குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 20, 2020

மேதா சக்தி - 09

மகாநாராயண உபநிஷத மேதா சூக்தம் ஐந்தாவது ஆறாவது ஏழாவது மந்திரங்கள். 

முதல் இரு மந்திரங்களிலும் மேதா சக்தியின் உபசக்திகளான சரஸ்வதி, இந்திரன், அஸ்வினி குமாரர்கள், அப்ஸரஸ், கந்தர்வர்களைத் துதித்து அவர்களிடம் காணப்படும் சிறப்பு மேதா சக்திகளைப் பெற்றுக் கொள்ள பிரார்த்தனை செய்யப்பட்டது. 

ஐந்தாவது மந்திரம் இந்த மேதைத்துவம் என்னிடம் உருவாக வேண்டும் என்று சங்கல்பம் செய்விக்கிறது. மேதாசக்தி என்பது நறுமணம் போன்றது, இது பிரபஞ்சம் முழுமையையும் அறியும் ஆற்றலைத் தருகிறது. இது தங்க நிற அட்சரங்களால் எம்மிடம் வந்து சேருகிறது என்று மேதா சக்தியின் நிறம் பற்றிய குறிப்பினைத் தருகிறது. இது எல்லாவற்றையும் ஊடுருவக் கூடிய ஆற்றல் உடையது. மேதா சக்தி ஒருவனை பால் போன்று போசிக்கக் கூடியது. இதை அடைவதால் ஒருவன் திருப்தியுடன் கூடிய மனதை அடைகிறான் என்று இந்த மந்திரம் மேதா சக்தியின் ஆற்றலைப் பற்றிக் கூறுகிறது. 

ஆறாவது மந்திரம் அக்னியைத் துதிக்கிறது. அக்னி என்பது உருமாற்றும் சக்தி. ஒருவன் முன்னர் குறிப்பிட்ட ஐந்து மேதா சக்திகளைப் பெற்றாலும் அவற்றை ஒன்றுடன் ஒன்று கலந்து உருமாற்றித் திறமையைப் பெற அவனுக்கு அக்னித் தன்மை நிறைய இருக்க வேண்டும். பின்னர் அக்னித் தன்மையின் மேல் இருக்க வேண்டிய சூரிய ஆற்றலை அடுத்து துதிக்கிறது. மேதா சக்தி பெற்றவன் சூரியன் போல் தனது அறிவுக் கதிர்களைப் பரப்பி மற்றவர்களுக்கு ஒளிக் கொடுக்கும் ஆற்றல் உள்ளவன் ஆவான். இவற்றை சரிவரச் செய்ய அவனது மனம் தெய்வ மனமாகிய இந்திரனுடன் இணைந்து செயற்பட வேண்டும். ஆகவே இந்திரன் மீண்டும் இந்த மந்திரத்தில் துதிக்கப்படுக்கிறார். 

கடைசியாக ஹம்ஸ காயத்ரி மந்திரம் துதிக்கப்படுகிறது. இது மேதா சக்தி அடைந்த சாதகன் அன்னப் பறவை போல் சரியானதைத் தேர்ந்தெடுத்து பிழையானதை விலக்கி வாழ வேண்டும். ஹம்ஸம் என்பது சாதகனின் ஆத்மாவும், பரமஹம்ஸம் என்பது பரமாத்மாவும் ஆகும். மேதா சக்தியின் இறுதி இலக்கு பிரம்ம ஞானம். இது ஹம்ஸமும், பரமஹம்ஸமும் ஒன்றாதல் என்ற ஜீவான்ம பரமான்ம ஐக்கியத்தைக் குறிக்கும். 

இத்துடன் நாராயண உபநிஷத மேதா சூக்தம் முடிவுற்றது. மற்றைய மேதா சூக்த விளக்கங்களை இந்தத் தொடரில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. எதிர்காலத்தில் யாராவது ஆழமாகப் படிக்க எண்ணினால் அவர்களுடன் தனிப்பட உரையாடலாம். 

தொடரும்...


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

மந்திர ஸாதனை துரிதமாக பலனளிக்க வழி

 நீங்கள் உங்கள் வீட்டைச் சுத்தப்படுத்தி அழகுபடுத்த விரும்புகிறீர்கள், இதற்கு ஒரு தொழில் சார்ந்த நிபுணரை அழைக்கிறீர்கள். அவரிடம் உங்கள் வீட்ட...