குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, October 05, 2019

சரஸ்வதி தியானம் - 09

சரஸ்வதி தியானம் - 09 {சகலகலாவல்லி மாலை பாடல் - 08}
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சொல்விற்பனமும் அவதானமும்
கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை
கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு
காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே
சகல கலாவல்லியே
செல்விற்பனம் என்பது மொழியையும் சொல்லியும் எப்படி திறமையாக உபயோகிப்பது என்று திறமை. இன்றைய காலத்தில் communication skill என்றும் சொல்லலாம். பலர் தமது அறிவை வெளிக்காட்டுகிறோம் என்று வார்த்தைகளைக் கொட்டுவதால் மற்றவர்கள் அவரை அறிவுடையவர்கள் என்று எண்ணிவிடமாட்டார்கள்.
சிலர் தமக்கும் முன் இருப்பவர்கள் மன நிலையைப் புரிந்துகொள்ளாமல் தமக்குத் தெரிந்ததையெல்லாம் கொட்டிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் பேச்சிலும் சொல்விற்பனம் இருப்பதில்லை.
யார் சூழலுக்குத்தகுந்த சொற்களை மற்றவர்கள் கேட்கக்கூடிய வகையில் இனிமையாக திறமையாக, ஆழமாக, தெளிவாக கூறக்கூடிய வல்லமை இருக்கிறதோ அவனுக்கு சொல்விற்பனம் இருக்கிறது எனலாம். இப்படியான சொல்விற்பனம் சரஸ்வதியின் அருளால் வருவது.
அடுத்தது அவதானம், தற்கால நவீன மூளையியல் ஆய்வுகள் சாதாரணமாக ஒரு மனிதன் தனது முன்மூளையின் ஆற்றலில் நான்கு விஷயங்களை மாத்திரமே அவதானித்து கிரகிக்ககூடிய ஆற்றல் உள்ளவனாக இருக்கிறான் என்று கண்டறிந்துள்ளார்கள். முற்காலத்திலும், தற்காலத்திலும் சரஸ்வதி உபாசனையின் வல்லமையால் நாற்கவனகம் என்று நான் கு விஷயங்களை ஒரே நேரத்தில் கிரகிக்கக் கூடியவர்களும், எண்கவனகம் என்ற எட்டு விஷயங்களை கவனிக்கக்கூடியவர்களும், பத்து விஷயங்களைக் கவனிக்கக்கூடிய பத்துக் கவனகர்களும், பதினாறு விஷயங்களை கவனிக்கக்கூடிய பதினாறு கவனகர்களும், முப்பத்திரெண்டு கவனகம், நூறுகவனகம் என்றேல்லாம் மன ஆற்றல் உள்ளவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்தக் கவன ஆற்றல் ஒருவன் தனது மூளையையும் மனதையும் சரியாக ஒழுங்குபடுத்துவதால் கிடைக்கக்கூடியது. இதற்குரிய வழிதான் சரஸ்வதி உபாசனை.
கவி சொல்லும் வல்லமைக்கு யாப்பிலக்கணம் தெரிய வேண்டும். யாப்பிலக்கணம் தெரிந்தாலும் நல்ல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளை ஒருசேரக் கட்டி கவி சொல்ல முடியாது.இதற்கு மனம் மிக நுண்மையாக சீராக சந்தமாக இயங்க வேண்டும். இப்படி இயங்க சரஸ்வதியின் அருள் இருக்க வேண்டும்.
ஆக முதல் வரியில் சொல்விற்பனமும், அவதான சக்தியும், கவி சொல்ல வல்ல ஆற்றலும் இவற்றிற்குரிய அறிவையும் தந்து தன்னை அடிமை கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார். இவற்றைத் தரும் தேவி அழகிய ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சகலகலாவல்லியான உனக்கு அறிவாற்றலால் சிதையாத புகழ் கிடைக்கவல்ல கல்வி என்ற பெரும் செல்வப்பேற்றை எனக்குத் தருவது முடியாத விஷயம் அல்ல.
இன்று பலரும் கல்வி என்று மனதை நெருக்கும், அழுத்தம் தரும் விஷயங்களையே கற்கிறார்கள். அவதானக்கலை எனும் கவனகம், கவி சொல்லும் யாப்பிலக்கணம் எல்லாம் நுண்மையாக மனதின் ஆற்றலை வளர்க்கும் கலைகள். இவற்றையும் மாணவர்கள் கற்க வேண்டும். இப்படி மனதின் ஆற்றலை வளர்த்துக் கொள்பவர்களுக்கு எந்தத் தொழிலும், கல்வியும் எளிதாக செய்யும் ஆற்றல் வாய்க்கும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...