குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, August 16, 2020

தலைப்பு இல்லை

அறிவு விதைக்கப்பட வேண்டும்! ஒரு துறையில் அறிவைப் பெற்றவன் தன்னைப் போல் பலரை எப்படி உருவாக்கலாம் என்ற சிந்தனை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் பெற்ற அறிவினைப் புரிந்துக் கொள்ள முடியாத சமூகத்துடன் முரண்படும் ஒரு விரக்தனாகத் தான் இருப்பான்!

ஒரு பட்டதாரி ஒரு துறையில் உருவாகினால் அவன் தன்னைப் போன்று பல பட்டதாரிகளை அவன் சமூகத்திற்குள் உருவாக்கினால் தான் அவனைப் புரிந்துக் கொள்ளும் சமூகம் உருவாகும். 

ஒரு எழுத்தாளன் தன்னைப் போல் பலரை உருவாக்கினால் தான் அவன் எழுத்து வளரும்! 

ஒரு உயர்ந்த நோக்கம் உள்ள அரசியல்வாதி தன்னைப் போல் கொள்கைப் பிடிப்புள்ள, சமூகத்தை முன்னேற்ற அதிகாரம் வேண்டும் எண்ணம் கொண்ட பலரை அவன் கட்சியிலும், சமூகத்திலும் உருவாக்கினால் தான் அவன் அரசியல் செய்ய முடியும்! 

இங்கு பலர் அறிஞர்களாகவும், கலாநிதிகளாகவும் இருந்தும் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் தமது நேரத்தை தம்மைப்போன்ற கொள்கையுடையவர்களை உருவாக்கச் செலவழிக்கவில்லை! 

தாம் வாழும் சமூகம் எம்மைப் புரிந்துக் கொள்ளவில்லை என்றால் முதலில் அந்தச் சமூகத்தின் அறிவு மட்டத்தை, சிந்தனை மட்டத்தை உயர்த்த ஆரம்பத்தில் தாம் பாடுபட வேண்டும், பின்னர் அதனால் உருவாகும் சூழலில் முழுச் சமூகத்தையும் படிப்படியாக முன்னேற்ற பொறுமையும், எறும்பூர கல்லும் கரையும் என்ற தொடர் முயற்சியும் அவசியம் என்பதைப் புரிய வேண்டும்! அப்படி இல்லாமல் எனது அறிவு உங்களை எல்லாரையும் விட அதிகமாக இருக்கிறது; நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற போக்கில் செயற்படும் புத்திஜீவிகள் சமூகத்திற்கு குறைகூறுவதையும், விரக்தியடைவதையும் தவிர எதையும் தரமுடியாது.

மேலும் தான் இதைச் சாதித்து புகழடையவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுபவர்களும் எந்த நன்மையையும் சமூகத்திற்கு செய்துவிட முடியாது. 

அதிகாரத்தில் இருப்பது பெரும் பொறுப்பு என்பதை உணராமல் அதிகாரம் ஒரு பெரும் பெருமை என்பது முட்டாள் தனம்! எமக்கு அதிகாரமும், அறிவும், பொறுப்புகளும் தரப்படுவது மற்றவர்களுக்கு உதவவே அன்றி நாம் மாத்திரம் வாழ அல்ல என்ற மனப்பாங்கு கட்டியெழுப்பப்பட வேண்டும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...