குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, August 25, 2020

தலைப்பு இல்லை

திருநெல்வேலி காந்திமதியம்மை சமேத நெல்லையப்பர் சந்ததி

மூன்றாம் திருமுறை 92 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

மருந்தவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றுமெல்லாம்

அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே

பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம்

செருந்தி செம்பொன்மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே.

என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறிச்

சென்று தாம் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பு அதுவே

துன்று தண்பொழில் நுழைந்து எழுவிய கேதகைப் போதளைந்து

தென்றல் வந்து உலவிய திருநெல்வேலி உறை செல்வர் தாமே. 

பொறி கிளர் அரவமும் போழ் இளமதியமும் கங்கை என்னும்

நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவி வெண்ணீறு பூசிக்

கிறிபட நடந்து நல் கிளி மொழியவர் மனம் கவர்வர் போலும்

செறி பொழில் தழுவிய திருநெல்வேலி உறை செல்வர் தாமே. 

காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல் செய்து அருளவேயும்

பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி

ஈண்டு மா மாடங்கள், மாளிகை மீது எழு கொடி மதியம்

தீண்டி வந்து உலவிய திருநெல்வேலி உறை செல்வர் தாமே. 

ஏனவெண் கொம்பொடும் எழில் திகழ் மத்தமும் இளவரவும்

கூனல் வெண்பிறை தவழ் சடையினர் கொல் புலித் தோலுடையார்

ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அருமறைகள்

தேனில் வண்டமர் பொழில் திருநெல்வேலி உறை செல்வர் தாமே. 

வெடிதரு தலையினர் வேனல் வெள்ளேற்றினர் விரிசடையர்

பொடியணி மார்பினர் புலியதள ஆடையர் பொங்கரவர்

வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல் செய்வார்

செடிபடு பொழிலணி திருநெல்வேலி உறை செல்வர் தாமே.

அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று

தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை

புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டு பண் முரலும் சோலைத்

திக்கெலாம் புகழ் உறும் திருநெல்வேலி உறை செல்வர் தாமே.

முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரி தரவே

உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார்

கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை

சிந்து பூந்துறை கமழ் திருநெல்வேலி உறை செல்வர் தாமே. 

பைங் கண்வாள் அரவு அணையவனொடு பனி மலரோனும் காணாது

அங்கணா அருள் என அவரவர் முறைமுறை இறைஞ்ச நின்றார்

சங்க நான்மறையவர் நிறைதர அரிவையர் ஆடல் பேணத்

திங்கள் நாள் விழமல்கு திருநெல்வேலி உறை செல்வர் தாமே.

துவருறு விரி துகில் ஆடையர் வேடமில் சமணரென்னும்

அவருறு சிறு சொலை அவம் என நினையும் எம் அண்ணலார் தாம்

கவருறு கொடி மல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத்

திவருறு மதி தவழ் திருநெல்வேலி உறை செல்வர் தாமே.

பெருந்தண்மா மலர்மிசை அயன் அவன் அனையவர் பேணு கல்வித்

திருந்துமா மறையவர் திருநெல்வேலி உறை செல்வர் தம்மை

பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன

அருந்தமிழ் மாலைகள் பாடியாடக் கெடும், அருவினையே.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...