குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, October 31, 2019

தலைப்பு இல்லை

நான் இங்கு கருத்துப் பகிர்வது எவருக்கும் சார்பாகவோ, எவரையும் மாற்றவோ, உபதேசிக்கவோ வழி நடத்தவோ அல்ல! 

என்னளவில் நான் இந்த உலகின் ஒவ்வொரு அமிசத்தை இரசித்துக் கொண்டு புரிந்து கொண்டு தெளிந்த அறிவைப் பெற வேண்டும் என்ற பேராவல் கொண்டு பயணிக்கும் பயணி அவ்வளவே! இந்தப் பயணத்தில் என்னால் எவ்வளவு மற்றவர்களுக்கு உதவமுடியுமோ அவ்வளவு உதவலாம் என்ற எண்ணம் உள்ளவன்! பிரபஞ்சத்தின் அளவுடன் ஒப்பிடும் போது எமது இருப்பு என்பதே உண்மையில்லை எனும் நிலையிலேயே நாம் வாழ்கிறோம்! 

நான் பகிரும் கருத்துக்கள் பலருக்குத் தெளிவு தருவதால் அவர்கள் தரும் மரியாதையைக் கண்டு பலரும் என்னைப் பலவாறாக தமது கற்பனைக்கு ஏற்றவாறு கற்பித்து உரையாடத் தொடங்குவது உண்டு. 

நான் மனிதர்களை எண்ணங்களாகப் பார்க்கப் பழகியவன். எண்ணங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய சிந்தனை உடையவன். எண்ணங்கள் மாறக் கூடியவை, ஆகவே மனிதர்களும் மாறுபவர்கள்! இந்த மாற்றத்தைப் புரியாமல் உலகை இறுக்கமாகப் பார்ப்பவர்களே துன்பமடைகிறார்கள். எமக்கு துன்பம் இழைத்தவனும் தனது சிந்தனை மாறி நன்மை செய்யலாம் என்பதை ஏற்க மறுத்து பலர் தமது வாழ்வை வீணடிக்கலாம். 

பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் 

என்ற பூங்குன்றனார் வாக்கின் படி மாறும் எண்ணங்களில் ஓட்டத்தில் வாழ்வினை செலுத்தி வாழ்வினைக் கடக்க வேண்டும். 

உத்வேகமும், எண்ணமும் எப்படி செயலாற்றுகிறது என்பது பற்றிய அடிப்படைப் புரிதல் அற்றவர்களுடன் நான் முரண்படுவது போன்று தோன்றலாம். 

எனது உரையாடல்கள் உணர்ச்சிகளைத் தாண்டிய சிந்தனைத் தெளிவை அடைய விரும்பும் நோக்கம் உடையவை! உணர்ச்சி வசப்பட்டு கொதிக்கும் மனதிற்கு சங்கடம் தரலாம்! ஆனால் இறுதியில் தெளிவினைத் தரும் என்பதே உண்மை! 

இன்று பகல் ஒரு பதிவினை நான் இட்ட பின்னர் எனது புத்தகக் கடலில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்த எனது தம்பி, அண்ணா உங்களைப் பற்றிய சரியான விமர்சனம் இதோ என்று தந்த வசனம் கீழே  


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...