குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, August 02, 2020

தமிழ் அரசியல் தலைமைகளுக்கு வள்ளுவரும் சாணக்கியரும் கூறும் அறிவுரைகள்

தற்போதைய தேர்தல் சூழலில் கட்சிகளையும், அவர்கள் நோக்கங்களையும் சரியாகப் புரிந்துகொண்டு யார் நல்ல தலைவர் என்பதற்கும், எது நல்ல கட்சி என்பதை அறிந்துகொள்ள வள்ளுவரும், சாணக்கியரும் நல்ல ஆலோசனை கூறியிருக்கிறார்கள். 

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு. ( 381) 

படை, குடி, செல்வம், அமைச்சர், ஆலோசனை பெற நல்ல நட்பு, கோட்டை என்னும் ஆறு உறுப்புக்களையும் சிறப்பாகப் பெற்றவன் அரசருள் சிங்கம் எனப்படுவான் என்கிறார் வள்ளுவர். 

சுவாமி அமாத்யா ஜன்பதா துர்க் கோஷா தண்ட மித்ரா இதி ப்ரக்ரிதய (6.1.1 அர்த்த சாஸ்த்ரம்)

தலைவர், மந்திரி, குடி, அடிப்படை வசதிகள், செல்வம், படை, நல்ல நட்பு ஆகிய ஏழும் உரியது அரசு என்கிறார் சாணக்கியர். 

வள்ளுவர் அரசனின் இலக்கணம் வகுக்கிறார்.

சாணக்கியர் அரசினை வரைவிலக்கணம் வகுக்கிறார்.

வள்ளுவர் தலைவன் என்ற தனியொருவனைப் பற்றிப் பேசுகிறார்!

சாணக்கியர் அரசு என்ற கட்டமைப்பின் இயல்பு பற்றிப் பேசுகிறார்

ஆக ஒரு நல்ல கொள்கையுடைய தலைவருக்கும் வழிகாட்டும் அறிவு சொல்லும் ஆலோசகர் குழு முதல் நிபந்தனை! 

அரசன் வகுக்கும் கொள்கை குடிமக்களுக்கானதாக இருக்க வேண்டும். அந்தக்கொள்கையை நடைமுறைப்படுத்த செல்வமும், அதைப் பாதுகாக்கும் அரணாக கொள்கையைக் காப்பாற்றும் படையும் இருக்க வேண்டும்! 

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியையும் ஒரு சிற்றரசாக எடுத்துக்கொண்டு மேற்கூறிய அமைப்பை ஆராயலாம். 

கட்சித்தலைவர் - சிற்றரசர் 

அமாத்யர் - அமைச்சு - கட்சியின் ஆலோசகர்கள்

செல்வம் - கட்சி நிதி

அரண் - கட்சியின் தேர்த்தல் தொகுதி, வாக்குகளைக் காப்பாற்றும் பொறிமுறை, தேர்தல் பிரச்சாரம்

குடி - தமது தேர்தல் தொகுதி மக்கள்

படை - கட்சிக்காரர்

நட்பு - கட்சிக்கு வெளியே அவர்களுக்கு உதவக்கூடிய வெளியாட்கள், கூட்டுக் கட்சி!

கட்சித் தலைவர் தேர்தலில் வெல்ல எது மக்களின் மனதை வெல்லும் தந்திரோபாயம் என்பதை தனது மதியுரைஞர்களின் அறிவுரை கேட்டு, தனது மக்களின் மனமறிந்து உபாயம் வகுக்க வேண்டும். மக்களின் மனதை அறியாமல் தேர்தலிற்கு நிதி அவசியம் என்ற மயக்கத்துடன் தனது வேட்பாளர்களைத் தேர்வு செய்தாலோ, மக்களால் நன்கு மதிக்கப்படும், மக்களுக்கு சேவை செய்யும் வேட்பாளரை ஒதுக்கினாலோ மக்களின் நம்பிக்கையை இழக்க வேண்டிவரும். 

அதுபோல் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் மனதையும் வெல்லாமல், இன்பமான, அமைதியான வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் யதார்த்தத் தேவைகளுக்கு எதையும் அரசோ, கட்சியோ செய்யாமல் அரசியல் இலக்கினை நோக்கி தலைவன் முயற்சிக்கும் போது அவனிற்கு மக்களும், படைகளும் ஒத்துழைக்காது! ஆகவே மன்னன் - கட்சித்தலைவன் தனது குடிமக்களின் அடிப்படைத் தேவைகளை முதலில் புரிந்துகொண்டு அவற்றை திறம்பட நிறைவேற்றி அதன்மூலம் அவர்கள் மனதை வெல்ல வேண்டும். அதன் பின்னரே அடுத்த இலக்கு நோக்கிச் செல்ல வேண்டும்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...