குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, August 21, 2020

திருமூலரும் அகத்தியரும்

ஸோமானந்தன் மூல நாதருடன் சாதனை பயிலத் தொடங்கிவிட்டான். ஒரு நாள் மூலநாதர் ஸோமா உனது குருநாதரின் மகிமை என்னவென்று தெரியுமா? என்று கேட்டார். 

அவர் மகிமை உங்கள் திருவாயால் கேட்டு மகிழ்வதே என் பாக்கியம் என்றான் ஸோமன். 

மூலநாதர் கண்களை மூடி ஆழ்ந்து சிறிது நேரம் தியானித்து கண்கள் மூடிய நிலையில் அகத்தியர் யார் என்பதற்குப் பதிலாக பாடல்கள் இரண்டைக் கூறத் தொடங்கினார். 

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து

கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்

நடுவுள அங்கி அகத்திய நீபோய்

முடுகிய வையத்து முன்னிரென் றானே.

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்

அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு

மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி

எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.

கண்களைத் திறந்து அகத்தியர் யார் என்பதை எனது அனுபவத்தில் பாடலாக சுருக்கியிருக்கிறேன்! அவர் பெருமை அண்டம் போன்று பரந்தது! அதை விரித்து பலருக்கு புரியுமாறு கூறுவாய்! அவர் பணியை பூவுலகில் வளர்க்க உன்னைத் தகுதியாக்கிக் கொள்ளவே இங்கு பயிற்சிக்கு அனுப்பினார்! அந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டு அனைவருக்கும் புரியும்படி இந்தப் பாடல்களின் விளக்கத்தைக் கூறுவாய் என்றார்!

தங்கள் ஆசியுடன் என்று ஸோமன் அந்தப் பாடல்களின் பொருளை அறிய அகத்தியர் மூல குரு மந்திரத்தை உச்சரித்து தியானத்தில் ஆழ்ந்து விட்டான்! 

கண்களை விழித்து குருநாதா இந்தப் பாடலை வார்த்தைகளைக் கொண்டு பொருளறிந்தால் புராணத்தில் குருநாதரைப் பற்றித் தென்திசை ஏகிய கதையைச் சொல்வது போலிருந்தாலும் இது குருநாதரின் உயர்ந்த யோகசாதனையின் இரகசியம் இதிலிருக்கிறது என்றான் ஸோமன்.

மூலநாதர் தனது வழமையான புன்னகையால் ஆமோதித்தார்! 

சிவமான அறிவு புருவமத்தியில் சிவஜோதியாக, அக்கினியாக சுடர்விடுகிறது. இதன் கதிர்ப்பு மனதிற்கு ஒளிகொடுக்கும் வரை மனம் சிவத்தை நோக்கி இருக்கும்! ஆனால் சாதாரணமாக மனம் இந்த சிவஜோதியை நாடாமல் புலன்கள் வழி வெளியே சென்று கொண்டும் இருக்கும்! இவையிரண்டு சமமாக இருப்பதே நடுவு நிற்றல்; மனித உடலில் இருக்கும் சிவயோகியின் நிலை! சிவமிருக்கும் திசை வடபகுதி, பௌதீகத்தில் கையிலையாக்கி புறத்தே காட்டிய அது அகத்தில் உடலில் புருவமத்தியைக் குறிக்கும்! மனம் முழுமையும் வடபகுதியாகிய புருவமத்தியில் குவிந்தால் ஒரு சாதகனின் மனச் சமநிலை கெடும்! உலக வாழ்க்கை கெடும்! அவன் பரிணாமம் சரியாக நடைபெறமாட்டாது! அவன் தனது யோகாக்கினியை (அங்கி) உடல் புலன்வழி செல்லும் மனதினை ஆளும் கீழ்ச்சக்கரங்களான மணிப்பூரக, சுவாதிஷ்டான, மூலாதாரத்திற்கும், மேல் சக்கரங்களான விசுத்தி, ஆக்னை, சகஸ்ராரத்திற்கு இணைப்பாக இருக்கும் ஹ்ருதய ஸ்தானமாகிய அனாகதத்தில் தீயாக - அகத்தில் தீயாக - இருக்க வேண்டும்! இதுவே சரியான யோக முறை! 

ஆனால் உலகத்தவர்கள் குண்டலியை ஏற்றுகிறேன் என்று யோகம் புரிந்து வடபகுதியான புருவமத்தியில் அதிகமாகச் சேர்த்து தமது பரிணாமத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள், அல்லது புலன்வழி அதிகம் சென்று மூலாதாரத்து சுண்டலியிடம் மாட்டிக் கொள்கிறார்கள். இப்படி இரண்டு நிலையிலும் தமது பரிணாமத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் நடுவு நிற்கும் யோக முறை அறிந்தவர் அகத்தீசர்; இதை உலகிற்கு அனைவருக்கும் கொடுக்கும் வல்லமை ஈசனால் அருளப்பட்டவரும் அவரே! 

ஆகவே உலகில் ஒருவன் தனது பரிணாமத்தை வாழ்க்கைச் சமநிலை கெடாமல் யோகத்தில் முன்னேற அகத்தீசர் அருள் வேண்டும் ஐயனே! 

என்று முடித்தான் ஸோமன்! 

நீண்ட தபஸினால் புலன்கள் அடங்கப்பட்டவரும், அனைத்து யோக முறைகளையும் பயிற்சித்து சித்தி பெற்றவருமான, மனச் சமனிலை கெடாத நடுவு நிலை நிற்கும் மூலநாதர் புன்னகைத்தார்! 

எனது அனுபவமும் விளக்கமும் சரியானதா ஐயனே என்றான் ஸோமன்! 

இன்னுமொரு பாடல் பாக்கியிருக்கிறது என்று புன்னகைத்தார் மூல நாதர்! 

நள்ளிரவு தாண்டி விட்டது! தியானிக்க அமர்வோம்; அதிகாலையில் அடுத்த பாடலிற்கு பொருள் கண்ட பின்னர் எனது அபிப்பிராயம் சொல்கிறேன்! பாடலிற்கு பொருள் அறிவதை விட தியானசாதனை அதிமுக்கியமானது! அனுபவத்தைத் தருவது! என்று கூறிக்கொண்டு மூலநாதர் தனது மான் தோலாசனத்தில் பத்மாசனம் இட்டு அமர்ந்தார்! 

ஸோமனும் அருகிலிருந்த தனது ஆசனத்தில் தியானத்தில் அமர்ந்தான்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...