குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, June 22, 2021

சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 07: சைவமும் யோகமும்

 இன்று உலக யோகா தினம்



கடந்த ஒருவாரமாக யோகம் என்பதன் ஆழமான தத்துவார்த்தங்களை எழுதி வந்தோம். வெறுமனே உடலை வளைக்கும் ஆசனங்கள் யோகத்தின் இறுதி இலக்கு இல்லை என்பதை புரிவதற்கும் அதற்குள் ஆழமான அக அனுபவங்களைப் பெறக்கூடிய முத்துக்கள் இருக்கிறது என்பதையும் விளக்குவதே நோக்கம்.
அதில் பல சித்தர்களின் யோக முறை பற்றிய அறிமுகம் தந்திருந்தோம்! ஆழமாக உரையாட விரும்புர்கள் எமது வகுப்புகளில் இணைந்துகொள்ளலாம்!
இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை
சைவமும் யோகமும்
****************************
சைவமும் யோகமும்
யோகீஸ்வரன் – யோகிகளின் தலைவன் சிவபெருமான்.
பதஞ்சலி கூறும் யோகம் வெறுமனே மனம் என்ற அந்தக்கரணங்களில் சித்தத்தின் விருத்தியை நிரோதம் செய்யும் யோகம். இப்படி சித்த விருத்தியை நிரோதம்செய்த அந்தக்கரணத்தை வைத்துக்கொண்டு என்னெ செய்வது என்பதற்குரிய பதிலை சைவசமயத்தின் யோக பாதம் கூறும்.
பதஞ்சலி இயம நியம, ஆசன, பிரணாயாம, பிரத்தியாகார, தாரணை சமாதியால் சித்தம் விருத்தி அடங்கும் முறையைக் கூறும் !
நாத சம்பிரதாய குண்டலின் யோகம் என்பது 7 ஆதாரங்களுடன் முடிவுறுகிறது.
சைவ ஆகம யோகம் இதற்கு மேற்பட்ட சிவயோகம் எனும் நிலையைப் பற்றிப் பேசுகிறது.
இது பதினாறு அங்கங்கள் உடைய சோடசகலா பிரசாத கலை யோகம் எனப்படும். சூக்ஷ்ம உடலை வலுப்படுத்தி சுழுமுனை நாடியை வசப்படுத்திய யோகி சிவயோகம் புரியும் தகுதி பெறுகிறான்.
சைவ சமயம் கூறும் யோகப்படிகள்
1) அகாரம்
2) உகாரம்
3) மகாரம் –
4) விந்து -
5) அர்த்த சந்திரன்
6) நிரோதினி
7) நாதம்
😎 நாதாந்தம்
9) சக்தி
10) வியாபினி
11) வ்யோம ரூபிணி
12) அநந்தை
13) அநாதை
14) அநாசிருகை
15) சமனை
16) உன்மனை
இன்றைய சைவத்தின் நிலை யோக பாதத்தினைப் பற்றி கற்பிப்பாரும் இல்லை, சாதகம் செய்வாரும் இல்லை! வெறுமனே கிரியை மார்க்கத்தில் சிக்கிக்கொண்டு சடங்குகள் அதிகமுள்ள ஒன்றாக இருப்பது கவலைக்குரியது!
ஆகமங்களில் யோக பாதத்தினை தொகுத்து பொருள்காணும் பணியை செய்யலாம் என்பது இந்த உலக யோக தினத்தில் உதித்த எண்ணம்!
அதற்கு மகா யோகீஸ்வரரான சிவபரம்பொருளின் ஆசி வேண்டி பிரார்த்திக்கிறோம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...