குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 20, 2020

மேதா க் - 04

சென்ற பதிவில் Cognitive ஆற்றல் தான் மேதா சக்தி என்பதைப் பார்த்தோம். முற்காலத்தில் பாரதீய ரிஷிகள் வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்கு ஒருவனுக்கு இந்த மேதா ஆற்றல் இருக்க வேண்டும் என்று கருதியிருந்தார்கள். 

இந்த மேதா ஆற்றலைப் பெற என்னென்ன வழிகள் இருக்கிறது என்பதை ஆராய்ந்திருந்தார்கள். ஆரம்பத்தில் மனித சமூகம் குழப்பம் குறைவான, வாழ்க்கையின் இலட்சியம் தெளிவாக அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருடார்த்தம் கொண்ட இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த காலத்தில், பூரண உடல் ஆரோக்கியம் இருந்த காலத்தில் அத்தகைய மனிதனிற்கு தனது மனதைப் பயன்படுத்தி மந்திர பாராயணம் போன்றவை இந்த ஆற்றலைப் பெற பயன்படுத்தினார்கள். 

இந்த வகையில் மேதா சூக்தம் எனப்படும் வேத மந்திரத்தொகுதி இந்த ஆற்றலைப் பற்றிப் பேசுகிறது. சூக்தம் என்றால் நன்றாகச் சொல்லப்பட்டது என்று பொருள்படும். மேதா சக்தி பற்றி நன்றாகச் சொல்லப்பட்டது மேதா சூக்தம் எனப்படும். இது பிரம்மத்தை அடைந்து ரிஷியாகும் நோக்கம் உள்ள மாணவர்கள் தாம் மேதா சக்தியை அடையவேண்டும் என்று மேதாவினை அடையத் துதிப்பதாக இருக்கின்றது. 

மேதா சக்தியின் நோக்கம் ஒருவன் பிரம்மத்தை அடைந்து ரிஷியாவதற்குரிய ஆற்றலைப் பெறுவதற்கே என்பது பெறப்படுகிறது. 

வேதங்களில் மேதா சூக்தம் மூன்று காணப்படுகிறது. 

மகா நாராயண உபநிஷதத்தில் காணப்படும் சூக்தம் மேதாவினை அடைய இந்திரன், அக்னி, அஸ்வினி குமாரர்கள், சூரியன், மேதா தேவி ஆகியோரைத் துதிப்பதாக வரும். 

ரிக் வேதத்திலும் வரும் மந்திரங்கள் அங்கிரஸ் முதலான சப்த ரிஷிகள், இந்திரன், அக்னி, பிரம்மா, வருணன், அஸ்வினி குமாரர், சரஸ்வதி ஆகியோரைத் துதிப்பதாகவும், அதர்வண வேத மந்திரங்களில் இந்திரன், அக்னி, வருணன், வாயு, மேதா தேவி ஆகியவர்கள் துதிக்கப்படுகிறார்கள். 

இந்தத் தெய்வங்கள் எங்கோ இருப்பதாக எண்ணத் தேவையில்லை. அண்டத்திலுள்ளது பிண்டத்திலுண்டு என்ற தத்துவத்திற்கு அமைய எமது மனம் எளிதாக ஒடுங்குவதற்கு இவற்றை வெளிமுகப்படுத்தி புலன் வழி அனுபவமாகப் பெற தெய்வங்களாக வழிபடுகிறோம். அந்த ஆற்றல்களை எமது ஆற்றல்களாக்கிக் கொள்வதே இத்தகைய வழிபாட்டின் நோக்கங்களாகும். 

இந்த மூன்று மேதா சூக்தங்களும் ஒருவன் மேதா சக்தியைப் பெற முயற்சிக்க வேண்டும் என்பதையும், அந்த மேதா சக்தி தன்னையறிந்து தனக்கு மூலமான சக்தி எதுவென்பதை அறிந்து மனித குலத்தின் மேம்பாட்டிற்குப் பயன்படும் ரிஷியாக வேண்டும் என்பதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது. 

இதற்கு பிறகு வரும் காலத்தில் குருமுகமாய் தந்திர மார்க்கத்தில் இன்னும் பல உபாசனைகள் ஏற்படுத்தப்பட்டது. 

அவைப் பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம்...


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...