குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, August 01, 2020

தலைப்பு இல்லை

விழுமியம் (Value) சமூகத்தினைக் கட்டமைப்பதற்குரிய அடிப்படை அத்திவாரக்கல்! 

உலகத்துடன் ஒத்திசைந்து வாழக்கூடிய விழுமியங்களை சமூகங்கத்தின் அத்திவாரமாக கொண்டிருக்கும் சமூகத்தின் மீதுதான் கல்வி, பொருளாதாரம் வளர்ந்து தேசம் - இனம் என்ற ஒன்று உருவாக்கப்பட முடியும்! விழுமியங்கள் பிழையாக இருக்கும் போது அந்த விழுமியங்களைத் தகர்த்தால் சமூகம் என்ற பெறுமானம் அற்றுப்போகிறது! 

பின்னர் கல்வி மேம்பாடும் அறிவு விருத்தியும், அதன்பின்பு தொழிலும் பொருளாதாரமும் மேம்பட்ட நிலையும் சமூகத்திற்குள் ஏற்படும் போது மட்டுமே அந்தச் சமூகம் அதிகாரத்தைக் கையாளும் தகுதியைப் பெறுகிறது! கல்வியை மாத்திரம் வைத்துக்கொண்டு பொருளாதாரம் இல்லாத சமூகம் தன்னை நிலை நிறுத்த முடியாது. அதுபோல் தனியே பொருளாதாரமும், செல்வமும் உள்ள சமூகம் அதை சரியான வழியில் பிரயோகித்து நல்ல நிலையை அடையவும் முடியாது. 

ஒரு சமூகம் தனக்குரிய விழுமியங்களை வரையறுத்து அந்த விழுமியங்களுக்குரிய கல்வியும், பொருளாதார நிறைவினூடாக தனக்குள் இருக்கக்கூடிய கருத்தியல் குழப்பங்களைத் தீர்த்துக்கொண்டு சம நிலைக்கு வந்து, தாம் ஒரேயொரு சமூகக்குழு மாத்திரம்தான் உலகத்திலிருக்கிறோம் என்ற கிணற்றுத்தவளை மனநிலையிலிருந்து வெளிவந்து நாம் சார்ந்திருக்கக் வேண்டிய, விலகியிருக்க வேண்டிய, எம்மைத் தாக்கம் செய்யக்கூடிய சமூகங்களுடன் இடைத்தொடர்படைந்து சமநிலையுடன் நீடித்து நிலைத்திருக்கும் ஆற்றலைப் பெற்றதன் பிறகுதான் அது அதிகாரத்தைத் திறம்பட முகாமைத்துவம் செய்யும் ஆற்றலைப் பெறும்.

தனிமனித மனநிலையில் அதியாசையும் (craving), கூட்டுச் சமூக நிலையில் அதிகாரத்தை அடைந்துவிட வேண்டும் என்ற பேரவாவும் சரியான தடுப்பு (Break) இல்லாமல் அதிவேகப்பாதையில் வாகனம் ஓட்டி விபத்து உண்டாக்கும் நிலைதான்! 

தான்சார்ந்த சமூகத்திற்குள் தொடர்பாடி கருத்தினை ஏற்றுக்கொண்டு ஒரு திசையில் செலுத்தவல்ல தலைமைத்துவமும், தெளிவும் அவசியம்! கருத்தை எதிர்த்து வாதம் செய்யும் அதேவேளை எதிர்க்கருத்தைக் கூறுபவருடன் எந்தவித தனிப்பட்ட பகையுணர்ச்சியும், தனிமனித தாக்குதலும் செய்யாமல் இருவரும் ஒரு நோக்கத்திற்காக பாடுபடும் இருவேறு பாதைகள் என்ற தெளிவு இருத்தல் அதிமுக்கியம்! 

இப்படியில்லாமல் தமக்குள்ளேயே ஒத்திசைவைப் (Harmoney) பேணமுடியாத சமூகம் அதிகாரத்தை எப்படி அடையப் போகிறது? அடைந்த பின்னர் தக்கவைத்துக்கொள்ளப்போகிறது என்ற ஆய்வு மிக அவசியமானது!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...