குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, August 19, 2025

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் - 09

 காம இச்சை நீங்க

**********************************




ஒன்பதாவது பாடலிற்குரிய பிரயோகமாக சித்தர் பிரான் இட்ட தலைப்பு "பெண்ணுசை ஒழிக்க" - இதன் அர்த்தம் காம இச்சை அதிகம் உள்ள ஆண் விவேகம் இன்றி மயக்கி அவனிடமிருந்து செல்வம், பணத்தை ஏமாற்றிப் பறிக்கும் பொல்லாப்பெண்ணிடமிருந்து ஒருவனைக் காப்பாற்றும் விவேகத்தைத் தரும் பிரயோகம் இந்தப் பாடலில் சொல்லப்படுகிறது. இதுபோல் பெண்களை மயக்கி ஏமாற்றும் ஆண்களிடமிருந்தும் பெண்ணைக் காப்பாற்ற இந்தப் பிரயோகம் சொல்லப்படுகிறது. 

பலருக்கு காம இச்சையை நீக்கவேண்டும், தவறான காமத்தைத் தொடரக்கூடாது என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதைச் செயல்படுத்த முடியாமல் மீண்டும் மீண்டும் தவறான காம இச்சைக்குள் சென்றுகொண்டிருப்பார்கள்.  காம இச்சையை ஒருவன் தானாக வெல்ல முடியாது. அந்தக் காம இச்சையின் இன்பத்தை விடப் பெரியதொரு இன்பத்தை மனதிற்குக் கொடுத்தால் இந்த தாழ் இச்சையில் மனம் செல்லாது! ஒருவன் உபாசனையால் இறைஆற்றலின் உயர் இன்பத்தை ஒரு தடவை அனுபவித்து விட்டால் அவன் பிறகு பெண்கள் பின்னால் செல்லும் தாழ் இச்சையில் மனம் செல்லாது! 

இதை இராமலிங்க வள்ளலார் இப்படிச் சொல்கிறார்;

வேல் கொண்ட கையும் விறல் கொண்ட தோளும் விளங்கும் மயில் 

மேல் கொண்ட வீறுமலர் முகமாறும் விரைக்கமலக் 

கால் கொண்ட வீரக் கழலுங் கண்டாலன்றிக் காம னெய்யுங் 

கோல் கொண்ட வன்மையறுமோ தணிகைக் குருபரனே 


முருகனுடைய தரிசனத்தை கண்டவர்களால் மாத்திரமே காமன் எய்யும் மலர்க் கணைகளில் சிக்காமல் இருக்க முடியும்! ஏன் என்றால் முருகன் சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணான யோக சக்தியில் இருந்து தோற்றம் பெற்ற பரிபூரண ஞான சொருபம்! முருக உபாசனை என்பது ஒரு போர்வீரனுக்குரிய ஒழுக்கத்தைத் தரும் வீரபாவ உபாசனை! முருகனை உபாசித்தால் அவன் ஒழுக்க சீலனாக இருக்க வேண்டும். அல்லது மறக்கருணையால் ஒழுக்க சீலனாக்கப்படுவார். 

இன்று அரைகுறையாகச் சாத்திரம் படித்துவிட்டு தமக்கு இறையருள் உண்டு, ஞானம் உண்டு என்று ஆணவப்படுபவர்கள் எவரும் ஆறுமுகனாரின் விவேகம் எனும் வேலாயுதத்திலிருந்து தப்ப முடியாது. சிறு பிள்ளையாக இருக்கும் போதே பிரம்மனின் அதிமேதாவித்தனத்திற்கு குட்டு வைத்த விவேகி! முருகன் அருள் பெற்றவர்களுக்கு வேல் போன்று மாயைப் பிளந்து உண்மையைப் பார்க்கும் விவேக சக்தி இருப்பதால் எல்லோருடைய சின்னபுத்தி, தாழ் எண்ணம், உள்ஒன்று வைத்துப் புறமொன்று பேசும் இயல்பு தெளிவாகத் தெரியும்.  இப்படி விவேகம் உடைய எவனையும் யாரும் மயக்க முடியாது! 

இனிப்பாடலைப் படித்த பின்னர் பிரயோகத்தின் அர்த்தத்தினை விளங்குவோம்: 

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல, நிர்பயனே.

தேன் சிந்தும் மலர்களை கூந்தலில் உடைய மங்கையரின் மோக வலையில் மாட்டி ஊசல் போன்று ஆடிக்கொண்டிருக்கும் மனம் உடைய எனது சலனம், எப்போது ஒழியும்? தடைகள் இன்றி ஊடறுத்து செல்லும் அறத்தைப் போதிக்கும் ஞான சக்தியான வேலாயுதத்தால் க்ரௌஞ்ச மலை எனும் மாயைப் பிளந்து அழித்தவனே, துன்பமில்லாதவனே! பயமற்றவனே! 


இங்கு பிரயோகம் காமத்தால் பீடிக்கப்பட்ட மனதின் மோகம் எனும் மாயையை வேல் என்ற விவேக - ஞான சக்தி கொண்டு பிளப்பதாகும்! காம இச்சை அதிகமுள்ளவர்கள், தவறான காமத்தால் துன்புறுபவர்கள் அனைவரும் தமது மனதிலுள்ள காமத்தை க்ரௌஞ்ச மலையாகிய மாயையாகக் கருதி அதை முருகன் கையில் இருக்கும் வேல் ஊடறுத்து பிளந்து  முருகனின் நிராகுல என்ற யோகசித்தியால் வரும் பேரின்பத்தில் திளைப்பதாகத் தியானிக்க வேண்டும்! முருகன் யோகத்தால் வரும் பேரின்பத்தை அனுபவிக்கும் நிராகுலன், அதனால் மனதில் எந்தப்பயமும் அற்ற நிர்பயன்! 

முருகனின் இந்த உபாசனை மோகம் முதலிய தீயகுணங்களை ஒரு சாதகனிலிருந்து நீக்கும். இந்தப்பாடலுக்கு உரையெழுதிய தியாகராஜ முதலியார் இப்படிக்கூறுகிறார். 

"ஒழுக்க நெறி கில்லாதார் பணிவையோ பூஜையையோ அவர் ஏற்கமாட்டார். ஏற்பதென்றால் கடும் இன்னல்கள்| விளைவித்து மறக்கருணையால் ஆட்கொள்வார்கள். அவ்வள உறுதியுடன் அவனைத் தஞ்சமென்றடைவோமானால் நம் ஒழுக்க நெறியை முதலில் திருத்திப் பின்னர் ஆட்கொள்ளுவார். இவ்வனுபூதியில் 51 பாடல்களுள் 21 பாடல்களில் ஆசை அறவேண்டுமென்று கூறுகிற இடத்தில் 3 பாடல்களில் பெண்ணாசை அறவேண்டு மென்று கூறுகிறார்." 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...