குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, August 21, 2020

திருமூலரும் அகத்தியரும்

{முற்பகுதி நேற்றுப் பதிவிடப்பட்டுள்ளது; கட்டாயம் படித்துவிட்டு இந்தப்பகுதியைப் படிக்கவும்}

பலமணி நேரம் தியானத்தில் கழிந்து விட ஸோமன் எழுந்துவிட்டான்; மூலநாதர் இன்னும் தியானம் கலையவில்லை. அன்றைய தியானம் அவன் தனது குருவாகிய அகத்தியரின் யோகம் பற்றிய உண்மையை அறிந்ததால் மனம் மிகவும் குதூகலமாக இருந்தது! எழுந்து சென்று நீராடி தனது காலைக் கடன்களை முடித்து கொண்டு தனது தினசரி தேவி பூஜைக்குத் தயாராகி வர மூலநாதர் தியானத்திலிருந்து விழிப்படைந்திருந்தார். 

என்ன ஸோமா பூசைக்கு தயாராகி விட்டாயா, அகத்தியரைப் பற்றி நாம் கூறிய இரண்டாவது பாடலிற்கு பொருள் கண்ட பின்னர் பூசைக்கு அமர்வாயாக; அது உன் அக அனுபவத்தை இன்னும் இனிமையாக்கும் என்று அன்புக் கட்டளையிட்டார். 

தங்கள் ஆணை என்று கூறிவிட்டு, கண்களை மூடி மூலநாதர் கூறிய பாடலை மனனிக்கத் தொடங்கினான். 

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்

அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு

மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி

எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.

கண்களை மெல்லியதாகத் திறந்து, 

உடலில் காமாக்னி சுவாதிஷ்டானத்திலிருந்து ஒருவனின் பிராணனைப் போக்கிக் கொண்டிருக்கிறது; இதை ஊர்த்துவமுகமாக வளர்க்க வேண்டும், அது போல் ஜடராக்னி மணிப் பூரகத்திலிருந்து மேலிருந்து கொட்டும் அம்ருதத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு அக்னிகளையும் ஊர்த்துவமுகமாக வளர்க்க வேண்டும். இந்த முறையைச் சொல்லித் தருவார் அகத்தியன் என்பதே அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன், அக்கினியை பிறப்பிக்கும் இடத்திலிருந்து வீணாகாமல் வளர்க்கும் உபாயம் அறிந்து மேல் நோக்கி வளரச்செய்யும் ஆற்றலும், அறிவும் உடையவர் அகத்தியர். 

கீழே இருக்கும் காமாக்னியும், ஜடராக்னியும் தோற்றம் பெறுவது மேலே ஆக்ஞாவில் இருக்கும் சிவாக்னியிலிருந்து, அதுவே அனைத்தினதும் தோற்றம், கீழிருந்து எம்மை பரிணாமத்தில் சுழற்றும் காமாக்னியும், ஜடராக்னியும் மேல் சென்று (பாலவன் - சிவன்) கலந்து சிவாக்னியில் மங்கவேண்டும்; இப்படி காமாக்னியையும், ஜடராக்னியையும் மேலெழுப்பி வடபுலமாகிய புருவமத்தியில் உள்ள சிவாக்னியில் கலப்பிக்கும் தவமுறை அறிந்த முனிவன் அவர்! இப்படி சிவாக்னியில் தன்னைப் பூரணமாக கலப்பித்ததாலே அவர் இந்தப்பிரபஞ்சத்தில் எங்கும் அறியப்படக்கூடிய ஆற்றலுடன் பேரொளியாக இருக்கிறார். 

சிவயோகத்தில் பூரணத்துவம் பெற்றதால் அவரை நினைக்கும் சாதகர்களுக்கு யோகத்தில் பூரணத்துவம் அருளும் பேரொளி என்று பொருள் ஐயனே! 

என்று முடித்தான் ஸோமானந்தன்! 

திருமூலநாதரின் முகம் சூரியப்பிரகாசமாக ஒளிர்ந்தது! ஸோம நாதா குருவின் திருவடியைத் தியானிப்பவர்களுக்கு குரு தனது யோகத்தில் சென்ற பாதைகள் எல்லாம் விளங்கும்! அத்தகைய சிறந்த பக்தியைக் கொண்டிருக்கிறாய்! எனது பரிபூரண ஆசிகள்! தற்போது உனது தேவி பூஜைக்குச் செல்! காலம் வரும் போது தேவி பூஜையின் இரகசியங்களையும் சொல்லித்தருகிறோம் என்று ஆசி கூறினார்!

திருமூல தேவரை நெடுஞ்சாண்கிடையாக வணங்கி ஸோமன் தனது பூஜைக்குத் தயாராகினான்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...