குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, August 01, 2020

தலைப்பு இல்லை

சில நாட்களுக்கு முன்னர் மலையகத்தின் முதல் தமிழ் இலக்கியம் எது என்ற கேள்விக்கு திலகர் அவர்கள் தனது அதீத வேலைப்பழுவிற்கு மத்தியில் "கோப்பி கிரிஷி கும்மி ( பாடல்கள் ) - ஆபிரஹாம் ஜோசப் என்றவர் தொகுத்தது என்றும், அச்சு 1869 ஆஷ்பரி பிரஸ் அச்சகம்" என்றும், லண்டனில் இந்த நூலின் பிரதி இருக்கிறது என்ற அபூர்வ தகவலைத் தந்தார்!

கலாநிதி க. செ. நடராசா தனது PhD ஆய்வேடாக எழுதிய ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி என்ற நூலை கொழும்பு தமிழ்ச் சங்கம் வெளியிட்டிருந்தது. இந்த நூல் 14ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டு வரை உருவாகிய நூல்களை வரிசைப்படுத்திய நூல், ஈழத்துப் பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல ஆய்வுத் தொகுப்பு எனலாம். 

மலையகத்தின் இலக்கியப் பாரம்பரியம், எழுத்துக்கள் சார்ந்து முழுமையான ஒரு பார்வையை அறிந்துகொள்வது எப்படி என்ற கேள்விக்கு பேராசிரியர். சோ. சந்திரசேகரமும், கலாநிதி இரா. ரமேஷும் சேர்ந்து வடிவம் தந்திருக்கிறார்கள். கடந்த 150 வருடங்களுக்குள் வெளிவந்த புனைவுகள் சிறுகதை இல்லாத, 

1. சமூக, பொருளாதார, மற்றும் அரசியல், 

2. வரலாறும் இனத்துவ அடையாளம், பிரஜாவுரிமை, 

3. கல்வி, சுகாதாரம், பெண்கள், 

4. வீடு காணி மற்றும் மனித உரிமைகள், 

5. பெருந்தோட்டக் கைத்தொழில், 

6. கலாச்சாரம் மற்றும் ஆளுமை என்ற ஆறு விடயதானத் தொகுப்புகளில் தந்திருக்கிறார்கள். 

இந்த அரிய வரலாற்று ஆவணத்தை கனடா இந்திய பூர்வீக இலங்கை தமிழர் பேரவை வெளியிட்டிருக்கிறது. இன்று காலை அந்த அமைப்பின் தலைவர் ஜெ.ஜெஹிந்தராஜ் அவர்களுடன் சமூக முன்னேற்றம் பற்றிய நல்ல உரையாடலுடன் நூல் கைகளுக்கு வந்து சேர்ந்தது. 

இந்த நூலில் குறிப்பிடப்படும் நூல்கள் மாத்தளை ரோகிணி அவர்களின் உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள், ஏ. ஏ. எம் புவாஜி அவர்கள் எழுதிய மாத்தளை மாவட்ட தமிழர்களின் வரலாறும் பாரம்பரியமும் ஆகிய இரண்டு நூல்களதும் வெளியீட்டில் சிறுவயதில் தந்தையுடன் எனது தம்பி கவிதை பாட பங்கு பற்றிய ஞாபகம் இந்த நூலைப் படிக்கும் போது மீட்டக்கூடியதாக இருந்தது. 

மலையகப் பாடசாலைகளின் நூலகத்தில் இந்த நூலும் நூலில் குறிப்பிடப்பட்ட நூல்களும் இருத்தல் அவசியம், மேலும் மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியச் செயலாளர் Dr. Nishānthan Ganeshan இடம் இந்த நூலைப் பற்றி மாத்தளை பட்டதாரிகள் ஒன்றியத்தில் உரையாடுவதன் முக்கியத்துவம் பற்றி உரையாடினோம்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...