குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, August 18, 2020

திருமூலரும் ஸோம நாதரும்

ஒருமுறை திருமூலருடன் ஸோமநாதர் என்ற அகத்தியரின் சீடரும் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு பெரிய மதம் பிடித்த யானை மரத்தின் பின்னால் மறைந்து கொண்டிருந்தது. மரத்தைத் தாண்டிச் சென்றவுடன் இப்போது யானைக்குப் பின்னால் மரம் மறைந்து கொண்டிருந்தது. உடனே திருமூலர் அந்த சந்தர்ப்பத்தை வைத்து அவனுக்கு ஞானம் புகட்ட விரும்பினார்!

ஸோமா! இதிலிருந்து நீ உயர்ந்த இரகசியத்தை அறிந்துகொள்ளலாம் என்று கூறிவிட்டு நான்கடியில் பாடலைக் கூறினார்;

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே

இதைக்கூறிவிட்டு சரி உனது புரிதலைக் கூறுவாய் ஸோமா என்றார்;

மரத்திற்கு முன்னால் நிற்கும் போது மரத்தை மறைத்துக் கொண்டிருக்கும் அந்த மாமத யானை நாம் மரத்திலிருந்து நீங்கி மறுபக்கம் சென்றவுடன் மரம் யானையிலிருந்து மறைந்து கொண்டிருக்கிறது போல புலப்படுகிறது. நாம் மரத்திற்கு முன்னால் நின்று பார்த்தால் மரத்தில் யானை மறைந்து கொண்டிருக்கும்; யானைக்கு முன்னால் நின்று பார்த்தால் யானையில் மரம் மறைந்து கொண்டிருக்கும்.

இதுபோல நாம் ஐந்து பூதங்களாலான ஐந்து புலன்கள் மூலம் இந்த உலகத்தைப் பார்க்கும் வரை ஐந்து பூதங்களும் மரம் யானையை மறைத்தது போன்று அந்த பரமாகிய சிவத்தை மறைத்துக் கொண்டிருக்கும்!

எப்போது குருவின் அருள் சொரிய பரமாகிய சிவத்தை அறியும் தெளிவும், விழிப்பு கிடைத்து, புலன்களைத் தாண்டி அகவுணர்வினால் காணும் நிலை தியானத்தால் வாய்க்கும் போது நாம் மரத்தைத் தாண்டி இந்தப்பக்கம் வந்து மாமத யானையைக் கண்டாற்போல் பார்முதலாகிய ஐம்பூதங்களையும் தாண்டி பரமாகிய சிவத்தில் கலந்து போய் அனுபவமாகும்!

மரத்தில் யானை மறையும் நிலை ஐம்புலனால் ஐம்பூத உலகில் மனம் புறவழி அலையும் நிலை! யானையில் மரம் கரையும் நிலை ஐம்பூத புறவழி செல்லாது மனம் அகத்தில் அடங்கி பரமாகிய சிவத்தை உணரும் நிலை!

திருமூலர் சிறு புன்னகையை உதிர்த்தார்!

எனது புரிதல் சரியானதானதா குருவே என்றான் ஸோமன்!

சரி எது? பிழை எது? உனது நிலைக்கு விளங்கியதை நீ கூறுகிறாய்! புலன்களைத் தாண்டி, சலனமற்று அகத்தில் உனது சாதனையை தொடர்ந்து செய்துவா! அனுபவத்தில் அறிவாய்! அனுபவம் ஒன்றே உண்மையானது என்று ஆசி கூறினார்!

Post inspired by Dr. Lambotharan Ramanathan


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...