குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, October 05, 2019

சரஸ்வதி தியானம் - 08

சரஸ்வதி தியானம் - 08 {சகலகலாவல்லி மாலை பாடல் - 07}
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பாட்டும் பொருளும் பொருளால்
பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய்
உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே
சகல கலாவல்லியே!
இந்தப்பாடல் நாம் எப்படி கற்கவேண்டும் என்று தெளிவைத் தருகிறது. பள்ளிக்கூடத்தில் நவராத்ரியிற்கு சகலகலாவல்லி மாலை படிக்கிறோம், அதன் பொருள் என்ன என்று ஒருபோதும் எண்ணிப்பார்ப்பதில்லை. பொருள் தெரியாமல் படிக்கும் எதுவும் வாழ்க்கைக்கு உதவுவதில்லை. மாணிக்கவாசகர் சிவபுராணத்தின் கடைசியில் இதைப்போல் ஒரு வரியை எழுதி வைத்தார், சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்து" என்று, ஆகவே எமது முன்னோர்கள் மனிதனது மனம் மூளை எப்படிச் செயல் புரிகிறது என்பதை நன்கு ஆய்ந்து தெளிந்துதான் கலைகளை வகுத்திருக்கிறார்கள். பொருள் தெரியாமல் உருப்போடுபவர்களது ஞாபகம் நீண்டகாலம் இருப்பதில்லை என்பதை தற்போதைய மூளை நரம்பியல் ஆய்வுகள் தெளிவுபடுத்துகிறது. ஒரு விஷயத்தின் தொடர்பினை ஆராய்ந்து தெளிந்தவனது மனதில் அந்த குறித்த விஷயம் ஆழமாகப் பதிந்து பின்பு தேவைப்படும் நேரத்தில் ஞாபகசக்தியினூடாக எண்ணமாக எழுந்து உபயோகப்படும். ஆகவே சகலகலாவல்லி மாலையோ, சிவபுராணமோ, தேவாரமோ, அபிராமி அந்தாதியோ பொருள் தெரியாமல் படித்தால் பலனில்லை. பொருள் தெரிந்தால் அதனால் கிடைக்கும் பலனும் தெரியும்.
இதுவரை ஆறு பாடல்களுக்கு பொருள் புரிந்ததால் சரஸ்வதி தேவியின் தத்துவம், அவளை எமது எண்ணத்தில் இருத்தி தியானிப்பதாலும் கிடைக்கும் பலன் பற்றி தெரிந்துகோண்டோமல்லவா? ஆகவே எந்தப்பாட்டையும் பொருளுடன் தெரியவேண்டும், பொருள் தெரிந்தால் அதைப் படிப்பதால் பலன் என்னவென்று தெரியும்.
இப்படி பாட்டிற்கு பொருளும் அதன் பயனும் தெரியவேண்டும் என்றால் அவனிற்கு தேவியின் கடைக்கண் பார்வை கிட்ட வேண்டும் (ஆஹா.. இந்தப்பாட்டிற்கெல்லாம் பொருள் சொல்கிறேன் அல்லவா, எனக்கு அவள் கடைக்கண் பார்வை இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திவிட்டார் குமரகுருபரர் 😍🤩)
இப்படி தேவியின் கடைக்கண் பார்வை கொண்டு பெறும் ஆற்றலால் முத்தமிழ் என்ற இயல் இசை நாடகம் ஆகிய மூன்றிலும் அமுதம் தெளித்தால் கிடைக்கும் அழியாத காவியங்கள் உருவாக வெள்ளை அன்னத்தில் வீற்றிருக்கும் பெண்ணே, சகலகலாவல்லியே உனதருளல்லாவா என்கிறார்.
இந்தப்பாடலுக்குரிய தியானம் வெள்ளை அன்னத்தில் அமர்ந்திருக்கும் சரஸ்வதி தேவியின் கடைக்கண் பார்வை ஒருவன் தன் மேல் படுவதாக பாவிக்க வேண்டும். இந்த பாவனை சரிவந்தால் அவன் பாட்டும் அதன் பொருளும், பொருளல் பொருந்தும் பயனும் அறிந்து சுவையான அமுதம் தெளித்த படைப்புகளை ஆக்கும் வல்லமை உள்ள கலைஞன் ஆவான்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...