குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, January 17, 2021

சைவ சமய நூல்

 First posted in FB: https://www.facebook.com/tsumanenthiran/posts/10158141787391589

***************************************************

சைவர்களது சமய நூல் எது என்று மருத்துவர் திரு லம்போதரன் ஐயா அவர்கள் பதிவிட்டிருந்தார்!

இதைப்படித்த போது எனக்குத் தோன்றிய கருத்தினை இங்கு பதிவிட எண்ணுகிறேன்!
சைவர்கள் அல்லது பாரதீய ரிஷி கலாச்சாரம் - ஞானத்தையும், அக அனுபவத்தையும் முதன்மையாகக் கொண்ட கலாச்சாரம் - எப்போதும் எதையும் பற்றிக்கொண்டிருக்கும் அடிமைப்படுத்தும் மார்க்கத்தைப் போதிக்கவில்லை!
அதனால் எப்போதும் ஒரு நூல்தான் இறுதியான முடிவு என்று தம்மைச் சுருக்கிக்கொள்ளவில்லை!
மேலும் பிரக்ருதி இந்த இயற்கையை பரமசிவத்தை நோக்கி பரிணாமத்தில் உந்திக்கொண்டிருக்கிறது என்பதையும், அந்த உந்தலில் ஒவ்வொரு ஆன்மாவும் ஒவ்வொரு நிலையில் இருக்கீறது என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார்கள்!
உண்மையை அக உணர்வால் உணர வெளிப்படட திருஷ்டிகள் - பார்வைகள் - வேதங்கள்! வேதங்கள் ரிஷிகளின் நேரடி அக அனுபவம்!
இந்த அனுபவம் மற்றவர்களுக்கு, ஒவ்வொரு ஆன்மாவிற்கும் வாய்க்க என்ன வழி? ஆகவேதான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் வெவ்வேறு உத்திகள் தேவைப்படும் என்பதை அறிந்து அவற்றை ஏற்படுத்தினார்கள்.
இப்படி சிவத்தை நோக்கிப் போகும் வழியைக் கூறுபவை ஆகமங்கள் என்றும்! சிவத்தை நோக்கிச் செல்லுவதற்கான உத்திகள் தந்திரங்கள் - சக்தி மார்க்கம் என்றும் வகுக்கப்பட்டது!
ஆகவே சைவர்கள் - சிவத்தை நோக்கிச் செல்லும் process & techniques ஐப்பற்றியே அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்!
அவரவர் பரிபக்குவத்திற்கேற்ப ஏதோ ஒரு ஆகமமோ, அல்லது ஒரு ஆகமத்தில் சரியா, கிரியா, யோக, ஞான பாதமோ வழிகாட்டும்! இப்போது சைவத்தில் தீக்ஷா மார்க்கமும், யோக மார்க்கமும் மறைந்திவிட்டதால் யதார்த்த சைவம் அனுபவத்தில் இல்லாமல் போய்க் கொண்டிருக்கீறது என்பது எனது சிற்றறிவிற்கு தோன்றிய எண்ணங்கள்!
சைவம் பயிற்சிக்குரிய வாழ்வியல் முறையாக வர வேண்டும்! ஒவ்வொரு சாதகனின் அகப்பக்குவம் அறிந்து அதற்குத் தகுந்த சரியை, கிரியை, யோகம், ஞானம் போதிக்கப்பட்டு அதற்குரிய ஆகமங்களை அவனுக்குரிய customised நூலாக வழிகாட்டப்பட வேண்டும்! அப்போது யதார்த்த வழிகாட்டலாக இருக்கும்!
இது தற்போது சர்வ ஞானோத்தர ஆகமம் படிக்கும் போது மனதில் தோன்றிய சிந்தனை! பகிர்வது சிந்தனைக்காக விவாதத்திற்கு அல்ல!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...