குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, August 06, 2020

இராவணன் தமிழனா?

நண்பர் ஒருவரின் கேள்வி?

இது ஒரு அர்த்தமற்ற கேள்வி! நாத்திகர்கள் கட்டிய கற்பனைக் கோட்டைகளின் இன்னுமொரு வடிவம்! கடவுள் இல்லை என்று எண்ணும் நாத்திகர்களுக்கு இராவணனுடனும், நரகாசூரனுடனும் என்ன வேலை! கடவுள் இல்லை என்ற பின்னர் அசுரனும் இல்லைத்தானே! ஒரு நாணயத்தின் ஒருபக்கம் இல்லை என்றால் மறுபக்கமும் இல்லைத்தானே! 

காப்பியங்கள் மனிதரின் மனநிலைகளை படம்பிடித்துக்காட்டுவதற்கும், மக்களை நன்மை, தீமை, சமூக நியதி என்பவற்றை மனதிற்குப் புகட்ட எடுத்துக்கொள்ளப்பட்ட உருவகங்கள்! வாழ்ந்த ஆளுமைகளை மனநிலைக்கு ஏற்ற விதத்தில், பார்வைகளுக்கு ஏற்ற வகையில் கதை கதையாக எழுதி வைத்திருக்கிறார்கள் எமது மனநிலையை உணர்த்த, உயர்த்த! இந்தக்கதைகளைப் படிக்கும் போது எமது மனநிலைக்கு ஒத்த பாத்திரங்களுடன் ஒன்றி நமக்குரிய மனதின் கட்டமைப்பை, வழிகாட்டலைப் பேணமுடியும்! 

இந்த அடிப்படையில் கதைகளை, இதிகாசங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக இராவணனின் மனநிலை உடையவர்களுக்கு அவர்கள் இராவணனின் வழித்தோன்றலாகவும்; இராமரின் மனநிலையுடையவருக்கு இராமர் வழித்தோன்றலாகவும் தோன்றும்! அவ்வளவுதான்! இதில் உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை! அவரவர் மனநிலை! தம்மை எப்படித் தொடர்புபடுத்திக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது! 

பல காலத்திற்கு முன்னர் ஒரு தமிழ் திரைப்படத்தில் ஆக்கிரோசனாமான, திறமையான பொலிஸ் அதிகாரி வில்லனை தைரியத்துடன் எதிர்கொள்ளும்போது வில்லன் அவனைப் பார்த்து உள்ளூர இரசித்துக் கொண்டு அவன் நம்ம சாதிக்கார பயலுதான், காதைப் பாரு துடிக்குதிலே என்பார், ஆனால் பொலிஸ்காரனோ வில்லனை அழிக்கும் வேலை பார்த்துக்கொண்டிருப்பான், கடைசியில் வில்லனை அந்த பொலிஸ்காரன் அழித்துவிடுவான்! 

இதைப்போல ஒரு மனநிலை தான் இராவணனை தமிழனாக்கி இரசிப்பது! 

இதிகாச வரலாற்றுப்படி பிரம்மாவின் மகன் புலஸ்தியர், புலஸ்தியர் மகன் வைச்ரவ, வைச்ரவ மகன் இராவணன், இராவணன் பிரம்மாவின் 04ம் தலைமுறை! 

பிரம்மாவின் இன்னொரு மகன் மரீசீ, மரீசீயின் மகன், காஷ்யப்பர், அவர் மகன், விஸ்வான், அவர் மகன் மனு, அவர் மகன் இஷ்வாகு இப்படி 67வது தலைமுறையில் ஸ்ரீ இராமர் உதிக்கிறார். 

ஆக இதிகாசப்படி பார்த்தால் இராவணன் ரிஷி கோத்திர வழிவந்த ஒரு பிராமணன்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...