குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, August 26, 2020

தலைப்பு இல்லை

அன்றொரு காலை வாட்ஸப்பில் ஒரு செய்தி;
உங்களுடைய கட்டுரை பிரபலமான ஒரு சித்தர் குழுவில் அப்படியே பிரதி செய்யப்பட்டு தான் எழுதியது போல் அப்படியே அந்தக் குழு நிர்வாகி பதிவிட்டுள்ளார் என்று!
அதற்கு நான் அளித்த பதில் வருமாறு;
copy பண்ணுதல் என்பது கற்றல் நடவடிக்கையின் முதல் பழக்கம்! சிறுகுழந்தைகளை அவதானித்தால் அவர்கள் முதல் தமது பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்களை copy பண்ணுவதையே முதலாவதாகச் செய்வதை அவதானிக்கலாம்! ஆகவே அவர் கற்றலின் முதல் நிலையில் இருக்கிறார் என்றேன் பெருஞ்சிரிப்புடன்    
இல்லை ஐயா, கட்டாயம் உங்கள் பெயர் போடப்பட்டிருக்க வேண்டும் என்றார் என் மீது அன்பு கொண்ட அன்பர்; 
அதற்கு நான் சிரித்துக் கொண்டு சொன்ன பதில்; அவர் எனது சிந்தனைகளை, எண்ணங்களைப் பரப்பும் ஒரு கருவியாக செயற்படுகிறார்; அதில் எனது பெயர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எனது எழுத்துக்குரிய சக்தி - signature கட்டாயம் இருக்கும். நான் எழுதுவது எனது சந்தோஷத்திற்கு! எழுதிப் பதிவிட்ட பிறகு அதைப்பற்றி நான் சிந்திப்பதேயில்லை; 
மேலும் எனது எழுத்துக்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதும் பிரபஞ்சத்தில் எங்கோ மிதந்து கொண்டிருப்பதைத் தான் ஈர்த்து எழுதுகிறோம்! எல்லோரும் எங்கோ ஒரு மூலத்திலிருந்தே பெறுகிறோம்! 
யோகத்தைப் பற்றி எழுதப்படும் எழுத்துக்களைப் பிரதி எடுத்து தமதாக காட்டிக்கொள்வதில் பலரைக் கவரலாம்; பலரைக் கவர்ந்து கூட்டம் கூட்டினால் ஆன்ம முன்னேற்றம் வாய்க்காது! அது அவரது அனுபவமாக வேண்டும். இப்படி தனக்கு எல்லாம் தெரியும் என்று மக்களின் மனதிற்கு கோட்டை கட்டிக் கொண்டிருந்தால் அவற்றைக் காப்பாற்றவே தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருக்க வேண்டும்! இப்படிச் செய்து கொண்டிருந்தால் உளச்சுத்தி வாய்க்காது! ஆன்மீகமும் சித்திக்காது!
இப்படியானவர்களை நாம் குழந்தைகளைப் போல் மதிக்க வேண்டும்; எல்லோரிலிருந்தும் பிரதியெடுத்து தமது அறிவினை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்; சற்று வளர்ந்தவுடன் தமது சிந்தனை சக்தி பெருகிய பின்னர் ஏதாவது உலகிற்குத் தருவார்கள்.
எதை நாம் கொண்டு வந்தோம், எம்முடையது என்று சொல்வதற்கு! Facebook தந்த ஞானம் அனைத்தையும் share செய் என்பதே! 
ஆகவே என்னுடைய கட்டுரைகளை பிரதி எடுப்பவர்கள் தாராளமாக பிரதியெடுங்கள்! பகிருங்கள்! எமக்கு credit தந்தால் மிக்க மகிழ்ச்சி! அப்படித்தராவிட்டாலும் மிக்க மகிழ்ச்சிதான்! எமது எழுத்துக்களைப் பலருக்கும் கொண்டு செல்லும் உங்களுக்கு எமது நன்றிகளும்! பிரார்த்தனைகளும்! 
அதேவேளை நீங்கள் பிரதியெடுத்த அறிவை உங்களுடையதாக்கிக் கொண்டு புது அறிவினை உருவாக்க முயலுங்கள்! அதுவே நீங்கள் உங்களுக்கும், மற்றவர்களும் செய்யும் பெரும் தொண்டு!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...