குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, August 28, 2020

தலைப்பு இல்லை

புத்தர் தனது உயிரை விடுவதற்குரிய இறுதிக் கணத்திலிருந்தார்; அப்போது அவரைத்தேடி ஸுபதன் என்றொரு மாணவன் ஞானோபதசம் பெறுவதற்கு வந்தான். 

வந்தவனை ஆனந்தர் உள்ளே விடவில்லை; புத்தரை தொல்லைப்படுத்த வேண்டாம் என்று அனுப்ப முயற்சிக்க புத்தர் அவனை உள்ளே அனுப்பும்படி கூறுகிறார்;

வணக்கத்திற்குரிய கௌதமரே, கோசல தேசத்திலும் மகத தேசத்திலும் இருக்கும் மிகப்பிரபலமான குருமார்கள், ஆசிரியர்கள் தாம் உண்மையை போதிப்பதாகக் கூறுகிறார்கள். அவர்கள் அனைவரும் உண்மையாகவே ஞானமடைந்தவர்களா? என்ற கேள்வியை முன்வைக்கிறான். 

அதற்கு புத்தர் தனது இறுதி உபதேசமாக "ஸுபதா, அவர்கள் ஞானமடைந்தவர்களா? இல்லையா? என்ற கேள்வியை நீ என்னிடம் கேட்பது அர்த்தமற்றது; உண்மையில் நீ ஞானமடைய, துன்பத்திலிருந்து விடுபட விருப்பமுள்ளவனாக இருந்தால், நான் எனது அனுபவத்தில் உணர்ந்ததை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன், உபதேசத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறாயா என்று கூறுகிறார்; அதற்கு அவன் தெளிந்து சம்மதிக்க அவனிற்கு ஆர்ய அஷ்டாங்கிக மார்க்கம் என்ற தனது ஞானப்பயிற்சியை உபதேசிக்க ஸுபதன் கௌதம புத்தரின் கடைசிச் சீடராகிறான். 

ஆகவே ஒரு சாதகன், உண்மையை அறியத்தாகம் கொண்டவன் குருவிடம் வீண் கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்கக் கூடாது; அவரிடமிருந்து எம்மை உய்விக்கும் மார்க்கம் எது என்பதை அறிந்துகொண்டு எமது முயற்சியை ஆரம்பிக்க வேண்டும். எம்மிடம் உண்மையை அறிந்தபின்னர் அதற்காக முயற்சிக்கும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். 

இன்று ஆன்மீகம், மதம் வளர்க்கிறோம் என்ற பலரும் ஸுபதனைப் போன்று மற்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது, மற்றவர்கள் உண்மையானதைப் போதிக்கிறார்களா? மற்றவர்களால் எமது சமயம் அழிகிறது என்ற எண்ணம்தான் இருக்கிறதே அன்றி தாம் நம்பும் வழியில் தம்மை ஈடேற்ற என்ன பயிற்சி என்பதைப் பற்றி எண்ணுவதில்லை!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...