குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, August 21, 2020

சதுர்த்தி: சிவன் பொருத்திய யானைத்தலை

கணபதியை அம்பிகை தனது குளியலுக்காக வைத்திருந்த மஞ்சளில் இருந்து உருவாக்க, அந்தப்  பையன் சிவனுடனே சண்டையிட கோபத்தில் சிவனார் திரிசூலத்தினால் தலையைப் பிளந்து, பின்னர் பார்வதியின் வேண்டுதலுக்கு இணங்க யானைத்தலை பொருத்தியதாகக் கூறப்படுவதன் விளக்கம் என்ன?
அம்பிகையே சிவத்தின் செயற் சக்தி; அவள் தனது மங்கள சக்திகள் அனைத்தையும் சேர்த்து உருவாக்கிய பிள்ளை அறிவாகிய சிவம் யாரென்று தெரியாமல் சண்டையிட்டது! சிவத்தை அறியக் கூடிய சிவ ஒளி பொருந்திய மூளை தனியே பிரக்ருதியின் சக்தியால் மாத்திரம் ஆக்கப்பட்ட பிள்ளைக்கு வாய்க்கவில்லை! 
ஆகவே சிவன் தனது திரிசூலம் என்ற இச்சா, ஞான, கிரியா சக்திகளை ஒன்றாக்கி அம்பிகையின் பௌதீக மாயையில் இருந்து சிவத்தை நோக்கிச் செல்லக் கூடிய ஆற்றலுள்ள மூளையும், அது மூலாதாரம் வரை செல்லும் நாடியும் மனிதனிற்குள் பதிப்பித்த செயலே யானைத்தலை பொருத்திய கதை! 
அதாவது ஒரு காலத்தில் மனிதனின் மூளை பௌதீக மாயையில் மாத்திரம் உழன்று கொண்டு உயர்ந்த ஞானத்தைப் பெறும் ஆற்றலற்று இருந்தது! இதற்கு சிவமாகிய ஒளி பொருந்தி விருத்தியடைந்த அதீத மனம் செயற்படக் கூடிய விருத்தியடைந்த மூளையின் உருவாக்கமே பிள்ளையாரின் பிறப்பு! 
விக்கினங்கள் நீங்க வேண்டும் என்றால் அறிவு சரியாகச் செயற்பட வேண்டும்; அந்த அறிவை விழிப்படையச் செய்யும் உபாசனையே கணபதி உபாசனை! 
அம்பிக்கையின் துணை கொண்டு சிவத்தை அடையும் ஸ்ரீ வித்தையில் இதனாலேயே அறிவை விழிப்பிக்கும் கணபதி முதல் படியாகவும், அத்திவாரமாகமும் வகுத்து வைத்தார்கள்!
ஆக கணபதியின் அருள் இல்லாமல் ஒருவனின் அறிவுப் பரிணாமம் பூர்த்தியாகாது! 
அனைவருக்கும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா என்று பிரார்த்தித்து விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...