மேதா என்ற சொல்லின் விஷேஷ அர்த்தம் பற்றி உரையாடுவதானால் ஆயுர்வேதம், மேதா சூக்தம் ஆகிய இரண்டிலும் இந்தச் சொல் பாவிக்கப்பட்டிருப்பதை எடுத்துக் கொள்ளலாம்.
ஆயுர்வேதத்தின்படி மேதா என்பது அறிவினை சேகரித்து வைத்துக் கொள்ளக்கூடிய அறிவின் ஒரு வகை ஆற்றல் என்றும், சுசுருத சம்ஹிதைப் பிரகாரம் புத்தியின் எந்தப்பகுதி ஒரு விஷயத்தைப் பற்றியும் ஒரே நேரத்தில் பல விஷயங்களை அவதானித்து, முழுமையாக, தடையில்லாமல், மிக நுணுக்கமாக, ஆழமாக அறிந்துகொள்ளும் புத்தியின் ஆற்றல்களின் ஒன்றே மேதா எனப்படுகிறது.
அஷ்டாங்க ஹ்ருத்யத்தின் உரை மேதாவை அறியப்படும் பொருளின் அனைத்து அமிசங்களையும் தடையில்லாமல், தெளிவாக அறிந்து அவற்றை ஞாபகத்தில் வைத்திருக்கும் அறிவு எனப்படுகிறது.
இது எமது புத்தியின் விஷேஷ அமிசம். அனைவராலும் எல்லா விஷயங்களையும் புலன்களால் அறிய முடியும். அதுபற்றி முழுமையான அறிவினைப் பெறுவதற்கு ஒருவனுக்கு மேதா சக்தி இருக்க வேண்டும்.
இதை நவீன மூளை - உளவியல் அறிவியலில் புரிந்து கொள்வதானால் Cognition என்று சொல்லப்படும்.
Cognition என்பது ஒருவன் தனது புலன்கள், சிந்திப்பது, ஏற்கனவே பெற்றுக் கொண்ட அனுபவங்கள் ஆகிய மூன்றின் மூலமும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளும்/உணர்ந்து கொள்ளும் ஆற்றல் எனப்படும்.
மனிதனின் இந்த cognition ஆற்றல்
1) உணர்வுடன் புரிதல்: ஏன் ஒரு விஷயம் நடக்கிறது என்ற தெளிவுடன் நாம் புரிந்துகொள்வது.
2) உணர்வில்லாமல் புரிதல்: ஏதோ நடக்கிறது, ஆனால் அது ஏன் நடக்கிறது, எப்படி நடக்கிறது என்ற தகவல் எமது ஞாபகத்தில் இருப்பதில்லை.
3) தெளிவாகப் புரிதல்: ஒரு விஷயத்தைப் பற்றிய முழுமையான புரிதல்
4) சுருக்கமாகப் புரிதல்: கணிதச் சமன்பாடுகள் ஒருவித abstraction
5) அக உணர்வுடன் புரிதல்: Intuition எனப்படுவது,
6) மாதிரியுருக்கொண்டு புரிதல்: Model and designs
என்ற பல நிலைகளில் செயற்படுகிறது.
மேதா என்பதைப் புரிந்துக் கொள்ள நவீன உளவியல் - மூளை அறிவியலில் Cognition என்ற சொல் பொருந்துகிறது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.