துவமோ என்ற ஒழுங்கில் கேட்கிறார்.
பஞ்ச பூதங்கள் பஞ்சீகரித்த ஒழுங்கில் சொல்வதானால் ஆகாயம், வாயு, அக்னி, அப்பு, பிருதிவி என்ற ஒழுங்கில் வரவேண்டும்.
ஆனால் இங்கு தரப்பட்டுள்ள ஒழுங்கு ஆகாயம், அப்பு, பிருதிவி, அக்னி, வாயு என்ற ஒழுங்கில். இந்தப் பஞ்சபூத ஒழுங்கு மிக சூஷ்சுமமான இரகசியம்! ஒருவன் இந்த ஒழுங்கில் மனதின் சூக்ஷ்மத் தன்மையினை ஒழுங்கமைத்தால் அவன் எல்லா ஞானங்களை கிரகித்தறியும் தன்மை உடையவன் ஆவான்.
ஒருவனின் மனதில் ஆகாயத்தன்மை அதிகமாக இருக்க எதையும் ஊடுருவி உள்வாங்கும் ஆற்றல் பெறுவான்.
அதில் அப்புத்தன்மை கலக்க இறுக்கமற்ற ஜலம்போல் ஓடும் தன்மையுடைய மனதைப் பெறுவான். இப்படியான தன்மை பெற்றால்தான் அவனால் ஒரு விஷயத்தைத் தடையில்லாமல் சிந்திக்க முடியும்.
ஒருவனின் ஞாபசக்திக்கு ஆதாரம் பிருதிவி தத்துவம். பிருதிவி தத்துவம் நன்றாக இல்லாவிட்டால் ஒருவனுக்கு ஞாபகசக்தி வாய்க்காது.
ஒருவன் கேள்வி கேட்டு விசாரணை செய்யும் அறிவு அக்னி தத்துவத்தால் வருவது.
இறுதியாக வாயுதத்துவம் மிகக்குறைவாக இருந்தால்தான் சலனிக்காமல் மனதை ஒரு விஷயத்தில் நிறுத்தி ஏகாக்கிரம் செய்ய முடியும்.
இவை மாறி இருந்தால் ஒருவனால் எதையும் கற்க முடியாது, வாயுதத்துவம் அதிகமாக இருந்தால் மனம் சலனித்துக்கொண்டு உன்மத்தத்திற்குச் செல்லும், அக்னி அதிகமாக இருந்தால் வெறுமே கேள்வியின் நாயகர்களாக இருப்பார்களே அன்றி எதையும் உண்மையாகக் கற்கு ஆற்றல் இருக்காது! பிருதிவி அதிகமானால் தாமஸமாகும். ஆகவே அது அளவாக நடுத்தரத்தில் இருக்க வேண்டும். ஆகாயம் அதிகமாக இருந்தால் தால் சிந்திப்பதற்குரிய space மனதில் அதிகமாக இருக்கும். பிறகு நீர்போல தாரையாக ஓடத்தெரிந்தால்தான் எதையும் சீராகச் சிந்திக்க முடியும்.
ஆகவே கல்வியில் மெச்ச ஒருவன் தனது பஞ்ச பூத நிலையை எந்த ஒழுங்கில் வைத்திருக்க வேண்டும் என்ற யோக நுணூக்கத்தை வானோ புனல்பார் கனல்மா ருதமோ என்ற வரியால் தந்துவிட்டான் அருணகிரி யோகீஸ்வரர். எமது மனம் இந்த நிலை பெறவேண்டும் என்பதை மூன்றாவது வரியில் "யானோ மனமோ எனையாண்ட இடம்" என்று குறிப்பிடுகிறார்.
மனம் இந்தப் பஞ்சபூத ஒழுங்கில் இருந்தால்தான் ஞான்ம் உதிக்கும், நால் வேதத்தின் பொருல் விளங்கும்,
எப்படி எமது மனதை இந்த பஞ்ச பூத நிலைக்கு நிலைக்கு இட்டுச் செல்வது?
இவ்வளவு பொருளாக இருப்பது அந்தச் சண்முகனே, அவனை உபாசித்தால் எமது மனம் இந்தப் பஞ்சபூத நிலை அடைவதால் ஞானம் உதிக்கும், நால் வேதத்தின் அறிவு வாய்க்கும், கல்வியில் மேன்மையுறலாம்!
இதைச் சாதிப்பதற்கு மூல மந்திரமும், யந்திரமும் தந்துள்ளார் அந்தச் சித்த புருஷர்! இந்த பாடலின் பொருல் அறிந்து அந்த மந்திர, யந்திரத்தால் மந்திர சக்தியில் மனதை இயக்குவதால் இந்த நிலை பெறலாம்.
முறையான மந்திரப் பிரயோகம் கற்றுக்கொள்ள வாட்ஸப் செய்யுங்கள்: 077 627 1292

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...